கண்ணம்மாவிற்கு நீதி வழங்கிய அம்மன், DNA டெஸ்ட் எடுப்பாரா பாரதி? இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
கண்ணம்மாவிற்கு நீதி வழங்கிய அம்மன், DNA டெஸ்ட் எடுப்பாரா பாரதி? இன்றைய
கண்ணம்மாவிற்கு நீதி வழங்கிய அம்மன், DNA டெஸ்ட் எடுப்பாரா பாரதி? இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
கண்ணம்மாவிற்கு நீதி வழங்கிய அம்மன், DNA டெஸ்ட் எடுப்பாரா பாரதி? இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி ஏன் இந்த கோவிலுக்கு வந்தார் என்பது கண்ணம்மாவிற்கு தெரிய வருகிறது. அப்போது கண்ணம்மா பாரதிக்கு சொல்ல வேண்டாம் தெய்வம் எனக்கு நீதி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் பொங்கல் வைக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மாவிடம் பெண் ஒருத்தி உங்களது குடும்பத்தில் எதாவது பிரச்சனையா என கேட்கிறார். ஏன் அப்படி கேட்கிறீர்கள் என கண்ணம்மா கேட்க, இந்த கோவிலுக்கு குடும்ப பிரச்சனை இருப்பவர்கள் தான் வருவார்கள். அவர்கள் இருவரும் பொங்கல் வைப்பார்கள் அப்போது யாருடைய பொங்கல் பொங்குகிறதோ அவர்கள் பக்கம் தான் நீதி இருப்பதாக அம்மன் வாக்கு அளித்தது போல அதனால் தான் உன்னிடம் கேட்டேன் என சொல்கிறார்.உடனே கண்ணம்மா அதான் எதுவும் சொல்லாமல் இந்த கோவிலுக்கு அழைத்து வந்தாரா என நினைத்து பார்க்கிறார்.

கண்ணம்மாவை ஏற்றுக்கொண்ட பாரதி? விரைவில் முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்! ரசிகர்கள் ஷாக்!

நீங்க இந்த உலகத்தில் இருக்கும் எந்த கோவிலுக்கு வேண்டுமானாலும் போகட்டும் ஆனால் என் பக்கம் தான் நியாயம் இருக்கிறது. அதனால் நான் ஏன் பயப்பட வேண்டும் என நினைத்து கொண்டிருக்கிறார். சௌந்தர்யா அகில் பொங்கல் வைக்கும் இடத்தில் இருக்க, டாக்டர் சொன்னதாக சொல்லி 2 பானைகளை கொண்டு வந்து ஒருவர் வைக்கிறார். அதை பார்த்து அகில் என்ன அம்மா இது ஒரு குடும்பத்திற்கு இரண்டு பொங்கல் என கேட்க, சௌந்தர்யா எதோ வேண்டுதல் என சொல்கிறார்.

அப்போது ஹேமா வேண்டுதல் என்றால் என்ன என கேட்க அகில் விளக்கம் அளிக்கிறார். ஹேமாவும் லக்ஷ்மியும் தனியாக விளையாட செல்ல பாரதி பொங்கலுக்கு தேவையான பொருள்களை வாங்கி வருகிறார். அப்போது கண்ணம்மா வந்து பொங்கல் வைக்க பூசாரி இருவரும் பொங்கல் வைக்க தொடங்கிவிட்டீர்களா யாரு பக்கம் நியாயம் இருக்கிறதோ அவர்கள் மனதில் நினைத்துக் கொண்டு பொங்கல் வைங்க என சொல்கிறார் பாரதி மனதில் என் திருமண வாழ்க்கை நன்றாக இருந்தது ஆனால் திடீரென எல்லாம் மாறிவிட்டது.

ரேஷன் அட்டைதாரருக்கு ரூ.1000 பொங்கல் பரிசு – அரசு முக்கிய அறிவிப்பு!

அது தான் உண்மை என நான் இருந்தேன் ஆனால் இப்போது கண்ணம்மா தப்பு செய்திருக்கமாட்டாள் என தோன்றுகிறது. அதனால் எனக்கு நீதி வழங்க வேண்டும் என நினைக்கிறார். கண்ணம்மா மனதில் நான் எந்த தப்பும் செய்யவில்லை என நிரூபிக்க வேண்டும் என நினைக்கிறார். இருவரும் பொங்கல் வைக்க கண்ணம்மாவின் பொங்கல் தான் முதலில் பொங்குகிறது. அப்போது பூசாரிக்கு சாமி வருகிறது. அவர் சாமி ஆட பாரதி மனதில் தவறாக நினைத்ததாக சொல்கிறார். பொங்கல் பொங்கி அம்மன் நீதி கொடுத்துவிட்டார் ஆனால் இப்போது நீ அம்மன் கட்டளைக்கு தலைவணங்க வேண்டும் என அவர் சொல்கிறார்.

கண்ணம்மாவை அழைத்து மாலை போட்டு ஆசிர்வாதம் செய்ய, சௌந்தர்யா பாரதியிடம் இங்கே என்ன நடக்கிறது என கேட்கிறார். அது ஒன்றுமில்லை என விவரத்தை கண்ணம்மா சொல்ல, சௌந்தர்யா அதிர்ச்சி அடைகிறார். இப்போது என் பக்கம் நியாயம் வந்துவிட்டது எப்போ DNA டெஸ்ட் எடுக்க வரீங்க என கண்ணம்மா கேட்க அதிர்ச்சி அடைகிறார். நீங்க ஒரு டாக்டர் என் பக்கம் தவறு இல்லை என கண்டுபிடிக்க ஆயிரம் வழி இருக்கிறது ஆனால் நீங்க எதுவும் செய்யாமல் இருப்பது சரி இல்லை என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!