கண்ணம்மா பிறந்தநாளுக்கு வந்த பாரதி, ஹேமா தன்னுடைய மகள் என சொன்ன கண்ணம்மா – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி கண்ணம்மாவின் பிறந்தநாளுக்கு வர கண்ணம்மாவை அழைத்து தனியாக பேசுகிறார். அப்போது ஹேமா பற்றிய உண்மையை பாரதியிடம் சொல்ல ஆனால் பாரதி நம்பாமல் இருக்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மாவின் அப்பா உங்க அம்மா பிறந்தநாளை இப்படி இதுவரை கொண்டாடியது இல்லை என சொல்கிறார். அப்போது லட்சுமி தனது நண்பர்களை வீட்டு வாசலில் நிற்க சொல்லிவிட்டு என் அப்பா காரில் வந்து இறங்கியபின் பூ தூவி வரவேற்க வேண்டும் என சொல்கிறார். பின் ஹேமாவுடம் பாரதி காரில் வந்து இறங்க லட்சுமி அலங்காரம் செய்ததை எல்லாம் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அப்போது லக்ஷ்மியின் நண்பர்கள் பாரதி மீது மலர் தூவுகின்றனர். அப்போது சௌந்தர்யா அதை பார்த்து ஆச்சர்யப்படுகிறார்.
பின் கண்ணம்மா வர ஹேமா கட்டியணைத்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்கிறார். பாரதியை சொல்ல சொல்ல ஆனால் அவர் சொல்லாமல் இருக்கிறார். மேலே செல்ல அங்கே எல்லாரும் இருப்பதை பார்த்து பாரதி நக்கல் அடிக்கிறார். பெரிய விஐபி பிறந்தநாள் தான் போல எல்லாரும் வந்திருப்பதாக சொல்ல, அப்போது வெண்பாவும் வருகிறார். கண்ணம்மா கூப்பிட்டதால் தான் வருவதாக சொல்ல, அகில் அஞ்சலி ஜெயிலில் இருந்தது பற்றி பேசுகின்றனர். உடனே பாரதி கோவப்பட்டு தேவை இல்லாதது எல்லாம் பேச வேண்டாம் என சொல்கிறார்.
அப்போது பாரதி கண்ணம்மாவிடம் தனியாக பேச வேண்டும் என அழைத்து பேச எதோ ரகசியம் சொல்ல வேண்டும் என சொன்னாய் என்னது என கேட்கிறார். அதற்கு கண்ணம்மா அது ஹேமாவை பற்றியது என சொல்ல, அவளை பற்றி என்ன என பாரதி கேட்கிறார். ஹேமா என்னுடைய மகள் என கண்ணம்மா சொல்ல, நினைத்தேன் நீ இதை தான் சொல்வாய் என உனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை தான் ஹேமா அது தான் நீ சொல்வாய் என எனக்கு எப்பவோ தெரியும் இதில் எனக்கு ஆச்சர்யமே இல்லை என பாரதி சொல்கிறார்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மொபைல் நம்பர் அப்டேட் செய்வது எப்படி?
உனக்கு பிரசவம் பார்த்ததே நான் தான் உனக்கு பிறந்தது ஒரே ஒரு குழந்தை தான் என்னையும் ஹேமாவையும் பிரிக்க வேற எதாவது திட்டம் போடு என சொல்கிறார். வெண்பா வருண் தான் லக்ஷ்மியின் அப்பா என சொல்ல சொன்னதாக சொன்னால் அதை சொல்லவா என பாரதி மிரட்டுகிறார். ஹேமா என்னுடைய குழந்தை இல்லை என சொல்ல ஆதாரம் இருக்கிறதா என கேட்க இருக்கிறது என்னுடைய அம்மா தான் இந்த குழந்தையால் தான் இவ்வளவு பிரச்சனை அந்த குழந்தையை என் அம்மா என்னிடம் கொடுத்து வளர்க்க சொல்லிருந்தால் நான் அவர்களை மன்னிக்கவே மாட்டேன் என பாரதி சொல்ல, கண்ணம்மா என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார்.