பாரதியின் மன்னிப்பை கேட்டு நிபந்தனை வைக்கும் கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்த கதைக்களம்!

0
பாரதியின் மன்னிப்பை கேட்டு நிபந்தனை வைக்கும் கண்ணம்மா - 'பாரதி கண்ணம்மா' அடுத்த கதைக்களம்!
பாரதியின் மன்னிப்பை கேட்டு நிபந்தனை வைக்கும் கண்ணம்மா - 'பாரதி கண்ணம்மா' அடுத்த கதைக்களம்!
பாரதியின் மன்னிப்பை கேட்டு நிபந்தனை வைக்கும் கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ அடுத்த கதைக்களம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவை வீட்டுக்கு அழைத்து செல்ல திட்டமிடும் வேணுவிடம், பாரதி மன்னிப்பு கேட்டால் மட்டுமே வீட்டுக்குள் வருவதாக கண்ணம்மா ஒரு புதிய நிபந்தனையை வைப்பதாக அடுத்து வரும் எபிசோடுகள் ஒளிபரப்பாக இருக்கிறது.

பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குழந்தை முதல் பெரியவர்கள் வரையுள்ள ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் இந்த சீரியலை பார்க்க தவறுவது இல்லை. என்னதான் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை பற்றி சில எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்து வந்தாலும், ஒவ்வொரு வாரமும் அதிகபட்ச பார்வையாளர்களை ஈர்த்து TRP ரேட்டிங்கில் முக்கியமான இடத்தை தக்கவைத்து வருகிறது இந்த சீரியல்.

சன் டிவி ‘ரோஜா’ முதல் விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வரை – ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!

அந்த வகையில் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ எபிசோடுகளில், கண்ணம்மாவை ஏமாற்றி எப்படியாவது பாரதியுடன் சேர்த்து வைக்க வேண்டும் என வேணு திட்டமிடுகிறார். அதற்காக நெஞ்சு வலி என்று கூறி பாரதியின் மருத்துவமனையிலேயே அவர் அனுமதிக்கப்படுகிறார். பாரதியும் வந்து அவரை பரிசோதித்து பார்க்க, நெஞ்சு வலிக்கான எந்தவித அறிகுறிகளும் அவருக்கு தெரியவில்லை. என்றாலும் இது நாடகம் என யூகித்து விடுகிறார்.

இதை உறுதி செய்யும் விதத்தில் கண்ணம்மாவை பார்க்க வேண்டும் என வேணு கேட்கிறார். அதே போல கண்ணம்மாவும் வர வேணுவின் நாடகம் ரசிகர்களுக்கு அப்பட்டமாக விளங்குகிறது. அதாவது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, பாரதியும், கண்ணம்மாவும் சேர்த்து வைக்க இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் தனது கடைசி ஆசை என வேணு கூறுகிறார். இதை கேட்டதும் பாரதிக்கு கடுப்பாக, கண்ணம்மா செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார்.

இதற்கிடையே இந்த தகவலை கண்ணம்மா வெண்பாவுக்கு சொல்ல, வெண்பாவுக்கு சற்று பீதியாகிறது. அதனால் மறுபடியும் வெண்பா, பாரதி மீதான வேட்டையை தொடருவார் என தெரிகிறது. மறுபக்கத்தில் லட்சுமியும், ஹேமாவும் கூடப் பிறந்த சகோதரிகள் என்பது தெரியாமல், இருவரும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும் என பேசிக்கொண்டிருக்கின்றனர். இப்போது வேணு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு வருகிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் விஜே தீபிகா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

அங்கு, பாரதியின் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்க தயங்கும் கண்ணம்மாவை சௌந்தர்யா உள்ளே அழைக்கிறார். ஆனால் பாரதி என்னிடம் மன்னிப்பு கேட்டால் மட்டும் தான் இந்த வீட்டுக்குள் வருவதை குறித்து யோசிக்கலாம் என பிடிவாதமாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் கண்ணம்மா. எப்படி இருந்தாலும் கண்ணம்மா, பாரதியின் வீட்டுக்கு வரத் தான் போகிறார் என்பது ரசிகர்களின் கணிப்பாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!