ஜானகி ராமன் இறப்பு செய்தியை கேட்டு அதிர்ச்சியில் இருக்கும் குடும்பத்தினர் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஜானகி அம்மாவிற்கு ஆப்ரேசன் செய்ய ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும் நிலையில், திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு ஜானகி அம்மா இறந்துவிடுகிறார். அவர் இறப்பை ஏற்க முடியாமல் ராமன் ஐயாவும் இறந்துவிடுகிறார். அதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஜானகி அம்மாவிற்கு காலை ஆப்ரேசன் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அப்போது கண்ணம்மாவிடம் விக்னேஷ் டாக்டர் வந்துவிட்டாரா என பாரதி கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது ஜானகி அம்மாவின் மகன் வந்து அம்மாவிற்கு மூச்சி திணறல் அதிகமாக இருப்பதாக சொல்கிறார். பாரதி என்னாச்சு என ஓடி சென்று பார்க்க அப்போது ஜானகி அம்மா மூச்சு விட சிரமத்தில் இருக்கிறார். அவரை பார்த்து அனைவரும் பதட்டத்தில் இருக்கின்றனர். பாரதி அவர்களை தள்ளி நிற்க சொல்லிவிட்டு ஜானகி அம்மாவை சோதனை செய்கிறார்.
உடனே ஆப்ரேசன் தீயேட்டருக்கு தயார் செய்யுங்கள் என சொல்ல ஜானகி அம்மா பாரதியின் கையை பிடிக்கிறார். அப்படியே அவருடைய உயிர் பிரிந்துவிடுகிறது. உடனே ஜானகி அம்மாவை சோதனை செய்து பார்த்துவிட்டு உயிர் இல்லை என பாரதி சொல்கிறார். அவரால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை ராமன் சார் ஜானகி அம்மாவை பார்த்து கதறி அழுகிறார். அவங்களின் பசங்க கண்ணம்மா என அனைவரும் அழுது கொண்டிருக்கின்றனர். அப்போது சௌந்தர்யா விக்ரம் வேணு என அனைவரும் வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
அவர்கள் ஜானகி அம்மா இல்லாததை நினைத்து அழ ராமன் சார் இனிமேல் நான் எப்படி இருப்பேன் என அழுது கொண்டே ஜானகி அம்மா மீது சாய்கிறார். பின் நர்ஸ் வந்து அடுத்து நடக்க வேண்டியதை பார்க்க வேண்டும் என சொல்ல, பாரதி ராமன் சாரை எழுப்புகிறார். ஆனால் ராமன் சார் சாய்ந்துவிட பாரதி அவரை சோதனை செய்து பார்த்துவிட்டு அவரும் இறந்துவிட்டதாக சொல்கிறார். இருவரும் இறந்ததை தாங்க முடியாமல் குடும்பத்தில் அனைவரும் கதறி அழுகின்றனர். கண்ணம்மா பாரதிக்கும் கூட அது தாங்க முடியாமல் இருக்கிறது.
பின் இறுதியாக அவர்களின் உடல்களை அவர்களின் பசங்ககொண்டு செல்கின்றனர். பின் பாரதி ஜானகி அம்மா சொன்னதை பற்றி நினைத்து பார்க்கிறார். ஜானகி அம்மா உடல்நிலை பற்றி சொன்னதும், ராமன் சார் ஜானகி அம்மா உடல்நிலை பற்றி சொன்னது பற்றியும் நினைத்து பார்க்கிறார். ஜானகி அம்மா உடல்நிலை பற்றி சொன்னதும் ஆப்ரேசன் செய்ய மாட்டேன் என சொன்னது பற்றியும் இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கை போதும் என சொன்னது பற்றியும் நினைத்து பார்க்கிறார்.
அவர்கள் சந்தோசமாக இருந்த நாட்களை பற்றி கண்ணம்மா நினைத்து பார்க்கிறார். எவ்வளவு சந்தோஷமான கணவன் மனைவியாக இருந்தார்கள் என நினைத்து வருத்தப்படுகிறார். பின் சௌந்தர்யா அகிலிடம் நல்ல கணவன் மனைவிக்கு எடுத்துக்காட்டாய் அவர்கள் இருந்தார்கள் மனைவியை பிரிந்து இருக்க முடியாத நிலையால் இருவரும் ஒன்றாக இறந்துவிட்டார்கள் இது எவ்வளவு பெரிய விஷயம் கணவன் மனைவி என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். சின்ன விஷயங்களை பெரிதாக்காமல் விட்டுக் கொடுத்து இருக்க வேண்டும் என சொல்கிறார்.
தீவிரமடையும் குரங்கு அம்மை பாதிப்பு – 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு!
இதை தான் பாரதிக்கும் சொல்லி கொடுத்தேன் ஆனால் அவன் கேட்கவில்லை நீயும் அப்படி இருக்க கூடாது என அகில்லிடம் சொல்ல அகில் சரி என சொல்கிறார். பின் பாரதி ஜானகி அம்மாவிற்கு செய்து கொடுத்த சத்தியத்தை நினைத்து பார்த்து கண்ணம்மாவிற்கு போன் செய்கிறார். கண்ணம்மா மருத்துவமனை வேலையாக போனை எடுப்பார் என நினைத்து போனை எடுக்க பாரதி இன்று நான் மருத்துவமனைக்கு வரமாட்டேன் என சொல்கிறார். பின் கண்ணம்மாவை நீயும் இன்னைக்கு லீவ் என சொல்ல ஜானகி அம்மா என்னிடம் சத்தியம் வாங்கி இருந்தார் என பாரதி சொல்கிறார். என்னிடமும் அவர் சத்தியம் வாங்கியதாக சொல்ல கண்ணம்மா சொல்கிறார்.
சரி நான் வருகிறேன் என கண்ணம்மா சொல்ல, லக்ஷ்மியை நான் ஸ்கூலிற்கு அனுப்பவில்லை என கண்ணம்மா சொல்கிறார். நானும் ஹேமாவை அனுப்பவில்லை என சொல்கிறார். பின் ஹேமாவிடம் நீ நான் லட்சுமி அப்பறம் சமையல் அம்மா என எல்லாரும் பிக்னிக் போவதாக பாரதி சொல்ல அதை கேட்டு லட்சுமி சந்தோசப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.