கண்ணம்மா வீட்டில் பாரதி தங்கியதை தெரிந்துக் கொண்ட சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று, சௌந்தர்யா பாரதியை காணவில்லை என கண்ணம்மாவிற்கு போன் செய்து பேசுகிறார். அப்போது பாரதி அங்கேயே தங்கிவிட்டார் என தெரிந்துக் கொள்கிறார். வெண்பா சௌந்தர்யாவிற்கு போன் செய்து பாரதி பற்றி கேட்க, கண்ணம்மா வீட்டில் இருப்பதை சௌந்தர்யா சொல்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதியை ரொம்ப நேரம் வீட்டிற்கு வரவில்லை என பாரதிக்கு போன் செய்து பார்க்கிறார் வேணு. அப்போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. உடனே பாரதி குடித்துவிட்டு எங்கேயாவது விழுந்திருப்பான என்று குழப்பத்தில் சௌந்தர்யா கண்ணம்மாவிற்கு போன் செய்கிறார். கண்ணம்மாவிடம் பாரதி அங்கே வந்தன என்று கேட்கிறார்.
தமிழகத்தில் ஆகஸ்ட் 9 முதல் கல்லூரிகள் திறப்பு – பேராசிரியர்கள் கட்டாயம் வர உத்தரவு!
கண்ணம்மா எப்படி சொல்வதென்று குழப்பத்தில், வந்தாரு அத்தை என்று சொல்கிறார். வந்தன அப்போ ஏன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை. அங்கிருந்து எத்தனை மணிக்கு கிளம்பினான் என்று கேட்கிறார். கிளம்பவில்லை என்று சொல்ல, அப்போ பாரதியிடம் போனை கொடுக்க சொல்கிறார். அவர் பசங்களுடன் தூங்க சென்றுவிட்டார் என்று சொல்ல, அதை கேட்டு சௌந்தர்யா மகிழ்ச்சி அடைகிறார்.
பின்னர் வெண்பா பாரதி எங்கே என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்க, சௌந்தர்யாவிற்கு போன் செய்கிறார். பாரதி போன் ஆப் செய்து வைக்கப்பட்டிற்கு, அவனிடம் போனை கொடுங்கள் என்று சொல்ல, அவன் பொண்டாடி கூட இருக்கான் என்று சௌந்தர்யா சொல்கிறார். அதை கேட்டு வெண்பா கோபமடைந்து போனை தூக்கி எறிகிறார்.
ஆகஸ்ட் 11 முதல் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!
பின்னர் பாரதி தூங்கி கொண்டிருக்க, கண்ணம்மா மாவு அரைத்து கொண்டிருக்கும் சத்தம் கேட்கிறது. அப்போது பாரதி அங்கே வந்து தண்ணி வேண்டும் என்று கேட்கிறார். கண்ணம்மா எடுத்துக் கொடுத்த பின்னர் கண்ணம்மா மாவு அரைப்பதை பார்த்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!