பாரதி தான் உன்னுடைய அப்பா என்று கை காட்டும் கண்ணம்மா, சந்தோஷத்தில் லட்சுமி – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா பாரதியிடம் என்ன சொன்னால் என சௌந்தர்யா கேட்க கண்ணம்மா பாரதி சொன்னதை சொல்கிறார். அவர் ஹேமா பற்றி சொன்னதை நம்பவில்லை என சொல்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி கண்ணம்மாவிடம் பேசிவிட்டு கிளம்ப சௌந்தர்யா வந்து பாரதியிடம் உண்மையை சொல்லிட்டியா என கேட்கிறார். அதற்கு கண்ணம்மா ஆமாம் சொல்லிட்டேன் என சொல்ல சௌந்தர்யா என்ன சொன்னான் என கேட்கிறார். அவர் நான் சொன்னதை நம்பவே இல்லை, உனக்கு பிரசவம் பார்த்த என்னிடம் வந்து நமக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக நீ சொன்ன போதே எனக்கு தெரியும் நீ ஹேமா தான் என்னுடைய மகள் என சொல்வாய் என நினைத்தேன். அதனால் பெரிய ஆச்சர்யம் எதுவும் இல்லை என பாரதி சொன்னதாக சொல்கிறார்.
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் அறிவிப்பு – இதை தொட்டால் பணம் பறிபோகும்!
பின் சௌந்தர்யா ஹேமா பற்றிய உண்மையை கூட அவள் நம்பாததற்கு என்ன காரணம் என கேட்க, என் அம்மா அப்படி எல்லாம் என்னிடம் பொய் சொல்லமாட்டார்கள், அவங்களுக்கு ஹேமா உன்னுடைய மகள் என சொல்லி வளர்க்க சொல்லும் அளவிற்கு அவர்களுக்கு தைரியம் இருக்கும் என சொல்கிறார். நீங்க தான் ஹேமா அநாதை என ஆதாரம் வைத்திருப்பதாக சொல்கிறார். அப்போது சௌந்தர்யா நான் அன்று அவனை நம்ப வைக்க செய்த ஆதாரம் அது என சொல்ல, எது பொய்யோ அதை தான் நம்புவார், எது உண்மையோ அதை நம்பாமல் இருக்கிறார் என கண்ணம்மா சொல்கிறார்.
ஐயோ கடவுளே ஏன் என்னை கஷ்டப்படுத்துகிறாய் என சௌந்தர்யா சொல்ல, கடவுளை சொல்லி குற்றமில்லை, உங்க மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று DNA டெஸ்ட் எடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என கண்ணம்மா சொல்கிறார். பின் வெண்பா மாடியில் காத்துக் கொண்டிருக்க பாரதி வருகிறார். என்ன பேசினாய் என கேட்க, அதெல்லாம் அப்பறம் சொல்வதாக சொல்கிறார். பாரதி வெண்பா பேசுவதை பார்த்து அஞ்சலி அகில் கோபப்படுகிறார். பின் குமார் கேக் கொண்டு வர ஹேமா லட்சுமி கண்ணம்மாவை அழைத்து வருகிறார்.
மத்திய அரசு சார்பில் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் – பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு!
பின் கேக் வெட்ட போக ஹேமா லட்சுமி அப்பாவை பற்றி சொல்ல போவதாக சொன்னீங்களே என கேட்கிறார். அப்போது ஹேமா அவர் எங்கே வந்துட்டாரா என கேட்க, லட்சுமி சொல்லு அம்மா என கேட்கிறார். பின் கண்ணம்மா என்ன சொல்வது என தெரியாமல் இருக்க, இந்த தடவையாவது சொல்லு அம்மா என்னுடைய அப்பா யார் என கேட்கிறார். பின் கண்ணம்மா எல்லா உண்மையையும் இப்போ சொல்கிறேன். அப்பா யார் என்ற உண்மையை சொல்கிறேன் என சொல்ல, இவர் தான் உன்னுடைய அப்பா என சொல்லி பாரதியை காட்டுகிறார். இவ்வளவு நாள் அங்கிள் என கூப்பிட்டாய்யே இவர் தான் உன்னுடைய அப்பா என கையை காட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது