வெண்பாவிற்கும் பாரதிக்கும் திருமணம் ஆகாத உண்மையை சொல்லும் அஞ்சலி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
வெண்பாவிற்கும் பாரதிக்கும் திருமணம் ஆகாத உண்மையை சொல்லும் அஞ்சலி - இன்றைய
வெண்பாவிற்கும் பாரதிக்கும் திருமணம் ஆகாத உண்மையை சொல்லும் அஞ்சலி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
வெண்பாவிற்கும் பாரதிக்கும் திருமணம் ஆகாத உண்மையை சொல்லும் அஞ்சலி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா அழகாய் இருக்கிறாய் என சொல்லி சொல்லி பாரதி, கண்ணம்மாவை வெறுப்பேத்துகிறார். கண்ணம்மா சௌந்தர்யாவிடம் பேச நினைக்க அவர் தப்பித்து செல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பாவிற்கும் பாரதிக்கும் இடையே கல்யாணம் நடந்தது போல காட்டிக் கொண்டு கண்ணம்மாவை வெறுப்பேத்துகின்றனர். காஸ் ஆப் செய்துவிட்டிய, வீட்டை பூட்டிவிட்டிய என பாரதி வெண்பாவை கேட்கிறார். அதை பார்த்து கண்ணம்மா வெறுப்பாகிறார். இந்த சேலையில் செம அழகாய் இருக்க தெரியுமா என பாரதி சொல்ல, இப்பவே 3 தடவை சொல்லிட்ட தெரியுமா என வெண்பா வெட்கபட்டுக் கொண்டே சொல்கிறார்.

பின்னர் கண்ணம்மா கோவப்பட்டு அங்கிருந்து கிளம்புகிறார். வெளியே லட்சுமியும், ஹேமாவும் விளையாடிக் கொண்டிருக்க தூரத்தில் இருந்து பார்த்த கண்ணம்மா ஹேமாவை பார்த்தால் இனம் புரியாத உணர்வு வருகிறதே, லட்சுமியை பார்த்தால் என்ன உணர்வு வருமோ அது வருகிறதே என நினைத்து பார்க்கிறார். ஒருவேளை ஹேமா தான் நம்ம குழந்தையா இருக்குமோ என கண்ணம்மா நினைக்கிறார். இது பற்றி அத்தைக்கு கண்டிப்பாக தெரியும் என நினைத்துக் கொண்டு இருக்கும் போது, சௌந்தர்யா அங்கே வருகிறார்.

விஜய் டிவி ‘பிக்பாஸ் ஜோடிகள்’ அனிதா சம்பத் எடுத்த சூப்பர் முடிவு – ரசிகர்கள் பாராட்டு!

அதை பார்த்த கண்ணம்மா சௌந்தர்யா முன்னால் நிற்கிறார். ஆனால் சௌந்தர்யா யாரோ என்னை கூப்பிடுகின்றனர் என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். பின்னர் சௌந்தர்யா கண்ணம்மாவிடம் இருந்து எப்படி தப்பிச்சு செல்வது என திட்டமிடுகின்றனர். அப்போது ஹேமாவும், லட்சுமியும் அஞ்சலியை பார்க்க வருகின்றனர்.லட்சுமியை பார்த்து உன் அம்மா எங்கே என வேணு கேட்கிறார். அதோ அங்கே இருக்காங்க என சொல்ல போய் கூட்டிக் கொண்டு வா என வேணு சொல்கிறார்.

அப்போது பாரதி அழைத்து இனிமேல் சமையல் அம்மாவா என கேட்கிறார். எப்போதும் இனி அம்மா தான் கூப்பிட வேண்டும் என லட்சுமி சொல்கிறார். கண்ணம்மாவை அழைத்து வந்து நிற்க, பாரதியும் வெண்பாவும் செல்பி எடுத்து கண்ணம்மாவை வெறுப்பேத்துகின்றனர். அப்போது அஞ்சலிக்கு என்ன குழந்தை வேண்டும் என கேட்க , உடனே வெண்பா குறுக்கிட்டு ஏற்கனவே பெண் குழந்தை இருக்கா அதுனால அஞ்சலிக்கு ஆண் குழந்தை தான் வேண்டும் என வெண்பா சொல்கிறார்.

கண்ணனை மீண்டும் ஏற்றுக் கொண்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

அதை கேட்டு அகில் கோபப்படுகிறார். அஞ்சலி உனக்கும் பாரதிக்கும் கல்யாணம் ஆன மாதிரி தெரிந்து கொள்ள வேண்டும் அதுனால தான இப்படி செய்கிறாய் என நினைத்து கொள்கிறார். அதை கேட்டு கண்ணம்மா கோவப்பட்டு அங்கிருந்து செல்ல சண்முகம் பின்னால் சென்று சமாதானம் செய்கிறார். உடனே அஞ்சலிக்கு வளைகாப்பு சடங்கு செய்யும் பொருள் வாங்கி வாங்க என கண்ணம்மா காசு கொடுக்கிறார். அஞ்சலிக்கு சீமந்தம் தொடங்க அஞ்சலிக்கு பெரியவர்கள் முதல் வளைகாப்பு செய்கின்றனர்.

பின்னர் சௌந்தர்யா குடும்பத்துடன் சீர் கொடுக்க அவர்களுடன் வெண்பா சேர்ந்து கொள்கிறார். பின்னர் நன்றாக குழந்தை பிறக்க வேண்டும் என வாழ்த்துகிறார். எல்லாரும் சந்தோசமாக இருங்கள் ஆனால் அஞ்சலி சீக்கரம் சாக போகிறாள் என வெண்பா நினைத்துக் கொள்கிறார். பாரதியை வளையல் போட அழைக்க வெண்பாவும் வருகிறார். உடனே இவ எதுக்கு வருகிறாள் என நினைத்து அஞ்சலி, திருமணம் ஆகாதவர்கள் ஆசீர்வாதம் செய்யலாமா என கேட்கிறார்.

கலர்ஸ் தமிழ் சேனல் அம்மன் சீரியலில் களமிறங்கும் Mr.சென்னை பிரபலம் – அவரே வெளியிட்ட பதிவு!

யார் வேணும்னாலும் பண்ணலாம் என கேட்க, எல்லாரும் பண்ணலாம் என அஞ்சலி அம்மா சொல்கிறார். இதை ஏன் நீ கேட்கிறாய் என அஞ்சலி அம்மா கேட்க, இதோ நிற்கிறாங்களே வெண்பா அவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையே என அஞ்சலி சொல்கிறார். அதை கேட்ட வெண்பாவும், கண்ணம்மாவும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!