கண்ணம்மா வீட்டிற்கு சென்ற பாரதி, அப்பாவிற்கு சட்டை வாங்கிய லட்சுமி – இன்றைய எபிசோட்!

0
கண்ணம்மா வீட்டிற்கு சென்ற பாரதி, அப்பாவிற்கு சட்டை வாங்கிய லட்சுமி - இன்றைய எபிசோட்!
கண்ணம்மா வீட்டிற்கு சென்ற பாரதி, அப்பாவிற்கு சட்டை வாங்கிய லட்சுமி - இன்றைய எபிசோட்!
கண்ணம்மா வீட்டிற்கு சென்ற பாரதி, அப்பாவிற்கு சட்டை வாங்கிய லட்சுமி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி கண்ணம்மா வீட்டிற்கு வர லட்சுமியிடம் ஏன் உண்மையை சொன்னாய் என கேட்டு கோவமாக பேசுகிறார். நான் லட்சுமியிடம் உண்மையை சொல்லிவிடுவேன் என சொல்ல கண்ணம்மா கோபப்படுகிறார். பின் லட்சுமியிடம் அப்பாவிற்கு இந்த சட்டை தான் சரியாக இருக்கும் என தவறாக காட்டுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி கண்ணம்மா வீட்டிற்கு கோவமாக வருகிறார். அங்கே வீட்டில் அப்பாவை வரவேற்கும் சார்ட் வைத்துள்ளதை பார்த்து கோபப்படுகிறார். கண்ணம்மாவும் அதை எழுதி கொண்டிருக்க கண்ணம்மா தான் எல்லாம் செய்தார் என நினைக்கிறார். பின் கண்ணம்மாவிடம் ஏன் இப்படி செய்கிறாய் என கோபப்படுகிறார். லக்ஷ்மியின் அப்பா யார் என எனக்கு தெரியும் என லக்ஷ்மியிடமும் என் பெண்ணிடமும் சொல்லிருக்காய் அவர்கள் என்னிடம் வந்து கேட்கிறார்கள் நான் என்ன செய்வது என கேட்கிறார்.

மாநிலம் முழுவதும் பிப்.20ம் தேதி அரசு பொது விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இப்படியே இருந்தால் நான் அவர்களிடம் உண்மையை சொல்லிவிடுவேன் என பாரதி சொல்ல கோவப்பட்ட கண்ணம்மா, எது உண்மை என உங்களுக்கே தெரியாமல் 9 வருசமாக ஒரு பொய்யை நம்பிக் கொண்டு இருக்கீங்க என சொல்கிறார். பின் பாரதி சரி நான் அந்த குழந்தை மனதை கஷ்டப்படுத்தவில்லை. நான் சொன்ன உண்மையை நீ என்னிடம் மட்டும் ஒப்புக் கொள் லக்ஷ்மியை நான் சந்தோசமாக வைக்கிறேன் என சொல்கிறார். ஆனால் கண்ணம்மா முடியாது என சொல்ல பாரதி கோவமாக கிளம்புகிறார்.

மறுபக்கம் லட்சுமி அப்பாவின் சைஸ் தெரியாமல் எல்லா அளவிலும் ட்ரெஸ் எடுத்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். அங்கே பாரதி பார்த்து என்ன செய்கிறாய் என கேட்க உள்ளே வாங்க அங்கிள் நான் சொல்கிறேன் என அழைத்து செல்கிறார். அங்கே லட்சுமி சௌந்தர்யா வேணு அகில் எல்லாரும் இருகின்றனர். அப்போது லட்சுமி என் அப்பா எப்படி இருப்பார் என உங்களுக்கு தான தெரியும் அதனால் எல்லா அளவிலும் ட்ரெஸ் வாங்கி வந்திருக்கேன் நீங்க என் அப்பாவிற்கு எது சரியாக இருக்கும் என சொல்லுங்கள் என காட்ட லக்ஷ்மியின் அன்பை பார்த்து சௌந்தர்யா கண் கலங்குகிறார்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வர திட்டமிட்டோர் கவனத்திற்கு – இனி தனிமைப்படுத்துதல் இல்லை!

அப்போது பாரதி வேண்டும் என்றே பெரிய அளவை எடுக்க லட்சுமி என் அப்பா இவ்வளவு பெரிதாக இருப்பாரா என கேட்கிறார்.ஆமாம் உன் அப்பாவிற்கு இது தான் சரியாக இருக்கும் என சொல்ல, சௌந்தர்யா வேணு அகில் சிறு குழந்தையை பாரதி ஏமாற்றுவதை நினைத்து கோபப்படுகிறார். பின் லட்சுமி அதை எடுத்துக் கொண்டு கிளம்ப சௌந்தர்யா சிறு குழந்தையை ஏமாற்ற எப்படி தான் மனம் வருகிறது என கேட்கிறார். நான் சென்று உண்மையான அப்பாவை காட்டவா என சொல்ல, அதெல்லாம் வேண்டாம் என சௌந்தர்யா பாரதியிடம் கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!