ரோஹித் மீது சந்தேகத்தை வெண்பாவிடம் சொன்ன சாந்தி, அம்மாவை கண்டுபிடிக்க போகும் ஹேமா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
ரோஹித் மீது சந்தேகத்தை வெண்பாவிடம் சொன்ன சாந்தி, அம்மாவை கண்டுபிடிக்க போகும் ஹேமா - இன்றைய
ரோஹித் மீது சந்தேகத்தை வெண்பாவிடம் சொன்ன சாந்தி, அம்மாவை கண்டுபிடிக்க போகும் ஹேமா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
ரோஹித் மீது சந்தேகத்தை வெண்பாவிடம் சொன்ன சாந்தி, அம்மாவை கண்டுபிடிக்க போகும் ஹேமா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், சாந்திக்கு ரோஹித் மீது சந்தேகம் வர அதை வெண்பாவிடம் சொல்கிறார். வெண்பா நீ சொல்வது சரி தான் எனக்கும் ரோஹித் மீது சந்தேகம் இருந்தது என சொல்கிறார். பின் ஹேமா என்னுடைய அம்மா யார் என கண்டிப்பாக கண்டுபிடிக்க வேண்டும் என லட்சுமியிடம் சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், சாந்திக்கு ரோஹித் பேசியது எல்லாத்தையும் கேட்டு சந்தேகம் வருகிறது. உண்மையாகவே அவன் தெரியாமல் தான் பேசினானா இல்லையா என குழப்பத்தில் இருக்க அப்போது வெண்பா அதை பார்த்து சாந்தியை அழைக்கிறார். என்ன யோசித்து கொண்டிருக்கிறாய் என வெண்பா கேட்க ரோஹித் மீது எனக்கு சில சந்தேகம் இருப்பதாக சொல்கிறார். என்ன சந்தேகம் என வெண்பா கேட்க அந்த ரோஹித் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தார்.

அதை வெளியே இருந்து நான் கேட்டேன் அதில் வெறும் 50000 ரூபாய் வேண்டும் என கேட்டதாக சொல்கிறார். வெறும் 50000 ரூபாய்க்கு பேசினானா என வெண்பா கேட்க அப்பறம் இன்னைக்கு அவர் குளித்து கொண்டிருக்கும் போது போன் அடித்து கொண்டே இருந்தது. அதனால் நான் போனை எடுத்தேன் அப்போது யாரோ ஒருவன் கடன்காரன் துரத்துவதாகவும் அதனால் உடனே பணம் எடுக்க வேண்டும் என சொல்கிறார். அதை கேட்டு வெண்பாவிற்கு சந்தேகம் வருகிறது.

TN Job “FB  Group” Join Now

சரியாக தான் சந்தேகப்பட்டு இருக்கிறாய் எனக்கும் அவனை கண்டாலே சந்தேகம் வருகிறது என சொல்கிறார். மறுபக்கம் ஜானகி அம்மாவிற்கு டெஸ்ட் எடுக்க பாரதி அழைத்து செல்கிறார். அப்போது ஜானகியின் கணவர் வெளியே பதட்டத்துடன் இருக்கிறார். என் ஜாணுவிற்கு என்ன ஆனது என கேட்டு அழ எதுவும் ஆகாது நீங்க பதட்டப்படாமல் இருங்கள் என சொல்கிறார். கண்ணம்மா இப்படி ஏன் கவலைப்படுகிறீர்கள் என கேட்க அப்போது சுந்தராமன் என் மனைவிக்கும் எனக்கும் 40 வருடம் திருமணம் முடிந்து ஆகிறது.

அவளை நான் நன்றாக பார்த்துக் கொள்கிறேன் அவளுக்கு எதாவது ஒன்று என்றால் என்னால் தாங்கவே முடியாது இப்படி திடீரென ஆனதால் என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை என சொல்லி அழுகிறார். அவர்களின் பாசத்தை பார்த்து கண்ணம்மா சந்தோசப்படுகிறார். எல்லாரும் உங்களை போல இருப்பதில்லை என சொல்ல கணவன் மனைவிக்கு அப்போ அர்த்தம் இல்லை என சொல்கிறார். மறுபக்கம் ஹேமா எதையோ யோசித்து கொண்டிருக்க அப்போது லட்சுமி வந்து என்ன யோசிக்கிறாய் என கேட்கிறார்.

அப்போது ஹேமா என் அப்பா அந்த அங்கிளிடம் விவாகரத்து கண்டிப்பாக வேண்டும் என தான் பேசினார். இப்போது எனக்காக விவாகரத்து வேண்டாம் என சொன்னது சரி தான் ஆனால் அதற்காக யாரை விவாகரத்து செய்ய போகிறார் என தெரிந்து கொள்ளாமல் எப்படி இருப்பது என கேட்கிறார். அப்போது லட்சுமி நீ சொல்வதும் சரி என சொல்ல என் அம்மா யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். என் அம்மா எப்படி இருக்கிறார்கள் என கண்டுபிடிக்க வேண்டும் என சொல்கிறார். லட்சுமி நானும் நிறைய உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என சொல்கிறார்.

தூத்துக்குடியில் நாளை மறுநாள் (ஜூன் 30) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மறுபக்கம் ரோஹித் தில்லி பணம் இல்லை என சொன்னதை நினைத்து பதட்டத்தில் இருக்கிறார். அப்போது பணத்திற்கு என்ன செய்வது ஷர்மிளாவிடம் கேட்டால் அவர் என்ன செய்வார் என கேட்கிறார். சரி வேற வழி இல்லாமல் பணம் கேட்கிறார். அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவருக்கு 2 லட்சம் கொடுக்க வேண்டும் என சொல்ல சர்மிளா பணம் கொடுக்கிறேன் 5 லட்சமாக கொடுக்கிறேன் என சொல்கிறார். ரோஹித் அதை நினைத்து சந்தோசப்பட அவர் பேசியதை எல்லாம் சாந்தி கேட்டுவிடுகிறார். அவர் வேகமாக ஓடி சென்று வெண்பாவிடம் ரோஹித் உண்மையாகவே நடிக்கிறான் ஷர்மிளா அம்மாவிடம் பணம் வாங்கியதாக சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!