பாட்டியிடம் கேள்விகளை கேட்கும் லட்சுமி, பதில் சொல்ல முடியாமல் வருத்தப்படும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
பாட்டியிடம் கேள்விகளை கேட்கும் லட்சுமி, பதில் சொல்ல முடியாமல் வருத்தப்படும் சௌந்தர்யா - இன்றைய
பாட்டியிடம் கேள்விகளை கேட்கும் லட்சுமி, பதில் சொல்ல முடியாமல் வருத்தப்படும் சௌந்தர்யா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
பாட்டியிடம் கேள்விகளை கேட்கும் லட்சுமி, பதில் சொல்ல முடியாமல் வருத்தப்படும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், லக்ஷ்மிக்கு எல்லா உண்மையும் தெரிந்ததை நினைத்து சௌந்தர்யா அதிர்ச்சி அடைகிறார். பின் லட்சுமி விடை இல்லாத பல கேள்விகளை கேட்கிறார். கண்ணம்மாவும் சௌந்தர்யாவும் லக்ஷ்மியை சமாதானம் செய்கின்றனர்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமிக்கு எல்லா உண்மையும் தெரியும் என அவள் எப்போது டாக்டர் அப்பா என கூப்பிட தொடங்கினாலோ அப்பவே எனக்கு சந்தேகம் இருக்கிறது என சொல்கிறார். அன்னைக்கு பாரதியிடம் எல்லா உண்மையும் சொல்ல வந்தாய் அப்பவே லட்சுமி வந்திருக்காள் சிசிடிவி கேமராவில் பார்த்தேன் என சொல்ல லட்சுமி அழுகிறார். எல்லாம் தெரிந்து கொண்டு தான் பெயர் பலகையை எடுத்துக் கொண்டு வந்தாயா எல்லாம் தெரிந்தும் ஏன் என்னிடம் சொல்லவில்லை என கண்ணம்மா கேட்க நீ சொன்னியா அம்மா என கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

விவரம் தெரிந்த நாள் முதல் எத்தனை முறை நான் அப்பா எங்கே என கேட்கிறேன் ஆனால் நீ சொல்லவே இல்லை. குமார் அண்ணா தங்கச்சி நிகழ்ச்சியில் ஒரு பெண் எனக்கு அப்பா பெயர் தெரியாது என சொல்ல எனக்கு கஷ்டமாக இருந்தது. உன் பிறந்தநாளுக்கு அப்பா வருவார் என சொன்னாய் ஆனால் வரவே இல்லை ஏன் என்னிடம் சொல்லாமல் இருந்தாய் என கேட்க, கண்ணம்மா பாரதி சொன்னதை நினைத்து பார்க்கிறார். அப்போது சௌந்தர்யா அவனுக்கு உன் அம்மாவை பிடிக்காது அதனால் தான் சொல்லவில்லை என சொல்ல நீங்களாவது சொல்லிருக்கலாமே என கேட்கிறார்.

நான் தப்பு செய்துவிட்டேன் லட்சுமி என சௌந்தர்யா வருத்தப்படுகிறார். லட்சுமி எனக்கு அப்பா வேண்டும். டாக்டர் அப்பா தான் என்னுடைய அப்பா என ஊருக்கே சொல்ல வேண்டும். அவருடைய கையை பிடித்துக் கொண்டு ஊரெல்லாம் சுற்ற வேண்டும் அது தான் என்னுடைய ஆசை என சொல்கிறார். சௌந்தர்யா அதெல்லாம் நடக்கும் ஆனால் அதுவரை நான் யாரிடமும் உண்மை தெரியும் என சொல்லமாட்டேன் என சொல்கிறார். பின் அஞ்சலி அகில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அஞ்சலி லட்சுமி எல்லா உண்மையையும் தெரிந்து எப்படி அமைதியாக இருந்தால் என கேட்கிறார்.

சென்னையின் இப்பகுதியில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் கிடையாது – மாநகராட்சி அறிவிப்பு!

அகில் எல்லா உண்மையும் தெரிந்து கொண்டு எப்படி வெளியே சொல்லாமல் இருந்தாள் என தெரியவில்லை என சொல்கிறார். பின் அஞ்சலி இந்த சிறு வயதில் எப்படி பொறுப்பாக இருக்கிறாள் என அதிர்ச்சியாக இருக்கிறது என சொல்கிறார். சௌந்தர்யாவிடம் லட்சுமி பல கேள்விகளை கேட்கிறார். என் அம்மாவை ஏன் வெளியே விட்டிங்க ஏன் வேலை செய்ய விட்டீர்கள் என கேட்கிறார். உங்க அம்மா ரொம்ப கஷ்டப்பட்டால் பல இடங்களில் தேடி அலைந்தால் அவளுக்கு நாங்க உதவி செய்தலும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என சொல்கிறார்.

உங்க எல்லாருக்கும் அம்மாவை மிகவும் பிடித்துள்ளது. ஆனால் அப்பாவிற்கு ஏன் அம்மாவை பிடிக்கவில்லை என கேட்க சௌந்தர்யா அழுகிறார். பின் அம்மாவிடம் இது பற்றி கேட்டாலும் அவர் அழ தான் செய்வார். ஒருவேளை இதை சின்ன குழந்தைகளிடம் சொல்ல முடியாத விஷயமா என கேட்கிறார். பின் உன் அம்மாவை வெளியே அனுப்பி நான் தப்பு செய்துவிட்டேன் என சௌந்தர்யா அழுகிறார். பின் கண்ணம்மா டீ கொண்டு வர செல்ல, அப்போது லட்சுமி அம்மா அப்பா ஏன் விவாகரத்து வாங்க இருக்கிறார்கள் என கேட்கிறார். அப்போது லட்சுமி உனக்கு எப்படி தெரியும் என கேட்க அன்னைக்கு மருத்துவமனையில் பேசிக் கொண்டிருந்தார்கள் என சொல்கிறார்.

இத்தனை வருஷம் பிரிந்து தான் இருந்தார்கள் ஆனால் இப்போது ஏன் விவாகரத்து வாங்க இருக்கிறார்கள் என கேட்கிறார். சௌந்தர்யா இன்னும் உனக்கு என்ன உண்மை எல்லாம் தெரியும் என கேட்கிறார். பின் கண்ணம்மா லட்சுமி சௌந்தர்யாவிடம் ஒரு கேள்வி கேட்கிறார். டாக்டர் அப்பா என்னுடைய அப்பா இது என்னுடைய அம்மா அப்போ ஹேமா யார் என கேட்க சௌந்தர்யா எல்லா கேள்விக்கும் சீக்கரம் பதில் சொல்கிறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!