பாரதியை சந்தித்து வெண்பாவை மனைவி என சொன்ன சாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா சாரதி விபத்தில் உதவியவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு வர அங்கே கண்ணம்மா பாரதியை அழைத்து வெண்பா திருமணம் செய்ய இருப்பவரை அறிமுகம் செய்கிறார். மறுபக்கம் ஹேமா பாரதி பேசாதத்தை நினைத்து வருத்தப்படுகிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா சாரதியை பார்த்த சந்தோஷத்தில் கண்ணம்மா அந்த ஜோடியை வாழ்த்துகிறார். பின் பாரதி இவர்களை பார்க்க வேண்டும் என நினைத்து ஒரு 5 நிமிடம் காத்திருங்கள் எங்க டாக்டர் உங்களை பார்க்க வேண்டும் என சொல்கிறார். அப்போது வெண்பா வேண்டாம் என சொல்ல ஆனால் சாரதி கேட்கவில்லை. பின் கண்ணம்மா பாரதியிடம் விபத்தில் சிக்கியவரை ஒரு ஜோடி காப்பாற்றி இருக்கின்றனர். அதனால் நீங்க வாழ்த்து சொல்ல அவர்கள் காத்திருக்கின்றனர் என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
அதை கேட்டு பாரதி வர வெண்பாவை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இவர் தான் டாக்டர் என கண்ணம்மா காட்ட சாரதி கை கொடுத்து நன்றி சொல்கிறார். பின் பாரதி பாராட்ட, இவங்க யார் என சொல்லுங்க என கண்ணம்மா சொல்கிறார். உடனே சாரதி இது என் மனைவி என சொல்ல பாரதி அதிர்ச்சி அடைகிறார். இவரை தான் திருமணம் செய்ய இருப்பதாக சொல்கிறார் என சொல்கிறார். அப்போது கண்ணம்மா இது எங்க சீப் டாக்டர் பாரதி பெரிய டாக்டர் என சொல்ல சாரதி சரி என சொல்கிறார்.
வெண்பா கோவமாக கிளம்ப அப்போது சாரதி ஏன் கோவமாக இருக்கிறாள் என தெரியாமல் இருக்கிறார். அப்போது சாரதிக்கு என்ன பெயர் சொன்னீங்க என கேட்க பாரதியா வெண்பா காதலித்த பாரதி நீங்க தான என சாரதி கேட்கிறார். இனி அடிக்கடி சந்திப்போம் என சொல்லிவிட்டு சாரதி கிளம்புகிறார். வீட்டிற்கு சென்ற வெண்பா எனக்கு பிடிக்காதது எல்லாம் செய்வதாக சொல்லி எல்லா பொருள்களையும் தூக்கி எறிகிறார். அப்போது ஷர்மிளா ஏன் மாப்பிள்ளை உன்னிடம் தப்பாக நடந்து கொண்டாரா என கேட்க வெண்பா எதுவும் சொல்லவில்லை.
அப்போது ரோஹித் வர என்ன செய்தீர்கள் என் மகளை என கேட்கிறார். அப்போது ரோஹித் வெண்பாவிடம் கேளுங்கள் என சொல்ல, வெண்பா ரோட்டில் அடிபட்டு கிடந்தவரை என் காரில் ஏற்றி என் கார் முழுவதும் ரத்தம் என சொல்கிறார். உடனே ரோஹித் என் மீதும் தான் ரத்தம் என காட்டுகிறார். பின் வெண்பா கோவப்பட பாரதியை பார்க்க சென்றதாக சொல்கிறார். ஓ அதனால் தான் கோவமா என சொல்ல வெண்பா கடுப்பாகிறார். உடனே ஷர்மிளா நான் என்னுடைய பணத்திற்காக என் மகளை திருமணம் செய்தீர்கள் என நினைத்தேன் ஆனால் அப்படி இல்லை நீங்க ரொம்ப நல்லவராக இருக்கீங்க என ஷர்மிளா சொல்கிறார்.
மறுபக்கம் அப்பா ஏன் என்னுடன் பேசவே வில்லை என ஹேமா வருத்தப்படுகிறார். அப்போது பாரதிக்கு போன் செய்வோம் என கால் செய்ய ஆனால் பாரதி வீட்டு நம்பரை பார்த்துவிட்டு ஹேமா ஸ்கூலில் இருந்து வந்த நேரம் அவள் தான் போன் செய்வாள் என நினைத்து போனை வைத்து விடுகிறார். பின் மீண்டும் ஹேமா போன் செய்ய ஆனால் போனை எடுக்கவில்லை. பின் கண்ணம்மாவிற்கு போன் செய்ய அப்பா என்னிடம் ஏன் பேசவில்லை என்னை பார்க்க கூட இல்லை என சொல்ல கண்ணம்மா நான் என்ன என பார்க்கிறேன் என சொல்கிறார்.