கண்ணம்மா உடன் சேர்ந்து வாழ நினைக்கும் பாரதி, பதட்டத்தில் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதிக்கு திடீரென கண்ணம்மா தப்பு செய்திருக்கமாட்டாள் என்ற எண்ணம் வருகிறது. மறுபக்கம் அஞ்சலி அகில் பரிகாரம் செய்ய கோவிலுக்கு செல்கின்றனர்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” எபிசோடில், பாரதி ஹேமாவிடம் போன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நோயாளியின் தங்கை ஒருவரிடம் பாரதி இந்த சின்ன வயதில் உங்க அண்ணனுக்கு ஹார்ட் அட்டாக் வர என்ன காரணம் என கேட்கிறார். அவன் நன்றாக தான் இருந்தான் டாக்டர், லவ் பண்ணி திருமணம் செய்து கொண்டான் இருவரையும் போல ஜோடி யாரும் பாத்திருக்கமாட்டாங்க, ஆனால் எப்போது அண்ணி மாசமானங்களோ இது என்னுடைய குழந்தை இல்லை என சொல்லியே சந்தேகம் வந்துவிட்டது.
சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ ரக்ஷா – அதுவும் இந்த சேனலில்!
நாங்க எல்லாரும் அண்ணிக்கு தான் சப்போர்ட் ஆனால் இவன் எவ்வளவு சொல்லியும் கேட்பதாக இல்லை. அப்போது இருந்து இவனுக்கு வாழ்க்கை நரகமாகிவிட்டது.நீங்க கொஞ்சம் கவுன்சிலிங் கொடுங்க என சொல்ல நான் அந்த டாக்டர் இல்லை என சொல்லி மருந்து எழுதி கொடுத்து அனுப்புகிறார். பின் பாரதி கண்ணம்மா பற்றி நின்னைத்து பார்க்கிறார் . கண்ணம்மாவின் ஒழுக்கத்தை பற்றி சௌந்தர்யா சொன்னதையும் வேணு சொன்னதையும் கண்ணம்மாவின் சித்தி சொன்னதையும் நினைத்து பார்க்கிறார்.
மறு பக்கம் அஞ்சலியும் அகிலும் கோவிலுக்கு செல்கிறார். கண்டிப்பா இந்த பரிகாரத்தை செய்ய வேண்டுமா என கேட்க ஆமாம் என அஞ்சலி சொல்கிறார். பின் பூசாரியிடம் ஜோஸ்யக்கார அம்மா பரிகாரம் சொல்லி அனுப்பினார்கள் என கேட்க, பூசாரி கடினமான பரிகாரம் நீங்க செய்வீர்களா என கேட்கிறார். உடனே அகில் நான் செய்யலாமா என கேட்க நீங்க அவங்க கணவர் தான செய்யலாம் என சொல்கிறார். அம்மி கல்லை கழுத்தில் கட்டிக் கொண்டு கோவிலை முட்டி போட்டுக் கொண்டு வர வேண்டும் என சொல்ல அகில் செய்கிறார்.
சன் டிவி ‘ரோஜா’ சீரியல் நடிகைக்கு கோலாகலமாக வளைகாப்பு விழா – ரசிகர்கள் வாழ்த்து!
பாரதி கண்ணம்மா பற்றி நினைக்கும் போது வெண்பா அங்கே வருகிறார். என்னாச்சு பாரதி என கேட்க என் மனதில் தோணுறதை வெளிப்படையாக சொல்கிறேன் என சொல்கிறார். கண்ணம்மா ஏன் தப்பே செய்திருக்க கூடாது. இந்த 8 வருசமாக அவள் உழைத்து சாப்பிடுகிறாள், தப்பு செய்தவள் இப்படியா இருப்பாள் என்னை தவிர எல்லாரும் கண்ணம்மாவைநம்புகிறார்கள் அப்போ அவள் எப்படி தப்பு செய்திருப்பாள். என்னிடம் இத்தனை வருடத்தில் 100 ரூபாய் கூட வாங்கியதில்லை.
அம்மா செய்த உதவிகளை கூட அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தனை வருடமாக ஒரு பொம்பள புள்ளையை வைத்து தனியாக கஷ்டப்பட்டு வாழ்கிறாள் தப்பு செய்தவள் இப்படி இருக்கமாட்டாள் என சொல்கிறார். இத்தனை வருடத்தில் பல முறை அவளை நான் பாத்திருக்கிறேன் ஒரு தடவை கூட அவ கண்ணில் குற்ற உணர்ச்சியை நான் பார்த்ததில்லை என சொல்ல வெண்பா இப்படியே விட்டால் கண்ணம்மா உடன் சேர்ந்து வாழ தொடங்கி விடுவான் என நினைத்து பார்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.