ஆப்ரேஷனை நினைத்து பதட்டமாக இருக்கும் பாரதி, ஹேமா வீட்டிற்கு வந்த லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
ஆப்ரேஷனை நினைத்து பதட்டமாக இருக்கும் பாரதி, ஹேமா வீட்டிற்கு வந்த லட்சுமி - இன்றைய
ஆப்ரேஷனை நினைத்து பதட்டமாக இருக்கும் பாரதி, ஹேமா வீட்டிற்கு வந்த லட்சுமி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
ஆப்ரேஷனை நினைத்து பதட்டமாக இருக்கும் பாரதி, ஹேமா வீட்டிற்கு வந்த லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி ஆப்ரேஷனுக்கு தயாராகி வர சக்தி மிகவும் தைரியமாக பேசுகிறார். பின் பாரதி பதட்டமாக இருப்பதாக சௌந்தர்யாவிடம் சொல்கிறார். கண்ணம்மா மருத்துவமனை வேலையால் லக்ஷ்மியை ஹேமா வீட்டில் தங்க வைக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மாவிடம் லட்சுமி டாக்டர் அப்பா ஆப்ரேசன் செய்ய போகிறார் என டிவியில் வந்தது அவர் ரொம்ப நல்லவர் அதனால் தான் அவருக்கு சிறந்த மனிதநேயம் விருது கொடுத்தார்கள் என பெருமையாக பேச உடனே கண்ணம்மா அவரை பற்றி பேசியது போதும் மருத்துவமனை வேலையாக நான் விழுப்புரம் செல்ல வேண்டும் நீ ஹேமா வீட்டில் போய் இரு என சொல்கிறார். லட்சுமி அதை கேட்டு சந்தோசப்படுகிறார். பின் சௌந்தர்யாவிற்கு போன் செய்து லக்ஷ்மியை அழைத்து வைக்கிறேன் என சொல்ல, உரிமையோடு நீ கேட்கலாம் என சௌந்தர்யா சொல்கிறார். அதான் எனக்கு இல்லையே என கண்ணம்மா சொல்ல சௌந்தர்யா உடனே எல்லாம் பேச ஆரம்பித்துவிடுவாய் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் சௌந்தர்யா விக்ரம் மருத்துவமனையில் இது முக்கியமான ஆப்ரேசன் அதை பாரதி சரியாக செய்ய வேண்டும் அதில் உன் பங்கு முக்கியமானது என சொல்கிறார். நானும் கவனமாக இருக்கிறேன் என கண்ணம்மா சொல்கிறார். பின் பாரதி விழுப்புரத்திற்கு கிளம்ப தயாராகி வர சக்தி அம்மா அப்பா வந்து சக்தியை காப்பாற்றி விடுவீர்களா அவளுக்கு எதுவும் ஆகாதா என கேட்கிறார்.பின் பாரதி எல்லாம் சரியாக நடக்கும் என சொல்ல, சக்தி அம்மா அப்பா எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என வருத்தப்பட்டு அழுகிறார்கள். பின் பாரதி நீங்க கவலைப்படாதீங்க என சொல்கிறார்.

அப்போது சக்தி வர பாரதியிடம் எனக்கு ஆப்ரேசன் பண்ண போறீங்களா என கேட்கிறார். பின் பாரதி நான் அதை செய்யும் போது நீ தைரியமாக இருக்க வேண்டும் என சொல்ல, சக்தி எனக்கு எல்லாம் தெரியும் நான் போனில் வீடியோ பார்த்தேன் என சொல்கிறார். பின் சக்தி நான் நாளைக்கு சீக்கரம் எழுந்துவிடுவேன் எனக்காக எத்தனை பேர் கஷ்டப்படுகிறார்கள் என சக்தி சொல்ல அவளின் அம்மா அழுகிறார். பின் கண்ணம்மா ஆன்டி தான் எனக்கு ஆறுதல் சொன்னார் என சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகும் அருண்- இவருக்கு பதில் இவர் தான்! லீக்கான தகவல்!

மறுபக்கம் லட்சுமி சௌந்தர்யா வீட்டிற்கு செல்ல, குமார் லக்ஷ்மியை இங்கே இருக்க சொன்னதாக சொல்கிறார். அப்போது சௌந்தர்யா சமையல் அம்மா போன் செய்ததாக சொல்கிறார். பின் லட்சுமி ஹேமா டாக்டர் அப்பா பற்றி பேசுகிறார்கள். தனது அப்பாவை நினைத்து பெருமைப்படுகின்றனர். அப்போது பாரதி வர நீங்க ஒரு குழந்தைக்கு இதயம் கொடுக்க போறீங்களாம் அதில் நீங்க நல்லபடியாக செய்ய வேண்டும் என ஹேமா லட்சுமி சொல்கின்றனர். பின் சௌந்தர்யா வேணுவும் சொல்ல, ஆனால் பாரதி முகம் மாறுகிறது.

அப்போது சௌந்தர்யா என்ன ஆனது என கேட்க பாரதி எனக்கு மிகவும் பதட்டமாக இருப்பதாக சொல்கிறார்.இதய மாற்று அறுவைசிகிச்சை என்பது ஒரு சாதாரண விஷயம் இல்லை அதனால எப்படி இதை செய்து முடிக்க போகிறேன் என பயமாக இருப்பதாக சொல்ல, அப்போது சௌந்தர்யா அர்ஜுனன் கதை ஒன்றை சொல்கிறார். அதை கேட்டு பாரதிக்கு நன்றாக இருக்க, நீ தைரியமாக இரு என வேணுவும் சௌந்தர்யாவும் ஆறுதல் சொல்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!