ஹேமாவின் கேள்விகளுக்கு கண்ணம்மாவை காரணம் சொல்லும் பாரதி, ரோஹித்தியிடம் காதலிப்பதாக சொன்ன வெண்பா – இன்றைய எபிசோட்!

0
ஹேமாவின் கேள்விகளுக்கு கண்ணம்மாவை காரணம் சொல்லும் பாரதி, ரோஹித்தியிடம் காதலிப்பதாக சொன்ன வெண்பா - இன்றைய எபிசோட்!
ஹேமாவின் கேள்விகளுக்கு கண்ணம்மாவை காரணம் சொல்லும் பாரதி, ரோஹித்தியிடம் காதலிப்பதாக சொன்ன வெண்பா - இன்றைய எபிசோட்!
ஹேமாவின் கேள்விகளுக்கு கண்ணம்மாவை காரணம் சொல்லும் பாரதி, ரோஹித்தியிடம் காதலிப்பதாக சொன்ன வெண்பா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா பாரதியிடம் அம்மா யார் என கேட்க ஆனால் பாரதி பதில் சொல்லாமல் இருக்கிறார். பின் பாரதி கண்ணம்மா தான் ஹேமா கேள்விக்கு காரணம் என பொய் சொல்கிறார். மறுபக்கம் வெண்பா பாரதியை காதலிப்பதாக ரோஹித்திடம் சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஹேமா பாரதியிடம் யாருக்கு விவாகரத்து கொடுக்க போறீங்க என கேள்வி கேட்கிறார். அப்போது பாரதிக்கு அதிர்ச்சியாக இருக்க உயிரோட இருப்பவர்களுக்கு தான விவாகரத்து கொடுப்பார்கள் என் அம்மா இறந்துவிட்டதாக தான சொன்னீர்கள் ஆனால் யாருக்கு விவாகரத்து கொடுக்க போறீங்க கணவன் மனைவிக்கு தான விவாகரத்து கொடுப்பார்கள். நீங்க விவாகரத்து கொடுத்தால் அது என் அம்மா தான அப்போ என் அம்மா இருக்காங்களா என கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

என் அம்மா இருந்தால் ஏன் நம்மை விட்டு சென்றுவிட்டார். நம்மளை பிடிக்காமல் சென்றுவிட்டாரா இல்லை நீங்க அவர்களுடன் சண்டை போடீர்களா என கேட்கிறார். அப்போது பாரதி எதுவும் பேசாமல் இருக்க நர்ஸ் வந்து ஒரு அவசர கேஸ் வந்திருப்பதாக சொல்கிறார். அதனால் எதுவும் பேசாமல் பாரதி கிளம்பி விடுகிறார். மறுபக்கம் வெண்பா ரோஹித் பீச் சென்று இருக்கின்றனர். அங்கே ரோஹித் பீச்சை பார்த்துவிட்டு ஆட்டம் போட கிளம்புகிறார். வெண்பா நான் வரமாட்டேன் என சொல்கிறார். ரோஹித் தண்ணீரில் ஆட்டம் போட அப்போது வெண்பா தண்ணீரை பார்த்ததே இல்லையா என கோபப்படுகிறார்.

பின் வெண்பாவையும் அழைத்து கொண்டு தண்ணீருக்குள் விடுகிறார். அப்போது வெண்பா மீது தண்ணீரை அடித்து உடம்பு முழுவதும் நனைத்துவிடுகிறார். பின் வெண்பாவின் துப்பட்டாவை வாங்கி மீன் பிடிக்கலாம் என சொல்ல வெண்பா கரையில் எப்படி மீன் வரும் என சொல்லி கிண்டல் செய்கிறார். என்னுடைய ராசிக்கு மீன் கிடைக்கும் என சொல்லி ரோஹித் தண்ணீரில் மீன் பிடிக்கிறார். அப்போது கிளிஞ்சல்கள் வருகிறது. வெண்பா இது தான் மீனா என சொல்லி சிரிக்கிறார்

பின் வெண்பாவின் ராசியை சொல்லி மீன் பிடிக்க அதில் மது பாட்டிலும் செருப்பும் வருகிறது. அதை பார்த்து ரோஹித் சிரிக்கிறார். அப்போது நாம் இருவர் ராசிக்கும் என்ன வருகிறது என பார்க்கலாம் என சொல்லி மீன் பிடிக்க அப்போது பெரிய மீன் வருகிறது. நாம இருவர் ராசியும் நல்ல ராசி என சொல்லி அந்த மீனை சமைத்து சாப்பிட ரோஹித் ஓடுகிறார். மறுபக்கம் பாரதி கண்ணம்மாவை பார்க்க வருகிறார். கண்ணம்மா என்னை அடிக்கடி பார்க்குறீங்க என்ன விஷயம் என கேட்க நீ செய்த காரியம் அப்படி என பாரதி சொல்கிறார்.

TNPSC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு இதோ..!

நான் செய்தேன் என கண்ணம்மா கேட்க விவாகரத்து வாங்க கூடாது என்பதால் குழந்தையிடம் இது பற்றி சொல்வியா என கேட்கிறார், எந்த குழந்தை என கண்ணம்மா கேட்க ஹேமாவிடம் சொன்னியா என கேட்கிறார். நான் லட்சுமியிடம் சொல்லமாட்டேன் உங்களிடம் எப்படி சொல்வேன் என கேட்க அப்போது பாரதி நீ சொல்லாமல் தான் ஹேமா என்னிடம் கேட்கிறாளா என கேட்கிறார். நீங்க தான் அம்மா இறந்துவிட்டதாக சொன்னேர்களே இறந்து போனவர்களுக்கு விவாகரத்து கொடுக்கமாட்டோம் என சொல்லுங்க என கண்ணம்மா சொல்கிறார்.

அதை எல்லாம் அவளே கேட்கிறார். அப்போ என் அம்மா இருக்காங்களா என அவள் கேட்பதாக கேட்கிறார். உடனே பாரதி கோவமாக பேசிவிட்டு கிளம்புகிறார். வெண்பாவும் ரோஹித் மீனை சாப்பிட அப்போது வெண்பா நான் உன்னிடம் ஒரு உண்மையை சொல்ல வேண்டும் என சொல்கிறார். நான் பாரதி என்பவரை 10 ஆண்டுகளாக காதலிக்கிறேன் ஆனால் அவன் வேறு பெண்ணை திருமணம் செய்து விட்டான். இப்போது அவன் மனைவியை பிரிய போகிறான் என சொல்ல நீ தான் என்னுடைய மனைவி என நினைத்துவிட்டேன் என ரோஹித் சோகமாக பேசுகிறார். பின் சிரித்துக் கொண்டே காதலிக்கிறாயா என ரோஹித் பேச வெண்பா அதிர்ச்சி அடைகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!