பாரதியை வர வைக்க சௌந்தர்யாவிடம் உதவி கேட்கும் கண்ணம்மா, வெண்பாவிடம் பணம் கேட்டு மிரட்டும் மாயாண்டி – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மாவும் பாரதியும் ஸ்கூலில் பார்த்துக் கொள்ள ஹேமா மற்றும் லக்ஷ்மியின் நண்பர்கள் கண்ணம்மாவின் பெயரை கேட்கின்றனர். பின் கண்ணம்மா சௌந்தர்யாவிடம் உதவி செய்ய சொல்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா மற்றும் பாரதி ஸ்கூலிற்கு சாப்பாடு கொண்டு வருகின்றனர். பாரதி இவளை பார்க்க கூடாது என நினைக்க ஆனால் பார்க்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது என நினைக்க அப்போது ஹேமா வருகிறார். ஹேமாவிடம் என்ன நேரமாகிவிட்டது என பாரதி கேட்க ஆமாம் அப்பா மிஸ் எல்லாரும் ஹோம்ஒர்க் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் நான் எல்லாத்தையும் நன்றாக செய்துவிட்டேன். ஆனால் கணக்கு பாடம் தான் சரியாக வரவில்லை லட்சுமி இருந்திருந்தால் எல்லாம் சொல்லி கொடுத்து இருப்பாள் என சொல்கிறார்.
ஞாயிற்றுக் கிழமை (பிப்.13) முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? மாநில அரசு விளக்கம்!
லட்சுமி ஏன் வரவில்லை என பாரதி கேட்க, பிறந்தநாள் விழாவிற்கு அப்பா வருவதால் வீடு முழுவதும் அலங்காரம் செய்து கொண்டிருக்கிறார் என சொல்ல, சரியாக சொல்லிவிட்டாய் என கண்ணம்மா கேட்க அப்போது லக்ஷ்மியின் நண்பர்கள் வருகின்றனர். அவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல லட்சுமி எல்லாரிடமும் சொல்லிட்டாளா என சொல்கிறார். அவர்கள் உங்களுக்கு கேக் ஆர்டர் செய்து இருக்கிறோம் உங்க பெயர் என்ன என கேட்க கண்ணம்மா சொல்ல முடியாமல் இருக்கிறார். ஹேமாவிற்கு உண்மை தெரிந்துவிடும் என நினைத்து பதட்டமாக இருக்க நீங்க சமையல் அம்மா என எழுதுங்கள் என கண்ணம்மா சொல்கிறார்.
மறுபக்கம் வெண்பாவிடம் பணம் வாங்க மாயாண்டி வர அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என வெண்பா சொல்கிறார். பின் மாயாண்டி என்னிடம் ஆதாரம் இருப்பதாக சொல்லி மிரட்டுகிறார். பின் அகில் வேணு சௌந்தர்யா பேசிக் கொண்டிருக்க இத்தனை பேர் இருந்தும் நம்மளால் எதுவும் செய்ய முடியவில்லையே என நினைத்து வருத்தப்படுகின்றனர். பாரதி இத்தனை நாட்களாக சிறு பையனாக இருந்தான் ஆனால் இப்போது அப்படி இல்லை, அவனை கண்டித்து வைக்க வேண்டும் என அகில் சௌந்தர்யாவிடம் சொல்கிறார்.
அப்போது அங்கே கண்ணம்மா வருகிறார். கண்ணம்மா வந்து லக்ஷ்மிக்கு நான் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் உங்க மகன் என்னுடைய பிறந்தநாள் விழாவிற்கு வர வேண்டும் அப்பாவை நினைத்து கனவில் லட்சுமி வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள் அவளுக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என் வாழ்க்கை போனது போல லட்சுமி வாழ்க்கை ஆக கூடாது நீங்க தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் என வருத்தப்பட்டு பேசுகிறார். அகில் என்னை உன்னுடைய அண்ணியாக இல்லாமல் அக்கா தங்கையாக நினைத்து உதவி செய் என கண்ணீருடன் கேட்க அகில் சரி என சொல்கிறார்.
தனது அப்பா குறித்து பாரதியிடம் கேட்கும் லட்சுமி, அதிர்ச்சியில் கண்ணம்மா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
நீங்க சென்று முகத்தை கழுவிவிட்டு வாருங்கள் என சொல்ல கண்ணம்மா அகில் ரூமிற்கு செல்கிறார். அப்போது அகில் பாவம் அண்ணி எவ்வளவு வருத்தப்பட்டு பேசுகிறார் அவருக்கு கட்டாயம் நான் உதவி செய்வேன் என சொல்ல, கண்ணம்மா ரூமில் இருந்து வெளியே வரும் போது பாரதி வருகிறார். இவ எதற்கு இங்கே வந்தால் என பாரதி கேட்க, இவ என்னுடைய மருமகள் என சௌந்தர்யா சொல்கிறார். பின் கண்ணம்மா நீங்க இல்லை என நினைத்து நான் வரவில்லை பிறந்தநாள் விழாவிற்கு லக்ஷ்மியின் அப்பாவை நான் காட்ட வேண்டும் அதற்கு நீங்க வர வேண்டும் என சொல்கிறார்.