“நான் தான் லட்சுமியின் அம்மா என்ற” உண்மையை சொன்ன கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
"நான் தான் லட்சுமியின் அம்மா என்ற" உண்மையை சொன்ன கண்ணம்மா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
“நான் தான் லட்சுமியின் அம்மா என்ற” உண்மையை சொன்ன கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமி அம்மா அப்பா வரும் வரை அனுப்பமாட்டேன் என பாரதி பிடிவாதமாக இருக்கிறார். உடனே கண்ணம்மா “நான் தான் லட்சுமியின் அம்மா என்ற உண்மையை போட்டுடைக்கிறார். பின்னர் பாரதி குடும்பத்தில் அனைவரும் கண்ணம்மாவிற்காக பொய் சொன்னதை பற்றி பேசுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி ஹேமாவை இத்தனை நாள் பார்த்துக் கொண்டதற்கு என்ன வேண்டும் என கேட்கிறார். ஆனால் எனக்கு எதுவும் வேணாம் லட்சுமியை என்னுடன் அனுப்பி வைத்தால் போதும் என சொல்கிறார். பாரதி நான் எத்தனை தடவை சொல்வேன். லட்சுமியின் அம்மா அப்பா வரட்டும் அப்போ சொல்கிறேன் என சொல்கிறார். என்னை நம்பி தான லட்சுமியை விட்டாங்க அப்பறம் என்ன அனுப்புங்க என கண்ணம்மா சொல்ல, அனுப்ப மறுக்கிறார் பாரதி.

கடைசியாக கேட்கிறேன் அனுப்ப முடியுமா என சொல்ல, அனுப்ப முடியாது என பாரதி சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். பின்னர் கண்ணம்மா கோவத்துடன் சொடக்கு போட்டு கூப்பிடுகிறார். லட்சுமியை என்னுடன் அனுப்ப முடியுமா முடியாத என கேட்கிறார் கண்ணம்மா. நானும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன் லட்சுமி அம்மா அப்பாவை வர சொல்லு என சொல்கிறார். உடனே கண்ணம்மா கோபத்துடன் நான் தான் லட்சுமியின் அம்மா என சொல்கிறார். மறைந்து நின்னு சௌந்தர்யாவும் வேணுவும் இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள்.

சன் டிவி பிரபல சீரியலின் பெயர் மாற்றம் – வெளியான தகவல்!

இதற்கு தான் இத்தனை நாள் எதிர்பார்த்திருந்தேன். லட்சுமி உன் பொண்ணு தான் என்ற உண்மையை மறைந்து எப்படி நவரசத்தையும் கலந்து பொய் சொல்லிருக்க என்று பாரதி கேட்க, ஆமாம் பொய் சொன்னேன் இப்போ என்ன, லட்சுமி என் பொண்ணு என்று உனக்கு தெரிய வேண்டாம் என நினைத்து தான் பொய் சொன்னேன் என சொல்கிறார். நீ சொன்ன பொய்க்கு உடந்தையா அந்த சின்ன குழந்தையை மாற்றி வைத்திருக்க என்று கண்டபடி கண்ணம்மாவை திட்டுகிறார். நீ ஒழுங்கா இருந்த நான் ஏன் உன்னிடம் மறைக்க போகிறேன் என கண்ணம்மா சொல்கிறார்.

லட்சுமியை படிக்க வைப்பதற்காக தான் இப்படி பொய் சொன்ன என்று கண்ணம்மாவை சொல்ல, நான் உன்னை நம்பி ஒன்னும் வாழவில்லை என்னை நம்பி தான் வாழுகிறேன் என கண்ணம்மா சொல்கிறார். அப்போ ஏன் பொய் சொன்ன என்று கேட்க, நீ என்னை அசிங்கப்படுத்தின மாதிரி என் பொண்ணையும் எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்துவ என சொல்கிறார். சின்ன பொண்ணுகிட்ட எப்படி நடந்துக்கணும் என்று எனக்கு தெரியும் உன்னை போல இல்லை என பாரதி சொல்கிறார்.

தனது கணவரை பிரிகிறாரா சமந்தா? திருமண உறவில் விரிசல்? ஓபன் டாக்!

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது லட்சுமி சமையல் அம்மா என அழைத்துக் கொண்டு வருகிறார். இனிமேல் என்னை சமையல் அம்மா என அழைக்க வேண்டாம். அம்மா என்று கூப்பிடு என கண்ணம்மா லட்சுமியிடம் சொல்லி அங்கிருந்து அழைத்து செல்கிறார். பின்னர் சௌந்தர்யாவும் வேணுவும், பாரதி என்ன செய்ய போகிறார் என நினைத்து அமர்ந்திருக்கிறார்கள். அப்போது பாரதி அங்கே வர இருவரும் பயந்து எழுந்து நிற்கின்றனர்.

பாரதி கண்ணம்மா எவ்வளவு பொய் சொன்னாலும் அவளுக்கு ஆதரவாக இருக்கீங்க ஆனால் எனக்கு யாருமே ஆதரவாக இல்லை என சொல்கிறார். என்ன பார்த்தால் ஜோக்கர் மாதிரி இருக்கா. யாருக்கோ குழந்தை பெற்றுக் கொள்வார். அதற்கு என் பெயரை கொடுத்திருப்பார். ஊருக்குள்ள எல்லாரிடமும் நான் தான் அப்பா என்று சொல்வர் நான் அமைதியாக இருக்க வேண்டுமா என சொல்கிறார். யாரோ ஒரு குழந்தையை என்னிடம் பழகவிட்டால் நான் எதுவும் சொல்லாமல் அவளிடம் பழகிவிடுவேனா என சொல்லி வருத்தப்படுகிறார். நான் லட்சுமியை பார்த்துக் கொண்டதை பார்த்து நீங்க சந்தோசப்பட்டிருக்கீங்க என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!