கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு தங்களுடைய ரூமை கொடுத்த தனம், நைட்டி பிரச்சனையால் கடுப்பான மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், மீனா ஐஸ்வர்யா நைட்டி போட்டதால் எனக்கும் நைட்டி வேண்டும் என சொல்லி ஜீவாவிடம் சண்டை போடுகிறார். பின் தனம் ஐஸ்வர்யா கண்ணனை அவர்களது ரூமில் படுக்க வைக்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஜீவா கோவமாக இருக்க மீனா ரூமிற்கு வருகிறார். அவர் ஜீவாவிடம் எனக்கு நாளைக்கு 10 நைட்டி வாங்கி கொடு என சொல்ல, ஏன் புடவையில் தான் நீ அழகாக இருப்ப என ஜீவா சொல்கிறார். எனக்கு வாங்கி கொடு கல்யாணம் முடிந்து நான் வரும்போது எப்படி எல்லாம் நான் நைட்டி போட்டதற்கு பேசுன இப்போது புதிதாக வந்த ஐஸ்வர்யா எப்படி இருக்கிறாள் என மீனா கேட்கிறார். அதற்கு ஜீவா கிண்டல் செய்ய, எனக்கு நாளைக்கு 10 நைட்டி வேண்டும் என மீனா சொல்கிறார்.
பின் முல்லை கதிர் ரூமிற்கு வர வீடு பத்தவில்லை அதனால் பெரிய வீடு கட்டுவது பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அண்ணன் அண்ணி ரூம் இல்லாமல் இருந்தாங்க அவங்களுக்கு பலகையில் அடித்து ரூம் கட்டி கொடுத்தோம். இப்போது கண்ணன் ஐஸ்வர்யா வந்துட்டாங்க அவங்களுக்கு ரூம் கொடுக்க வேண்டும் அதனால் சீக்கிரமாக வீடு கட்டிக் கொள்ள வேண்டும் என கதிர் சொல்ல, அதெல்லாம் நடக்க ரொம்ப நாள் ஆகும் என முல்லை சொல்கிறார். பின் ஐஸ்வர்யா நைட்டி பற்றி பேச, கதிர் நன்றாக இருந்தால் போட்டுக் கொள்ள வேண்டியது தான், வசதியாக இருந்தால் போட்டுக் கொள்ள வேண்டியது தான் என கதிர் சொல்கிறார்.
கண்ணனும் ஐஸ்வர்யாவும் பேசிக் கொண்டிருக்க, இந்த வீட்டில் நீ நைட்டி எல்லாம் போடாதே என கண்ணன் சொல்கிறார். ஏன் இதையே என்னிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறாய் என ஐஸ்வர்யா கேட்க, அண்ணிகள் நைட்டி போடுவதில்லை அதனால் ஏதாவது பிரச்சனை வந்துவிட கூடாது என சொல்கிறார். நம்ம வீட்டில் நைட்டி போட்டால் அழகாக இருக்கும் என சொல்வ, அங்கே ரொமான்டிக் இருப்ப ஆனால் இப்போது குறையுதே என சொல்ல, கண்ணன் ஐஸ்வர்யா தொழில் கையை போட்டு முத்தம் கொடுக்க போகிறார்.
விஜய் டிவி ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் கோதை மீரா கிருஷ்ணன் யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
அப்போது மூர்த்தி வர அதை எல்லாம் பார்த்துவிடுகிறார். மூர்த்தி தனத்திடம் வந்து கண்ணன் ஐஸ்வர்யாவை நம்ம ரூமில் படுக்க சொல்லலாம் என சொல்கிறார். நானும் நினைத்தேன் ஆனால் கட்டில் இல்லை என்பதால் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை என தனம் சொல்ல, கண்ணனிடம் சென்று எங்க ரூமில் படுங்க என சொல்கிறார். மறுநாள் காலையில் மூர்த்தி ஹாலில் தூங்குவதை கதிர் ஜீவா பார்த்து வருத்தப்படுகிறார். தனத்திடம் எல்லாரும் இங்கே தான் தூங்குனீங்களா என கேட்க ஆமாம் என தனம் சொல்கிறார். ஜீவா இப்படி இடம் இல்லாமல் இருப்பது கஷ்டமாக இருப்பதாக சொல்கிறார்.