அப்பா பாசத்தை நினைத்து ஏங்கும் லட்சுமி, ஹேமாவை பார்க்க கண்ணம்மா வீட்டிற்கு வரும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா அவளது அப்பாவை பற்றி பேசியதை கேட்ட லட்சுமி, தனக்கு மட்டும் ஏன் அப்பா இல்லை என கண்ணம்மாவிடம் சொல்லி கவலைப்படுகிறார். அகில், அஞ்சலிக்கும் இடையே இருக்கும் சண்டையை சௌந்தர்யா சரி செய்கிறார். ஹேமாவை பார்க்க பாரதி மீண்டும் கண்ணம்மா வீட்டிற்கு வருகிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமாவிடம் கண்ணம்மா உன் அப்பாவை எவ்வளவு பிடிக்கும் என கேட்கிறார். அதற்கு தன் அப்பாவை ரொம்ப பிடிக்கும் என சொல்கிறார். ஏன் என்று கண்ணம்மா கேட்க என் அப்பா ரோடில் யாரவது காசு கேட்டால் காசு கொடுப்பாரு, நிறைய பேர் படிக்க உதவி பண்ணுவாரு, ஹாஸ்பிடல் போன டாடி விட வசாயனவங்க கூட டாடி காலில் விழுவாங்க அதான் எனக்கு டாடி ரொம்ப பிடிக்கும் என்று சொல்கிறார்.
ஆனால் டாடி திடிர்னு குடிக்க ஆரம்பிச்சுருவாங்க அதான் எனக்கு பிடிக்காது என்று சொல்கிறார். இதை எல்லாம் கேட்ட லட்சுமி கண்ணம்மாவிடம் வந்து எனக்கு மட்டும் ஏன் அப்பா இல்லை என்ன பார்க்க கூட வரல, ஒரு போன் கூட பேசல என்று கவலைபடுகிறார். உன் அப்பா கண்டிப்பா வருவாங்க உன்கூட பாசமா இருப்பாரு என்று சமாதானம் சொல்கிறார்.
நாடு முழுவதும் இதுவரை 48.89 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய அரசு தகவல்!
அகில், அஞ்சலியிடம் முகம் கொடுத்து பேசாமல் இருக்க, அஞ்சலி கொய்யாப்பழம் வெட்டி கொடுக்கிறார். ஆனால் அகில் அதை சாப்பிட மறுக்கிறார். அப்போது சௌந்தர்யா அங்கே வருகிறார். இரண்டு பேருக்கும் என்ன சண்டை என கேட்க அஞ்சலி அகில் தான் பேச மாற்றான் என்று சொல்கிறார். சௌந்தர்யா அவள் கர்ப்பமாக இருக்கிறார். நீ தான் அவளோட தப்பு எல்லத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என சமாதானம் செய்கிறார்.
பின்னர் லட்சுமி ஏசி பற்றி எதுமே தெரியாமல் இருக்க ஹேமா ஏசியை பற்றி சொல்லி கொடுக்கிறார். ஆனால் லட்சுமி நம்பாமல் இருக்க அப்போது அங்கே பாரதி வருகிறார். பாரதியிடம் லட்சுமி கேட்க பாரதி ஏசி பற்றி சொல்லிக் கொடுக்கிறார். கண்ணம்மா அங்கே வந்து இருவரையும் தேட மூன்று பேரும் ரூமில் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். எப்போ வந்தீங்க என்று கேட்க இப்போ தான் வந்தேன் என்று சொல்கிறார். ஹேமா உடம்பு சரியாகி விட்டதா நம்ம வீட்டிற்கு போகலாமா என்று கேட்க இன்னும் 2 நாட்கள் லட்சுமியுடன் இருக்கிறேன் என்று சொல்கிறார். உடனே பாரதி ஹேமா உடலை சோதனை செய்து விட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!