ஆப்ரேஷனை தொடங்கிய பாரதி, திடீரென மாறிய வானிலை – “பாரதி கண்ணம்மா” இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி தன்னுடைய முழு பங்களிப்பையும் கொடுத்து ஆப்ரேசன் செய்ய தயாராகுகிறார். அப்போது இயற்கை வானிலை மாற கண்ணம்மாவிற்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறது. மக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அனைவரும் ஆப்ரேசன் நல்லபடியாக நடக்குமா என நினைத்து பதட்டமாக இருக்கின்றனர்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி ஆப்ரேசன் செய்ய போக அப்போது சக்தியின் நியாபகம் வருகிறது. பாரதி ஆப்ரேசன் செய்ய தொடங்க பத்திரிகையாளர்கள் நேரலையில் ஒளிபரப்பி வருகின்றனர். சௌந்தர்யா மற்றும் குடும்பத்தினர் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். பின் பாரதி ஆபரேஷனை தொடங்குகிறார். அப்போது பத்திரிகையாளர்கள் தமிழகத்தில் பல இடங்களில் சக்திக்காக பிராத்தனைகள் செய்கின்றனர். பின் பத்திரிகையாளர்கள் இன்று மழை வரும் என சொன்னார்கள் ஆனால் என்ன இப்படி இருக்கிறது என கேட்கின்றனர்.
TN Job “FB Group” Join Now
அப்போது வானம் இருண்டு கொண்டு வர பயங்கரமாக மழை பெய்கிறது. அனைவரும் அதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். கண்ணம்மாவிற்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறது. வானிலை சரி இல்லாமல் இருப்பதாக செய்திகளில் சொல்வதை பார்த்து விக்ரம் உள்ளிட்ட பலர் அதிர்ச்சி அடைகின்றனர். பின் கண்ணம்மா மழை நிற்க வேண்டும் என கடவுளை வேண்டிக் கொள்கின்றனர். பத்திரிகையாளர்கள் என்ன செய்ய போகிறார்கள் என குழப்பத்தில் இருக்கின்றனர்.
கணேஷிடம் இது பற்றி கேட்க எவ்வளவு மழை பெய்தாலும் காற்று அடித்தாலும் கண்டிப்பாக இதயத்தை கொண்டு செல்வோம் என சொல்கிறார். பின் பயங்கரமாக மழை பெய்வதால் விக்ரம் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். வெண்பாவின் அம்மாவும் இந்த செய்தியை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பாரதி ஆப்ரேசன் அறையில் இருக்க நர்ஸ் வந்து பாரதியிடம் வெளியே சூறாவளி காற்று அடிப்பதாக சொல்கிறார். பாரதி முதலில் ஆப்ரேஷனை பாப்போம் என நினைக்கிறார்.
ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாளில் ராதிகாவிடம் மாட்டிக் கொள்ளப் போகும் கோபி – ப்ரோமோ ரிலீஸ்!
கணேஷ் கண்ணம்மாவிடம் நீ தான் சாமியை வேண்டி மழை பெய்ய வாய்தாய் என அவமானப்படுத்துவது போல பேசுகிறார். பின் சாப்பர் கொடுப்பவர் போன் செய்து விழுப்புரத்தில் இருந்து சாப்பர் கொண்டு வர முடியாது என சொல்கிறார். கணேஷ் எவ்வளவோ கெஞ்சி பார்க்க ஆனால் அவர் முடியாது என சொல்லிவிடுகிறார். வேறு எதாவது ஏற்பாடு செய்து இதயத்தை கொண்டு செல்ல வழி பண்ணுங்க என சொல்கிறார். மக்கள் அனைவரும் இதயத்தை எப்படி கொண்டு செல்வார்கள் என ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
லட்சுமி ஹேமா என்ன ஆகும் என பதட்டமாக இருக்க சௌந்தர்யா சமையல் அம்மா அங்கே தான இருக்கிறார் அதனால் எதுவும் ஆகாது என சொல்கிறார். அகில் எப்படி இனிமேல் போலீசிடம் அனுமதி வாங்கி எப்படி கொண்டுவருவார்கள் என கேட்கிறார். பின் கணேஷ் பாரதியை அழைத்து சாப்பர் கொண்டு செல்ல முடியாது என சொல்ல பாரதி இப்படி சொன்னால் என்ன செய்வது என கேட்கிறார். அப்போது பாரதி விக்ரமிடம் கேளுங்கள் என சொல்கிறார். விக்ரமிடம் கணேஷ் விவரத்தை சொல்ல, கணேஷ் ரோடு வழியாக போவது தான் ஒரே வழி என சொல்கிறார். அதற்கான ஏற்பாடு எல்லாம் முன்னதாகவே செய்திருக்க வேண்டும் என விக்ரம் கோவமாக போனை வைக்கிறார்.