பாரதி, கண்ணம்மாவை சேர்த்து வைக்க சௌந்தர்யா & வேணுவின் திட்டம் – இன்றைய எபிசோட்!

0
பாரதி, கண்ணம்மாவை சேர்த்து வைக்க சௌந்தர்யா & வேணுவின் திட்டம் - இன்றைய எபிசோட்!
பாரதி, கண்ணம்மாவை சேர்த்து வைக்க சௌந்தர்யா & வேணுவின் திட்டம் - இன்றைய எபிசோட்!
பாரதி, கண்ணம்மாவை சேர்த்து வைக்க சௌந்தர்யா & வேணுவின் திட்டம் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க நினைத்து வேணு நெஞ்சு வலி வந்தது போல நடிக்கிறார். மேலும் கண்ணம்மாவை உடனே பார்க்க வேண்டும் என சொல்லி வர சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வேணு திடீரென நெஞ்சு வலியால் துடிக்க, சௌந்தர்யா வந்து என்னாச்சு என கேட்கிறார். வேணு வேர்த்து கொட்டுகிறது ஒரு மாதிரி இருக்கிறது என சொல்லி நெஞ்சில் கையை வைத்து துடிக்கிறார். பின் அகில் அங்கே வர அப்பாநெஞ்சு வலியால் துடிப்பதை பார்த்து மருத்துமனைக்கு அழைத்து செல்கின்றனர். அப்போது அங்கே பாரதி வந்து அப்பாவை பரிசோதனை செய்து பார்க்கிறார். எதுவும் பிரச்சனை இல்லாமல் இருப்பதை தெரிந்து கொண்ட பாரதி சின்னதா நெஞ்சுவலியாக இருக்கும் என சொல்கிறார். ஆனால் பாரதியை நம்பாமல் வேணு கத்தி கூச்சல் போடுகிறார்.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் சன் டிவி “ரோஜா” வரை – ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!

உடனே சௌந்தர்யா அகில் சந்தேகத்துடன் பார்க்கின்றனர். அப்போது வேணு வலிப்பதுப்போல் நடித்துக் கொண்டே, என்னோட ஆசை கண்ணம்மாவை நான் உடனடியாக பார்க்க வேண்டும் என சொல்கிறார். உடனே பாரதி அதுக்கு போட்ட திட்டம் தானா என நினைத்து அப்பாவுக்கு ஒண்ணுமில்லை என கண்ணம்மாவை கூப்பிட வேண்டாம் எனத் தடுக்கிறான். பின்னர் அங்கிருந்து பாரதி கிளம்ப, கண்ணம்மாவையும் பாரதியையும் சந்திக்க வைக்கதான் இப்படி நடிச்சேன் என்கிறார் வேணு. உடனே சௌந்தர்யா முன்னாடியே என்னிடம் சொல்லிருக்கலாமே என சொல்கிறார்.

மறுபக்கம் பட்டு பாவாடையில் லட்சுமி வந்து நிற்க அத்தை போலவே இருக்கிறார் என கண்ணம்மா நினைக்க குமாரும் அதையே சொல்கிறார். உடனே லட்சுமி ஆமாம் ஹேமாவை விட நான் தான் அவங்களை போல இருக்கிறேன் என சொல்ல கண்ணம்மா நீ உன் அப்பாவின் அம்மா போல இருக்கிறாய் என சொல்கிறார். பின்னர் லட்சுமி விளையாட கிளம்ப, குமாரிடம் இதுபோல் சொல்ல வேண்டாம் என்கிறாள் கண்ணம்மா. அப்போது போன் செய்யும் சௌந்தர்யா, மாமாவுக்கு ஹார்ட் அட்டாக் உடனே வா என சொல்ல, பதறியவாறு கிளம்புகிறாள் கண்ணம்மா.

அடுத்ததாக, வெண்பாவிடம் சாந்தி கண்ணம்மாகிட்ட உங்கள நீங்க எப்படி கூப்பிட சொன்னீங்க என கேட்க, மிஸஸ் வெண்பா பாரதினு கூப்பிட சொன்னேன் என்கிறார். கண்ணம்மா கூப்பிட்டாளா என சாந்தி கேட்க, அவ கூப்பிடல ஆனா பாரதிய டைவர்ஸ் பண்ண சொல்லிருக்கேன் என்கிறாள். ஆனால் சாந்தி, உங்கள பாரதியோட மனைவினு கூப்பிட்டா தான் நல்லா இருக்கும், உடனே கூப்பிட சொல்லுங்க என்கிறாள். உடனே வெண்பா போன் செய்ய கட் பண்ணுகிறாள் கண்ணம்மா. வெண்பா மீண்டும் கால் பண்ண, போனை எடுக்கும் கண்ணம்மா, அதான் கட் பண்றேனே அறிவில்லையா எனத் திட்டி போனை வைக்கிறாள்.

விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ 8 வின்னர் ஸ்ரீதர் சேனா செய்த காரியம் – மக்களுக்கு நன்றி கூறி பதிவு!

பின் அசிங்கப்பட்டதை சாந்தியிடம் காட்டிக்கொள்ளாமல் சமாளிக்கிறாள் வெண்பா. ஆனால் சாந்தி, கண்ணம்மா நல்லா திட்டிருப்பா என சந்தேகமாக நக்கலாக சிரிக்கிறாள். பின் மருத்துவமனையில் வேணு பசிக்கிது என சொல்ல அகில் முட்டை போண்டா வாங்கி வந்து சாப்பிடுகிறார். அப்போது பாரதி அங்கே வர அப்பாக்கு இப்படி வலிக்குது நீங்க முட்டை போண்டா சாப்பிடுறீங்க என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அப்போது பார்த்து அங்கே கண்ணம்மாவும் வர இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!