முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்? தொடர்ந்து அவிழும் கதை முடிச்சுகள்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் தற்போது வரை வெளியாகியுள்ள எபிசோடுகள் எல்லாம் கதையின் முக்கியமான கட்டத்தை வெளிக்கொண்டு வருவதாக இருப்பதால், சீரியல் முடிவுக்கு வருகிறதா என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளது.
பாரதி கண்ணம்மா
பொதுவாக மக்கள் வரவேற்பை பெற்ற எந்தவொரு சீரியலும் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை தொடர்ந்து ஒளிபரப்பாக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஒரு வரிக் கதையை வைத்து 3 ஆண்டுகள் வரை இழுத்து செல்லும் பெருமை அந்தந்த சீரியல் இயக்குனர்களுக்கு உரித்தானது ஆகும். அந்த வகையில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு தொடரான ‘பாரதி கண்ணம்மா’ விஜய் டிவியில் கிட்டத்தட்ட 586 எபிசோடுகளாக, அதாவது 2 ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
விஜய் டிவி சீரியலில் இருந்து நான் விலகவில்லை – ரச்சிதாவின் குழப்பமான விளக்கம்!
அம்மா இல்லாமல் வளர்ந்த ஒரு பெண், நிறத்தை காரணம் காட்டி ஒதுக்கப்படுகிறார். அவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் நாயகன், நாளடைவில் அந்த பெண் மீது சந்தேகப்பட சுய மரியாதையை காத்துக்கொள்ள நினைக்கும் அவர் வீட்டை விட்டு வெளியேறுகிறார். பின்னர் நாயகன் அவரது தவறை உணர்ந்தவுடன், பிரிந்த இருவரும் ஒன்றிணைவதே ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் முக்கிய கதைக்களம் ஆகும்.
இதனுடன், சில ஸ்வாரஸ்யங்களை கூட்டும் விதமாக கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க அதனை எடுத்து சென்று பாரதியிடம் கொடுக்கிறார் அத்தை சௌந்தர்யா. இப்படி நகர்ந்து வந்த கதையில், கண்ணம்மாவுக்கு 2 குழந்தைகள் பிறந்தது தெரியவர, சீரியலில் சில முக்கியமான திருப்பங்கள் ஏற்பட இருக்கிறது. இது தவிர அஞ்சலியின் சீமந்த விழாவுக்கு வரும் கண்ணம்மா, பாரதிக்கு திருமணம் ஆகவில்லை என்பதை தெரிந்து கொள்ள, பாரதிக்கும், லட்சுமியின் அம்மா கண்ணம்மா என்பது தெரிய வந்துள்ளது.
இன்றைய “ரோஜா” சீரியல் ப்ரோமோ – அடைத்து வைத்த இடத்திலிருந்து தப்பிக்கும் செண்பகம்!
இந்த கதையில் இப்போது DNA ரிப்போர்ட் தான் வெளியே வராத ரகசியமாக இருக்கிறது. இந்த உண்மையும் பாரதிக்கு தெரிய வந்தால், அவர் கண்ணம்மாவை ஏற்றுக்கொள்வார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் தொடர்ந்து அவிழ்ந்து வரும் கதை முடிச்சுகள், அடுத்த கட்டமாக DNA ரிப்போர்ட்டில் வந்து நிற்கும் என்பதால், இத்தொடர் முடிவடைய போகிறதா என ரசிகர்களிடையே குழப்பங்கள் எழுந்துள்ளது. என்றாலும் இந்த குழப்பங்கள் வரும் வார எபிசோடுகளில் தெளிவாகும் என்பதில் சந்தேகமில்லை.