அப்பாவை பற்றி சௌந்தர்யாவிடம் கேட்ட லட்சுமி, மோசமான சக்தியின் உடல்நிலை – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா பாரதியை வெறுப்பதாக சொல்லிவிட்டு வர அதை கேட்டு ஷர்மிளா பெருமைப்படுகிறார். இப்போது தான் நல்ல முடிவை எடுத்து இருக்கிறாய் என சொல்கிறார். பின் லட்சுமி தன்னுடைய அப்பா பற்றி சௌந்தர்யாவிடம் கேட்கிறார். சக்தி உடல்நிலை மிகவும் மோசமாகிவிடுகிறது.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா நான் பாரதியிடம் எல்லா கேள்வியும் கேட்டுவிட்டு பின் நான் உன்னை வெறுக்கிறேன் என சொன்னதாக சொல்கிறார். அதை கேட்டு ஷர்மிளா கையை தட்ட இப்போது தான் சரியான முடிவை எடுத்து இருக்கிறாய் என சொல்கிறார். பின் சாந்தியை ஸ்வீட் செய்ய சொல்லிவிட்டு வெண்பாவை பாராட்டுகிறார். மறுபக்கம் ஹேமா வெண்பா பற்றி நினைத்து கடுப்பாகிறார். வெண்பா ஆன்டி போன் செய்தாலே அப்பா கோவப்படுகிறார் என சொல்கிறார். இது தெரியாமல் அவரை திருமணம் செய்ய நினைத்தோமே என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
பின் லட்சுமி வர என்னாச்சு ஹேமா என கேட்கிறார். அந்த வெண்பா ஆன்டி தான் டாடியை கோவப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அதனால் அவரை இனிமேல் அப்பாவை பார்க்க வைக்காமல் எதாவது செய்ய வேண்டும் என சொல்ல உடனே லட்சுமி சரி எதாவது பண்ணுவோம் என சொல்கிறார். பின் டீச்சர் வந்து பேச்சு போட்டி பற்றி சொல்கிறார். அதற்கு இந்த உலகத்துலேயே சிறந்த அப்பா யார் என பேச வேண்டும் என சொல்ல,. லக்ஷ்மியை தவிர அனைவரும் கை தூக்குறாங்க என சொல்கிறார். மறுபக்கம் மருத்துவமனையில் குழந்தைக்கு அடிபட்டு இருப்பதாக வருகின்றனர்.
டாக்டர் அவரை பரிசோதித்து விட்டு குழந்தைக்கு மூளை சாவு ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார். இனிமேல் குழந்தையை காப்பாற்ற முடியாது என சொல்ல, பின் வெளியே பெற்றோர்களிடம் இது பற்றி சொல்கின்றனர். அதை நினைத்து அவர்கள் அழுகின்றனர். பின் ஸ்கூலில் லட்சுமி மட்டும் தனியாக இருக்க, சௌந்தர்யா வருகிறார். அப்போது சௌந்தர்யா ஏன் தனியாக இருக்கிறாய் ஹேமா எங்கே என கேட்க, பேச்சு போட்டி நடக்கிறது அங்கே இருக்கிறார்கள் என சொல்கிறார். நீ ஏன் போகவில்லை என கேட்க, அப்பாவை பற்றிய தலைப்பு எனக்கு தான் அப்பா யார் என்றே தெரியாதே நான் என்ன செய்வேன் என கேட்கிறார்.
மே 17 வரை முழு ஊரடங்கு அமல் – பிரதமர் அதிரடி உத்தரவு!
உங்களுக்கு என் அம்மாவை தெரியும் ஆனால் என் அப்பா பற்றி சொல்லமாடீங்க ஹேமாவிற்கு டாக்டர் அங்கிள் இருக்கிறார். அதனால் அவள் அவரை பற்றி எழுதுவாள் என்னையும் தான் டாக்டர் அங்கிள் நன்றாக பார்த்துக் கொள்வார் ஆனால் அவரை நான் அப்பா என நினைக்க முடியுமா என கேட்க சௌந்தர்யாவிற்கு என்ன சொல்வது என தெரியவில்லை. இந்நிலையில் லட்சுமி விவாகரத்து பற்றி பேச நினைக்க ஆனால் அதை எப்படி சொல்வது என தெரியாமல் இருக்கிறார். லட்சுமி இப்படி பேசியதை நினைத்து சௌந்தர்யாவிற்கு சந்தேகம் வருகிறது.
பின் மருத்துவமனையில் சக்தி விளையாடி கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய அம்மா விளையாடியது போதும் உனக்கு உடம்பு சரியில்லை என சொல்ல ஆனால் சக்தி கேட்காமல் விளையாடி கொண்டிருக்கிறாள். அப்போது சக்திக்கு மூச்சு திணறல் ஏற்பட அவள் மயங்கி கீழே விழுகிறார். அப்போது வேகமாக சக்தியின் அம்மா வர தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கின்றனர். பாரதி வந்து என்ன ஆனது என கேட்க விளையாடும் போது மூச்சு திணறல் வந்ததாக சொல்கிறார்கள். பாரதி விளையாட வேண்டாம் என சொன்னேன் என சொல்லிவிட்டு சக்தியை பார்க்க செல்கிறார்.