தாத்தா பெயரை கேட்டு லக்ஷ்மியை அழ வைக்கும் ஹேமா, கண்ணம்மா கஷ்டப்படுவதை பார்த்து அனுதாபப்படும் பாரதி – இன்றைய எபிசோட்!

0
தாத்தா பெயரை கேட்டு லக்ஷ்மியை அழ வைக்கும் ஹேமா, கண்ணம்மா கஷ்டப்படுவதை பார்த்து அனுதாபப்படும் பாரதி - இன்றைய எபிசோட்!
தாத்தா பெயரை கேட்டு லக்ஷ்மியை அழ வைக்கும் ஹேமா, கண்ணம்மா கஷ்டப்படுவதை பார்த்து அனுதாபப்படும் பாரதி - இன்றைய எபிசோட்!
தாத்தா பெயரை கேட்டு லக்ஷ்மியை அழ வைக்கும் ஹேமா, கண்ணம்மா கஷ்டப்படுவதை பார்த்து அனுதாபப்படும் பாரதி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா லக்ஷ்மியின் தாத்தா பெயரை கேட்க லக்ஷ்மிக்கு தெரியவில்லை அதனால் லட்சுமி வருத்தப்படுகிறார். பின் கண்ணம்மா படுகிற கஷ்டத்தை பாரதி பார்த்து வருத்தப்படுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி துணி எல்லாத்தையும் தூக்கி எறிந்துவிட்டு நேரமாகிவிட்டது என பதட்டத்தில் இருக்கிறார். அப்போது கண்ணம்மா வந்து என்ன என கேட்க, எனக்கு நேரமாகிவிட்டது போடுவதற்கு ட்ரெஸ் இல்லை எதாவது கடை இருந்தால் சொல்லு என சொல்கிறார். கண்ணம்மா முதலில் நான் தான் ட்ரெஸ் அயன் பண்ணேன் அப்பறம் நீங்க திட்டுவீங்க என நினைத்து ட்ரெஸ் எடுத்துவைத்துவிட்டு மீதி ட்ரெஸ் அயன் பண்ண குடுத்தேன் அதை கொண்டு வரவா என கேட்க சரி என பாரதி சொல்கிறார்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் செயலி அறிமுகம்!

பாரதிக்கு நேரமாகிவிட போன் பேசிக் கொண்டே மேஜையில் காலை இடித்துக் கொள்கிறார். அவர் வலியால் இருக்க அதை பார்த்த கண்ணம்மா பாரதியை உட்கார வைத்து வலி மருந்து போட்டு காலை நீவி விடுகிறார். பின் பாரதி மனதை சமாதானம் செய்ய மூச்சு விட சொல்கிறார். பாரதி அதை செய்து நன்றாக இருப்பதாக உணர்கிறார். பின் லட்சுமி ஹேமா பேசிக் கொண்டிருக்க ஹேமா உன் நண்பர்களை பற்றி கேட்கிறார் லட்சுமி சொல்ல, எனக்கு இங்கே இருப்பதை விட உங்க வீட்டில் இருப்பது தான் பிடிக்கும் என ஹேமா சொல்கிறார்.

பின் லட்சுமியிடம் நீங்க என்ன பரம்பரை என கேட்கிறார். எனக்கு அப்படி என்றால் என்ன என தெரியாது என்று லட்சுமி சொல்ல உன் தாத்தா பெயரை சொல்லு என ஹேமா கேட்கிறார். லட்சுமி தெரியாது என சொல்ல பாட்டி பெயரை கேட்கிறார். அதையும் சொல்ல, நான் சௌந்தர்யா வேணு பரம்பரை அப்படி தான் என் பாட்டி சொல்ல சொல்லிருக்காங்க, நம்ம வகுப்பில் அனைவருக்கும் பரம்பரை இருக்கிறது என ஹேமா சொல்கிறார்.

இது பற்றி பாட்டியிடம் கேட்போம் என ஹேமா செல்ல, சௌந்தர்யாவிடம் சென்று லக்ஷ்மிக்கு என்ன பரம்பரை என்று தெரியாதாம், என சொல்லி சிரிக்கிறார். உடனே அஞ்சலி அப்படி சொல்லாதே என சொல்ல, ஹேமா மீண்டும் மீண்டும் சிரிக்கிறார். எனக்கு உண்மையாகவே தெரியாது என லட்சுமி அழுது கொண்டே செல்ல, ஹேமாவை சௌந்தர்யா சத்தம் போடுகிறார். பின் அகில் கோவப்பட்டு பாரதி செய்த தப்பிற்கு லட்சுமி ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும். இதெல்லாம் சரியாக வரவில்லை இப்பவே உண்மையை சொல்லுவோம் வருவது வரட்டும் என அகில் சொல்கிறார்.

பொண்ணு தான் பிறக்கும்னு நினைச்சோம்’ – பாரதி கண்ணம்மா வில்லி பரினா ஓபன் டாக்!

மறுபக்கம் கண்ணம்மா வீடு வீடாக சென்று மாவு பாக்கெட் போடுகிறார். இவள் என்ன செய்கிறாள் என பின் தொடர்ந்து பாரதி பார்க்க கண்ணம்மா கஷ்டப்பட்டு மாவு பாக்கெட் தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் நடக்கிறார். கண்ணம்மா ஒரு இடத்தில் முடியாமல் உட்கார்ந்துவிட பாரதி உதவி செய்யலாம் என இறங்குகிறார். ஆனால் அவரை அவருடைய தன்மானம் தடுத்துவிடுகிறது. மறுபக்கம் கண்ணம்மா இரவு உதவி செய்தது பற்றி காலையில் உதவி செய்தது பற்றி பாரதி நினைத்து பார்க்கிறார். ஆனால் இப்படி பாவப்பட்டு உதவி செய்தால் பின் நம்மளுடன் ஒட்டிக் கொள்வாள் என பாரதி அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!