கண்ணம்மா இரவு முழுவதும் வேலை செய்வதை பார்த்து வருத்தப்படும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா நள்ளிரவில் வேலை செய்வதை பார்த்து பாரதி வருத்தப்படுகிறார். இது பற்றி கண்ணம்மாவிடம் கேட்க சவால் விட்டால் மாட்டும் போதுமா வாழ்ந்து காட்டனும்ல என்று சொல்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி தூங்கி கொண்டிருக்கும் போது சத்தம் கேட்கிறது. வெளிய வந்து பார்த்தால் கண்ணம்மா மாவு அரைத்து கொண்டிருக்க, பாரதி என்ன செய்கிறாய் என்று கேட்கிறார். பார்த்தால் தெரியவில்லையா என்று கேட்கிறார். வீட்டிற்கு எதற்கு 2 கிரைண்டரில் மாவு அரைக்கிறாய் என்று கேட்க நாங்க விற்க அரைக்கிறேன் என்று சொல்கிறார்.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீர்ரகள் நாடு திரும்பினர் – மத்திய அரசு கௌரவிப்பு!
கீழ் வீட்டில் இருக்கும் அக்கா, நான், துளசி சேர்ந்து மாவு அரைத்து இந்த பகுதியில் உள்ள எல்லா கடைகளிலும் கொடுப்போம் என்று சொல்ல பாரதி வருத்தப்படுகிறார். இப்பவே மணி 1 ஆச்சு எப்போ தூங்குவ என்று கேட்க தினமும் 2 மணி ஆகும் என்று கண்ணம்மா சொல்கிறார். காலையில் எத்தனை மணிக்கு எந்திரிப்ப என்று கேட்க 6, 6.30க்கு எந்திரிப்பேன் என்று சொல்கிறார்.
தினமும் இவ்வளவு லேட்டா தூங்கி எந்திரிச்சா உடம்பு என்ன ஆகும் என பாரதி கேட்கிறார். என்ன செய்ய சார் வாழ்ந்து காட்டனும்ல, சவால் விட்ட மட்டும் போதுமா வாழணும்ல, இது மட்டும் இல்ல சில அரசு அலுவலகங்களில் சமைச்சு கொடுப்பேன், தையல் தைப்பேன், மெழுகு வர்த்தி செய்வேன் சும்மாவே இருக்கமாட்டேன் என்று சொல்கிறார்.
இந்தியாவில் கொரோனா 3ம் அலை தொடங்கி விட்டது – அலர்ட் ரிப்போர்ட்!
நீங்க போய் தூங்குங்க எனக்கு நைட் லேட்டா தூங்கி பழகிருச்சு ஆனால் உங்களுக்கு அப்படி இல்லை என்று சொல்கிறார். வெண்பா கண்ணம்மாவின் வீட்டிற்கு வர அங்கே போலீசார் அவரை தடுத்து நிறுத்துகின்றனர். கண்ணம்மாவை நினைத்து பாரதி துக்கம் வராமல் இருக்க, வெகு நேரம் ஆகி கண்ணம்மா தூங்கிவிட்டலா என வெளியே வந்து பார்க்கிறார். கண்ணம்மா வெளியே திண்ணையில் தூங்கி கொண்டிருக்கிறார். பாரதி அதை பார்த்து கவலைப்படுகிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.