இரட்டை குழந்தைகள் பிறந்த உண்மையை அறிந்த கண்ணம்மா, உண்மையை சொல்வாரா சௌந்தர்யா? – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
இரட்டை குழந்தைகள் பிறந்த உண்மையை அறிந்த கண்ணம்மா, உண்மையை சொல்வாரா சௌந்தர்யா? - இன்றைய
இரட்டை குழந்தைகள் பிறந்த உண்மையை அறிந்த கண்ணம்மா, உண்மையை சொல்வாரா சௌந்தர்யா? - இன்றைய "பாரதி கண்ணம்மா" எஇரட்டை குழந்தைகள் பிறந்த உண்மையை அறிந்த கண்ணம்மா, உண்மையை சொல்வாரா சௌந்தர்யா? - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!பிசோட்!!
இரட்டை குழந்தைகள் பிறந்த உண்மையை அறிந்த கண்ணம்மா, உண்மையை சொல்வாரா சௌந்தர்யா? – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், மருத்துவமனைக்கு செல்லும் கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தை தான் பிறந்துள்ளது என்ற உண்மை தெரிந்துவிடுகிறது. இது பற்றி சௌந்தர்யாவிடம் கண்ணம்மா கேள்வி கேட்கிறார். ஆனால் சௌந்தர்யா பதில் சொல்லாமல் இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மாவிற்கு தலை சுற்றல் இருப்பதால் மருத்துவமனை செல்கிறார். அப்போது மருத்துவர் ஒரு மாதிரி பார்க்கிறார். பின்னர் கண்ணம்மாவை சோதித்துவிட்டு எதுவும் பிரச்சனை இல்லை. என்ன வேலை செய்கிறீர்கள் என்று டாக்டர் கேட்கிறார். நான் ஸ்கூலில் சமைச்சு கொடுப்பேன், மாவு அரைத்து கொடுப்பேன், பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை செய்கிறேன் என சொல்ல எத்தனை வேலை தான் செய்வீங்க என்று டாக்டர் கேட்கிறார்.

சரியாக ரெஸ்ட் எடுக்காத காரணத்தால் நீர் சத்து குறைந்துள்ளது. நல்ல சத்துள்ளது சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தால் சரி ஆகிவிடும் என சொல்லி அவர் பெயரை கேட்கிறார். அவர் கண்ணம்மா என்று சொல்ல டாக்டர் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். அதான் உன்னை எங்கையோ பார்த்த மாதிரி இருந்தது. நீ கண்ணம்மா தான உன் மாமியார் சௌந்தர்யா தான என்று கேட்கிறார். அத்தையை உங்களுக்கு தெரியுமா என்று கேட்க, நீ 8 வருடங்களுக்கு முன் மாசமாக இருக்கிறப்ப என்னை பார்க்க வந்த ஆனால் ரிப்போர்ட் வாங்காம போய்விட்டாய் .

தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு வந்த சோதனை – சர்ச்சை கருத்துகளுக்கு சாடல்!

அதன் பின்னர் உன்னை தேடி உன் அத்தை வந்தாங்க அவங்களும் ரிப்போர்ட் வாங்கவில்லை கடைசி வரை அது என்னிடம் தான் இருந்தது என சொல்கிறார். அப்பறம் உன் குழந்தைகள் எப்படி இருக்காங்க என்று கேட்க எனக்கு ஒரு பொண்ணு தான் என்று கண்ணம்மா சொல்கிறார். இல்லை உன்னோடைய இரண்டாவது பொண்ணு எப்படி இருக்கிற என்று கேட்கம் நான் குடும்ப பிரச்சனை காரணமாக தனியாக தான் இருக்கேன் எனக்கு ஒரு பொண்ணு தான் என்று சொல்கிறார்.

ஏன்உனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் இரண்டாவது குழந்தைக்கு என்ன ஆச்சு என்று கேட்க கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறார். எனக்கு ஒரு குழந்தை தான் பிறந்தது என்று கண்ணம்மா சொல்ல, உன் ஸ்கேன் பார்த்தது நான் தான் அதில் இருந்தது இரட்டை குழந்தை, அதை உன்னிடமும் சொல்ல முடியவில்லை உன் அத்தையிடமும் சொல்ல முடியவில்லை என சொல்கிறார். அதை கேட்ட கண்ணம்மாவிற்கு ஒரு மாதிரி ஆகிறது.

கோபியை அடித்து தள்ளிய எழில் – பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த காட்சி!

எதுவும் ஸ்கேனில் தப்பு நடக்க வாய்ப்புள்ளதா என கேட்க இரட்டை குழந்தை கண்டுபிடிப்பது சாதாரணம் என சொல்கிறார். உடனே கண்ணம்மா அங்கிருந்து வெளியே கிளம்ப குழந்தை பிறந்ததை நினைத்து பார்க்கிறார். பின்னர் சௌந்தர்யாவிற்கு எதுவும் சம்மந்தம் இருக்கும் என நினைத்து போன் செய்கிறார். சௌந்தர்யா போனை எடுத்ததும் லட்சுமி பற்றி பேசுகிறார். கண்ணம்மா என் மீது சத்தியமாக நான் கேட்பதற்கு பதில் சொல்ல வேண்டும் என சொல்கிறார்.

அதற்கு சௌந்தர்யா சொல்லு கண்ணம்மா என்று சொல்ல, எனக்கு இரட்டை குழந்தை பிறந்ததா என்று கேட்கிறார். சௌந்தர்யா எதுவும் பேசாமல் நிற்க நான் பேசுறது கேட்கிறதா என சொல்கிறார். நீ பேசுவது கேட்கவில்லை என சொல்லி போனை வைக்கிறார் சௌந்தர்யா. வேணு என்னாச்சு என்று கேட்க கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தை பிறந்தது தெரிந்துவிட்டது என சொல்கிறார். அவள் என்னிடம் அழுத்தமாக கேட்பதை பார்த்தால் நிச்சயமாக உண்மை தெரிந்துவிட்டது என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!