லட்சுமி நினைப்பாக இருக்கும் கண்ணம்மா, விஷ மாத்திரைகளை சாப்பிடும் அஞ்சலி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

0
லட்சுமி நினைப்பாக இருக்கும் கண்ணம்மா, விஷ மாத்திரைகளை சாப்பிடும் அஞ்சலி - இன்றைய
லட்சுமி நினைப்பாக இருக்கும் கண்ணம்மா, விஷ மாத்திரைகளை சாப்பிடும் அஞ்சலி - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!!
லட்சுமி நினைப்பாக இருக்கும் கண்ணம்மா, விஷ மாத்திரைகளை சாப்பிடும் அஞ்சலி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமி நினைப்பில் கண்ணம்மா இருப்பதால் அவள் வீட்டிற்கு வந்தது போல கனவு காண்கிறார். பின்னர் அஞ்சலி உயிரை பறிக்கும் மருந்தை அகிலன் எடுத்து கொடுக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமியை பிரிந்து இருக்கும் கண்ணம்மா, சமைக்கும் போது லட்சுமி பின்னாடி வருகிறார். கண்ணம்மா லட்சுமியை பார்த்து எத்தனை நாள் ஆகிறது என நினைத்து சந்தோசப்படுகிறார். நான் டாக்டர் அங்கிளிடம் எத்தனை தடவை கொண்டு போய் விட சொன்னேன். மேலும் எனக்கு அங்கே நீ சமைச்ச சாப்பாடு போல இல்லை என சொல்லி ஆம்ப்லேட் போடுகிறார். அப்போது ஹேமா கண்ணம்மா தனியாக பேசுவதை பார்த்து சமையல் அம்மா என்று கூப்பிடுகிறார்.

இந்தியாவில் Oppo F19s மொபைல் போன் விரைவில் – சூப்பர் மொபைல்!

இதெல்லாம் கனவு என நினைத்த கண்ணம்மா மிகவும் வருத்தமடைகிறார். அப்போது ஹேமா உங்க பொண்ணு எங்க நான் வந்ததுல இருந்து பார்க்கவே இல்லை என சொல்கிறார். அவ அவளோட அப்பா கூட இருக்கிறார் என்று சொல்ல, நான் என் அப்பாவை விட்டு உங்களுடன் இருக்கிறேன். உங்க பொண்ணு அவ அப்பாவிடம் இருக்கிறார். ஆச்சர்யமாக இருக்கிறது என்று சொல்கிறார் ஹேமா. இவள் விருப்பத்துடன் என்னிடம் இருக்கிறாள். லட்சுமி விருப்பத்துடன் இருக்கிறாளா என்று தெரியவில்லையே என கவலைப்படுகிறார்.

அஞ்சலி ரூமில் அமர்ந்திருக்க அகில் கோவில் பிரசாதத்தை கொடுக்கிறார். கையில் என்ன என்று அகில் கேட்க மாத்திரை என சொல்கிறார். அதை வாங்கி பார்த்த அகில் பாரதி எழுதி கொடுத்ததா அப்போ சரியாக தான் இருக்கும், வெண்பா கொடுத்தது தான் வேணாம் என சொல்கிறார். மருந்து வாங்கி வந்து அதை அஞ்சலிக்கு சாப்பிட கொடுக்கிறார். அஞ்சலி அதை சாப்பிட்டு விடுகிறார். பின்னர் வெண்பா பாரதியை பார்க்க செல்கிறார்.

தமிழக ஆசிரியர்கள் கவனத்திற்கு – அரசின் அதிரடி உத்தரவு!

அங்கே பாரதி வர நேரம் ஆனதால் ஒருவேளை கண்ணம்மா வீட்டிற்கு போயிருப்பானோ என சந்தேகப்படுகிறார். ஆமாம் ஹேமா இன்னும் 4,5 நாள் இருக்கேன் என்று சொல்கிறாள். அதான் அங்கையே இருக்கட்டும் என்று சொல்லிருக்கேன் என சொல்கிறார். கண்ணம்மா லட்சுமியை பற்றி கண்ணம்மா கேட்டாளா என்று சொல்ல ஆமாம் அவ கேட்டால் ஆனால் நான் விடவில்லை என சொல்கிறார். என்றாவது ஒருநாள் தெரிய வரும் என சொல்கிறார். அவளா வந்து கேட்கட்டும் அப்போ இருக்கு என சொல்ல, வெண்பா கண்ணம்மாவை பற்றி பாரதியை கோவப்படுத்துகிறார்.

பண்டிகை காரணமாக இரவு ஊரடங்கில் தளர்வுகள் – குஜராத் அரசு உத்தரவு!

பின்னர் கண்ணம்மா சௌந்தர்யாவிற்கு போன் செய்து லட்சுமி பற்றி கேட்கிறார். அவள் அதிகமாக கேள்வி கேட்பாளே அவளுக்கு மனதில் எவ்வளவு குழப்பம் உள்ளதோ என வருத்தப்படுகிறார். எங்களிடம் அத்தனை கேள்வி கேட்கிறாள் என சௌந்தர்யா சொல்ல, எத்தனை நாள் இப்படியே இருக்க நான் பிறந்ததில் இருந்து அவளை பிரிந்ததே இல்லை என சொல்கிறார். ஆனால் பாரதி அவளை நன்றாக பார்த்துக் கொள்கிறான் என சொல்லவும் கண்ணம்மா சற்று நிம்மதி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!