வெற்றிகரமாக முடிந்த சக்தியின் ஆப்ரேசன், கண்ணம்மாவை புகழ்ந்த பாரதி – “பாரதி கண்ணம்மா” இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் சக்திக்கு ஆப்ரேசன் செய்ய முதலில் சில சிக்கல் வருகிறது. ஆனால் அதன் பின் பாரதி நல்லபடியாக ஆப்ரேசன் செய்து முடிக்கிறார். அதனால் பாரதிக்கு பாராட்டுக்கள் கிடைக்கிறது. இந்நிலையில் பாரதி கண்ணம்மாவிற்கு தான் முழு பாராட்டுகளும் போக வேண்டும் என பெருமையாக சொல்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், சக்தி ஆப்ரேசன் தொடங்க சக்தியின் அப்பா அம்மா வெளியே பதட்டத்தில் இருக்கின்றனர். அப்போது கண்ணம்மா வர எல்லாம் நல்லபடியாக நடக்குமா சக்தி வந்துவிடுவாளா என வருத்தப்பட்டு பேசுகின்றனர். அப்போது கண்ணம்மா ஆப்ரேசன் நல்ல படியாக நடக்கும் நீங்க கவலைப்படாமல் இருங்க என சொல்கிறார். அப்போது நர்ஸ் உள்ளே இருந்து வர கண்ணம்மா ஆப்ரேசன் நல்லபடியாக முடிந்துவிட்டதா என கேட்கிறார். ஆனால் நர்ஸ் ரொம்ப கஷ்டமாக தான் இருக்கிறது. நாம பட்ட கஷ்டம் எல்லாம் வீணாகிவிடும் போல என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
அதை கேட்டு சக்தியின் பெற்றோர் அழ தொடங்குகின்றனர். பின் பாரதி பல முயற்சிகளை செய்து ஆப்ரேசன் செய்கிறார். மக்கள் பலர் கடவுளிடம் வேண்டி கொள்கின்றனர். சௌந்தர்யாவும் ஆப்ரேசன் நல்லபடியாக நடக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொள்கின்றனர். பின் பத்திரிகையாளர்கள் டாக்டர் வந்து சொல்லும் வரை சக்தி நிலைமை எப்படி இருக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம் என சொல்கிறார்கள். அப்போது பாரதி ஆபரேஷனை நல்ல படியாக முடித்துவிடுகின்றனர். அப்போது வெளியே வந்த பாரதி காத்திருந்த பத்திர்கையாளர்களிடம் எல்லாம் நல்லபடியாக முடிந்தது என சொல்கின்றனர்.
அமீருடன் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆட பயப்படும் பாவ்னி – ரசிகர்கள் ஷாக்!
பின் சக்தி எப்படி இருக்காங்க என கேள்வி கேட்க எல்லாம் நல்லபடியாக முடிந்தது என பாரதி சொல்கிறார். அடுத்து பேசிய டாக்டர் ஒருவர் இந்த வேலையை சரியாக செய்து முடிக்க பாரதி தான் காரணம் அவருடைய முழு உழைப்பையும் போட்டு இதை வெற்றிகரமாக செய்து இருக்கிறார். முழுக்க முழுக்க பாராட்டுக்கள் அவருக்கு செல்ல வேண்டும் என சொல்ல ஆனால் பாரதி கண்ணம்மா செய்ததை நினைத்து பார்க்கிறார். அப்போது மைக் வாங்கி பேசிய அவர் இது நான் மட்டும் செய்யவில்லை முழுக்க முழுக்க எங்க டீம் தான் காரணம், அதுவும் எல்லா திட்டங்களையும் சரியாக செய்த எங்க அட்மின் தான் காரணம் என சொல்கிறார். அதை கேட்டு கண்ணம்மா சந்தோசப்படுகிறார். சௌந்தர்யாவும் கண்ணம்மாவை பாரதி புகழ்ந்ததை நினைத்து சந்தோசப்படுகிறார்.