இதயத்தை கொண்டு வர திட்டமிடும் மருத்துவ குழு, கண்ணம்மாவை பேசவிடாமல் செய்த பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், சக்திக்கு விழுப்புரத்தில் இருந்து இதயத்தை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. பின் வெண்பாவை ஷர்மிளா திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா ஹோம்ஒர்க் செய்து கொண்டிருக்க, அப்போது சௌந்தர்யா வருகிறார். ஹேமாவை சீக்கரம் எழுதிவிட வேண்டும் என சொல்ல அப்போது சௌந்தர்யாவிற்கு போன் வருகிறது. பாரதியை பற்றி டிவியில் வருகிறதா என கேட்க சௌந்தர்யா டிவியை போடுகிறார். பின் குமார் வீட்டிற்கு வர லட்சுமியிடம் டிவி பார்க்க சொல்கிறார். அப்போது செய்தியில் இதய அறுவைசிகிச்சை பற்றி சொல்கிறார். அதில் பாரதியை பற்றி சொல்கின்றனர். மேலும் இந்த ஆப்ரேசன் இலவசமாக செய்ய இருப்பதாக சொல்கின்றனர்.
பின் குமார் சௌந்தர்யா குழந்தைகளுக்கு விளக்கமாக சொல்கிறார்கள். பின் இரு குழந்தைகளும் பாரதியை நினைத்து பெருமைப்படுகின்றனர். பின் மருத்துவமனையில் இதயத்தை எப்படி கொண்டு வருவது என திட்டமிடுகின்றனர். அப்போது ஒருவர் விழுப்புரத்தில் இருந்து 3 மணி நேரம் ஆகும் எப்படி முடியும் என கேட்க அதற்கு தான் என்னை போன்ற ஒருவர் இருக்க வேண்டும் என சொல்கிறார். விழுப்புரத்தில் இருந்து வர 3 மணி நேரம் ஆகும் அதனால் ரோட்டில் வருவது கஷ்டம் அதனால் சாப்பர் மூலமாக கொண்டு வர முடிவு செய்திருக்கிறேன்.
TN Job “FB Group” Join Now
அதன் மூலம் 15 நிமிடங்களில் சென்னை வரலாம். இதற்காக விழுப்புரத்தில் தனியார் விமானம் வைத்திருப்போரிடம் பேசிவிட்டேன் என சொல்கிறார். அப்போது கண்ணம்மாவிற்கு எப்படி என சந்தேகம் வர அந்த நேரம் விக்ரம் வருகிறார். விக்ரமிடம் கணேஷ் சொல்ல நல்ல திட்டம் தான் என பேசிக் கொண்டிருக்கின்றனர். பாரதி சரி என சொல்ல, ஆனால் கண்ணம்மா இரண்டு நாட்களாக மழை வரும் என வானிலை ஆய்வு மையம் சொன்னார்கள். நாளைக்கு அது போல மழை வந்தால் சாப்பர் திட்டம் வீணாகிவிடும். அதனால் ரோடு வழியாக தான் கொண்டு வர முடியும் என சொல்கிறார்.
பின் கண்ணம்மா போலீஸ் உதவி உடன் சீக்கிரம் வர முடியும் என சொல்கிறார். பின் பாரதி கணேஷ் திட்டம் தான் சரியாக இருக்கும் என சொல்ல, விக்ரமிடம் கண்ணம்மா இது சரியாக வராது என சொல்கிறார். அதன் பின் எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார். நாளைக்கு மழை வராது என விக்ரம் சொல்கிறார். பின் சாந்தி வெண்பாவின் அம்மா சௌந்தர்யாவை பார்க்க சென்றதாக சொல்ல வெண்பா பதட்டமாக இருக்கிறார். அப்போது ஷர்மிளா வர சௌந்தர்யாவிடம் உனக்கு கல்யாணம் செய்வது பற்றி பேச சென்றேன்.
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – புதிய அப்டேட் இதோ!
அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார் என சொல்ல வெண்பா அதை நினைத்து சந்தோசமாக இருக்கிறார். நீ இவ்வளவு சீக்கரம் சம்மதம் சொல்வாய் என நான் நினைக்கவே இல்லை என வெண்பா சொல்ல, நான் சொல்வதை முழுசா கேட்டுவிட்டு அப்பறம் முடிவு செய் என ஷர்மிளா சொல்கிறார். பின் நான் உனக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என சௌந்தர்யாவிடம் பேசுனேன். அவங்க மிகவும் நல்லவங்க கண்டிப்பாக மாப்பிள்ளை பார்த்து சொல்கிறேன் என சொல்கிறார். பின் பாரதி பற்றிய நினைப்பை முழுமையாக விட்டுவிடு என சொல்கிறார். வெண்பா எல்லாரும் கல்யாண விஷயத்தில் விளையாடுகிறார்கள். நான் அவர்களை என்ன செய்கிறேன் என பாரு என வெண்பா கோவமாக பேசுகிறார்.