இரட்டை குழந்தை பற்றி சொல்லி கண்ணம்மாவை பிளாக்மெயில் செய்யும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
இரட்டை குழந்தை பற்றி சொல்லி கண்ணம்மாவை பிளாக்மெயில் செய்யும் வெண்பா - இன்றைய
இரட்டை குழந்தை பற்றி சொல்லி கண்ணம்மாவை பிளாக்மெயில் செய்யும் வெண்பா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
இரட்டை குழந்தை பற்றி சொல்லி கண்ணம்மாவை பிளாக்மெயில் செய்யும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பாவை ரோட்டில் பார்த்த கண்ணம்மா வளைகாப்பு நிகழ்ச்சியில் அவர் அவமானப்பட்டத்தை நினைத்து கிண்டல் செய்கிறார். பின்னர் வெண்பா இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை பற்றி எனக்கு தெரியும் என கண்ணம்மாவை பிளாக்மெயில் செய்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது வெண்பாவின் கார் வருகிறது. அதை பார்த்த கண்ணம்மா வளைகாப்பு நிகழ்ச்சியில் பாரதியுடன் சேர்ந்து இருந்து அசிங்கப்பட்டது ஞாபகம் வருகிறது. உடனே இன்னைக்கு உனக்கு இருக்கு வெண்பா என சொல்லி காரை நிறுத்தி இறங்க சொல்கிறார் கண்ணம்மா. அதன் பின் யார் யாரோ எத்தனை பொய் சொல்லிருக்காங்க ஆனால் இவர் தான் என் புருஷன் இதான் என் புள்ளை என சொல்லுவாங்களா என கேட்கிறார்.

அந்த ஆளு தான் என்னை வெறுப்பேத்த அப்படி சொல்கிறார். உனக்கு வெக்கம் மானம் இல்ல என கேட்கிறார். உன் வயசு என்ன எதற்கு அந்த ஆளு பின்னாடி சுத்துற என கேட்க, வாய மூடு அவன் என் பிரண்ட் என வெண்பா சொல்ல, இவ்வளவு நான் புருஷன்னு சொன்ன என கண்ணம்மா கேட்டு வெண்பா நெத்தியில் அடிக்கிறார். ஹே அடிக்காத, உன் இரண்டாவது குழந்தை பற்றி சொல்ல வேண்டாமா என வெண்பா கேட்க கண்ணம்மா பதட்டமடைகிறார்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,658 பேருக்கு கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 29 – சுகாதாரத்துறை அறிக்கை!

நீ கிளம்பு நான் எதுவும் சொல்லவில்லை என வெண்பா சொல்ல, ப்ளீஸ் வெண்பா என் இரண்டாவது குழந்தை பற்றி நீ எதோ சொன்ன ப்ளீஸ் சொல்லு என கேட்கிறார். உனக்கு இரண்டாவது குழந்தை உண்மை தெரியுமா என வெண்பா நடிக்க, கண்ணம்மா கெஞ்ச சொல்லி நடிக்கிறார். அப்போ நான் சொல்லும் இடத்திற்கு கண்ணை கட்டிக் கொண்டு வா என சொல்ல, கண்ணம்மாவும் வருகிறார். ஒரு கடற்கரை பகுதிக்கு அவரை அழைத்து செல்கிறார் வெண்பா.

அங்கையும் வெண்பா சொல்லாமல் செல்ல, கண்ணம்மா வெண்பா பின்னால் கெஞ்சிக் கொண்டே வருகிறார். ஒரு பொம்பளையை அழைத்து இவர் யார் என தெரியுதா என கேட்கிறார். அந்த பொண்ணு மாதிரி அப்படியே இருக்காங்க என பொய் சொல்லி சமாளிக்கிறார். என் பொண்ணு எங்கே என கேட்டு வெண்பா பின்னாடி கண்ணம்மா அழுது கொண்டே வர, உன் பொண்ணை பிச்சை எடுக்க விட்டுருக்கேன் என வெண்பா சொல்கிறார். உடனே கண்ணம்மா வெண்பா கழுத்தை நெரிக்கிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணனுக்கு புது ஜோடி – ரசிகர்கள் விமர்சனம்!

சரி சரி கோவப்படாத என வெண்பா சொல்ல, உனக்கு எப்படி இரட்டை குழந்தைகள் பிறந்தது தெரியும் என கண்ணம்மா கேட்கிறார். நான் அங்கே தான இருந்தேன் துர்கா என்னை கூட்டிக் கொண்டு போனால் அவன் எல்லாம் ஒரு ஆளா என கேட்கிறார். என் இன்னொரு குழந்தை எங்கே என சொல்லு வெண்பா என கெஞ்ச, இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!