அஞ்சலிக்கு நன்றி சொல்லும் குடும்பத்தினர், கண்ணம்மாவுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா எவ்வளவோ கேட்டும் சௌந்தர்யா உண்மையை சொல்ல மறுக்கிறார். பின்னர் அஞ்சலி உண்மையை சொன்னதற்கு அகிலும் சௌந்தர்யாவும் நன்றி தெரிவிக்கின்றனர். பின்னர் பாரதியை கண்ணம்மா பக்கத்தில் அமர்ந்து சாப்பிட திட்டமிடுகின்றனர்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா என்னுடைய மகள் தான் நீங்க தான் ஏமாத்துறிங்க என கண்ணம்மா கோபத்துடன் கேட்க சௌந்தர்யா இல்லை என்று சொல்லி சமாளிக்கிறார். அப்போ எப்படி லட்சுமிக்கும் ஹேமாவிற்கும் ஒரே நாள் பிறந்தநாள் வரும் என கேட்க, அவளை தத்தெடுக்கும் போது அவளின் பிறந்தநாள் கேட்டாங்க நான் தான் லட்சுமி பிறந்த நாள் கொடுத்தேன் என சொல்கிறார். நீ நம்பவில்லை என்றால் நான் தத்தெடுத்த சான்றிதழ் காண்பிக்கிறேன் என சொல்கிறார்.
ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியலில் இருந்து விலகிய ப்ரியா ராமன்? ரசிகர்கள் அதிர்ச்சி!
உடனே அங்கு பாரதி வர உள்ளே உங்களை கூப்பிடுகிறார்கள் என சொல்கிறார். சௌந்தர்யா அங்கிருந்து கிளம்ப, கண்ணம்மா அத்தை சொல்வது நம்ப முடியவில்லை அப்போ என் இரண்டாவது குழந்தை எங்கே என நினைத்து பார்க்கிறார். பின்னர் வெண்பா கோபத்துடன் சாப்பிடாமல் அங்கிருந்து கிளம்ப, அஞ்சலி நான் வேண்டும் என செய்யவில்லை சாப்பிட்டு போ என சொல்கிறார். வெண்பா கேட்காமல் இருக்க, அங்கே பாரதி வருகிறார். என்னாச்சு என கேட்க, சாப்பிடாம கிளம்புகிறார். என அஞ்சலி சொல்கிறார்.
பின் பாரதி எனக்காக இரு என சொல்கிறார். அஞ்சலி தனது ரூமில் இருக்க அவர் அம்மா அவருக்கு சுத்தி போடுகிறார். அப்போது வெண்பா பற்றி கேட்கிறார். பின்னர் அகில் சௌந்தர்யா அங்கே வந்து வெண்பா பற்றிய உண்மையை கண்ணம்மாவிற்கு தெரியவைத்ததற்கு நன்றி தெரிவிக்கின்றனர். லட்சுமி கீழே இறங்கி வர பாரதியை பார்த்து சாப்பிடுவோமா என கேட்கிறார். பாரதி அவளிடம் கோவப்பட, அவள் வருத்தப்படுகிறாள்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ போட்டியாளர்கள் ஒரு நாள் சம்பளம் – CWC பிரபலம் பேட்டி!
உடனே பாரதி குழந்தையிடம் கோவப்பட வேண்டாம் என நினைத்து சாப்பிடுவோம் சேர்ந்து என கூட்டி செல்கிறார். ஹேமா ஒரு பக்கம் கண்ணம்மாவை சாப்பிட அழைத்து வருகிறார். ஹேமாவும் லட்சுமியும் அந்த பக்கம் உக்கார கண்ணம்மாவும் பாரதியும் அருகில் அமரும் நிலை ஏற்பட்டது. உடனே பாரதி அங்கிருந்து எந்திரிக்க சௌந்தர்யா அஞ்சலி அங்கே வந்து பாரதியை அமர வைக்க திட்டமிடுகின்றனர். உடனே பாரதி வேறு வழி இல்லாமல் அமருகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.