வெண்பாவை மிரட்டும் மாயாண்டி, அடித்து நொறுக்கிய சாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
வெண்பாவை மிரட்டும் மாயாண்டி, அடித்து நொறுக்கிய சாரதி - இன்றைய
வெண்பாவை மிரட்டும் மாயாண்டி, அடித்து நொறுக்கிய சாரதி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
வெண்பாவை மிரட்டும் மாயாண்டி, அடித்து நொறுக்கிய சாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா சாரதி திருமணம் பற்றி ஷர்மிளா சௌந்தர்யாவிற்கு போன் செய்து சொல்கிறார். பின் வெண்பாவை மாயாண்டி மிரட்ட அதை பார்த்துவிட்டு ரோஹித் மாயாண்டியை அடித்து நொறுக்குகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் சௌந்தர்யாவிற்கு வெண்பாவின் அம்மா ஷர்மிளா போன் செய்து சந்தோசமாக பேசுகிறார். சௌந்தர்யா நீங்க மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என சொன்னீர்கள் ஆனால் எனக்கு கொஞ்சம் வேலையாக இருந்தது என சௌந்தர்யா சொல்லிவிட்டு ஒரு மாப்பிள்ளை பற்றி சொல்கிறார். ஆனால் ஷர்மிளா நான் வெண்பாவிற்கு ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்துவிட்டேன். அவர் பெயர் ரோஹித் சாரதி என சொல்கிறார். அப்போது சௌந்தர்யா அதை கேட்டு சந்தோசப்படுகிறார்.

பின் வெண்பா ரோஹித் திருமண நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதில் நீங்க எல்லாரும் கலந்து கொள்ள வேண்டும் என சொல்கிறார். அப்போது நிச்சயதார்த்தமா என கேட்க அதெல்லாம் என்ன நிகழ்ச்சி என இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் கண்டிப்பாக நிகழ்ச்சி இருக்கிறது என ஷர்மிளா சொல்ல கண்டிப்பாக நாங்க குடும்பத்துடன் வருகிறோம் என சௌந்தர்யா சொல்கிறார். மறுபக்கம் வெண்பாவிற்கு சாந்தி முகத்தை அழகுப்படுத்திக் கொண்டிருக்க அப்போது போன் அடிக்கும் சத்தம் கேட்கிறது.

TN Job “FB  Group” Join Now

சாந்தி அதை எடுத்து பார்க்க அதில் மாயாண்டி பெயரை பார்த்து வெண்பா அதிர்ச்சி அடைகிறார். மாயாண்டியிடம் என்ன வேண்டும் உனக்கு என கேட்க அப்போது மாயாண்டி எனக்கு பணம் வேண்டும் என கேட்கிறார். ஏற்கனவே கொடுத்து முடித்துவிட்டேன் என சொல்ல அப்போது மாயாண்டி அதெல்லாம் முடிந்துவிட்டது. இப்போது ஒரு 25 லட்சம் கொடுத்து முடித்துவிடுங்கள் என சொல்கிறார். வெண்பா அதெல்லாம் முடியாது என சொல்ல, அப்போ உன்னை பற்றிய ஆதாரங்களை நான் எல்லாருக்கும் அனுப்பி விடுவேன் என சொல்கிறார்.

உடனே வெண்பாவிற்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்க அந்த நேரம் சாரதி வருகிறார். அப்போது வெண்பாவை யாரோ மிரட்டுவதாக சாரதி நினைக்க யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என நினைக்கிறார். மறுபக்கம் கண்ணம்மா பாரதியை பார்க்க வருகிறார். அவர் உங்களிடம் பேச வேண்டும் என சொல்ல என்ன விஷயம் என கேட்கிறார். நீங்க ஏன் ஹேமாவிடம் பேசாமல் இருக்கீங்க என கேட்க எல்லாம் உன்னால் தான் என பாரதி சொல்கிறார். நீ விவாகரத்து பற்றி ஹேமாவிடம் சொன்னதால் அவள் என்னிடம் பல கேள்விகளை கேட்கிறாள்.

ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு – ஜூலை 1 இல் புதிய கல்வியாண்டு தொடக்கம்!

அதனால் தான் நான் பேசவில்லை என சொல்கிறார். கண்ணம்மா நான் சத்தியமாக ஹேமாவிடம் விவாகரத்து பற்றி சொல்லவில்லை என கண்ணம்மா சொல்ல ஆனால் பாரதி நம்பவில்லை. மறுபக்கம் வெண்பாவிற்கு ரோஹித் போன் செய்ய ஆனால் அவர் போனை எடுக்கவில்லை அடுத்து மாயாண்டி போன் செய்ய வெண்பா பதட்டமாக போனை எடுக்கிறார். அதில் ரோஹித் பேச கதவை திறந்து பார்த்தால் ரோஹித் மாயாண்டியை அடித்து வாயை கட்டி கொண்டு வந்திருக்கிறார்.

மாயாண்டி என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என வெண்பாவிடம் சொல்ல அப்போது வெண்பா மாயாண்டி பேசுவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். மாயாண்டி என்னுடைய போன் எல்லாம் அவரிடம் தான் இருக்கிறது என சொல்ல, மாயாண்டியை பேச வைத்து வீடியோ எடுத்து ரோஹித் மிரட்டுகிறார். வெண்பா ரோஹித் இப்படி எல்லாம் செய்வானா என நினைத்து அதிர்ச்சி அடைகிறார். பின் ரோஹித் உன்னுடைய பாஸ்ட் எப்படி இருந்தாலும் எனக்கு கவலை இல்லை இனி நம்மளுடைய எதிர்காலம் தான் முக்கியம் என சொல்ல வெண்பா அதிர்ச்சி அடைகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!