பாரதியை சந்தித்து கதறி அழுத வெண்பா, திருமண வாழ்க்கை பற்றி புரிய வைக்கும் வேணு – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
பாரதியை சந்தித்து கதறி அழுத வெண்பா, திருமண வாழ்க்கை பற்றி புரிய வைக்கும் வேணு - இன்றைய
பாரதியை சந்தித்து கதறி அழுத வெண்பா, திருமண வாழ்க்கை பற்றி புரிய வைக்கும் வேணு - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
பாரதியை சந்தித்து கதறி அழுத வெண்பா, திருமண வாழ்க்கை பற்றி புரிய வைக்கும் வேணு – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் வெண்பா பாரதியை பார்க்க வந்து அவரிடம் உனக்கு விருது கொடுக்கும் நிகழ்ச்சிக்கு என்னை ஏன் அழைக்கவில்லை என வருத்தப்பட்டு பேசுகிறார். பின் வேணு பாரதிக்கு கல்யாண வாழ்க்கை பற்றி அறிவுரை சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதி மருத்துவமனையில் இருக்க அப்போது வெண்பா வருகிறார். பாரதியிடம் நீ என்னை சுத்தமாக மறந்துவிட்டாய் என சொல்ல பாரதி உனக்கும் எனக்கும் இடையே பெரிய வாக்குவாதம் வந்தது அதை மறக்க நேரம் கொடுக்காமல் இருக்கிறாய் என சொல்கிறார். பின் வெண்பா உனக்கு எதோ விருது கொடுத்தார்களாம் அதை என்னிடம் கூட நீ சொல்லவில்லை.ஆனால் அந்த நிகழ்ச்சியில் கண்ணம்மா இருக்கிறாள். உன்னுடைய எல்லா சந்தோஷத்திலும் கண்ணம்மா இருக்கிறாள்.

TN Job “FB  Group” Join Now

ஆனால் நான் உன்னுடன் இருப்பதில்லை என சொல்லி வருத்தப்பட்டு அழுகிறார். பின் பாரதி வெண்பாவை சமாதானம் செய்ய அழாதே யாரோ வருவது போல இருப்பதாக சொல்கிறார். பின் நர்ஸ் ஒருவர் வந்து பத்திரிகைகளை கொடுக்க வெண்பா இது என்ன பாரதி வீட்டில் எதாவது நிகழ்ச்சியா என கேட்கிறார். பின் பாரதி என் அம்மாவின் நண்பர் மருத்துவமனை வாங்கி இருக்கிறார் அதில் டாக்டராக நான் சேர்ந்து இருக்கிறேன். அந்த மருத்துவமனை திறப்பு விழா பத்திரிகை என சொல்கிறார்.

மதுரை, சிவகங்கை உட்பட 10 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!

பின் வெண்பாவிடம் கொடுத்து நீயும் கண்டிப்பாக வர வேண்டும் என சொல்கிறார். மறுபக்கம் லட்சுமி அப்பா பெயர் பலகையை வைத்து அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறார். அப்பா எவ்வளவு படித்து இருக்கிறார் என நினைத்து பார்க்கிறார். நானும் இதே போல படித்து கலெக்டர் ஆகி என் பெயர் பின்னாடி போட வேண்டும் அது தான் என்னுடைய ஆசை என பேசிக் கொள்கிறார். அப்போது கண்ணம்மா வர லட்சுமி பெயர் பலகையை மறைத்து வைக்கிறார்.

கண்ணம்மா அதை பார்க்க செல்ல லட்சுமி வந்து அதை வாங்கி வைக்கிறார். பின் பாரதி அமர்ந்திருக்க வேணு வருகிறார். என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய் என கேட்க, பாரதி உங்களுக்கும் விக்ரம் அங்கிளிற்கும் இடையே உள்ள நட்பை பற்றி நினைத்து பார்க்கிறேன். அம்மாவை விக்ரம் அங்கிள் காதலித்தார் என தெரிந்தும் கூட எப்படி இவ்வளவு நட்பாக இருக்கீங்க என கேட்க, சௌந்தர்யா மீது விக்ரமிற்கு அன்பு இருக்கிறது.ஆனால் எனக்கு தான் சௌந்தர்யாவை திருமணம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதனால் சௌந்தர்யா மீது வைத்த பாசம் போகாது அதனால் அதை நான் புரிந்து கொண்டேன் என சொல்கிறார்.

TN TRB தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – TET புதிய பாடத்திட்ட விபரங்கள் வெளியீடு!

பின் பாரதி அம்மா உங்களுக்கு அந்த நம்பிக்கையை கொடுத்து இருக்கிறார். ஆனால் கண்ணம்மா அந்த நம்பிக்கையை எனக்கு கொடுக்கவில்லை என சொல்கிறார். அப்போது வேணு நம்பிக்கை என்பது அடுத்தவர் நமக்கு கொடுப்பதில்லை. நாம் அடுத்தவர் மீது வைப்பது என சொல்கிறார். நீ அதை தவறாக புரிந்து வைத்திருக்கிறார். மேலும் இந்த உலகத்தில் சிறந்தது மன்னிப்பது அதை செய்தால் தான் முழு மனிதனாக இருப்பான் என சொல்கிறார். கண்ணம்மா உனக்கு நம்பிக்கை கொடுக்கவில்லையா ஆனால் அது தவறு அவள் அப்போதும் இப்போதும் இப்படியே தான் இருக்கிறாள் ஆனால் நீ அவளை நம்ப வேண்டும் என சொல்கிறார்.

நீ சிறு வயதில் என்னை அப்பா என சொல்லும் போது நம்பினாய் அது போல தான் சில விஷயங்களுக்கு நம்பிக்கை வேண்டும் என சொல்கிறார். கணவன் மனைவி உறவில் நம்பிக்கை முக்கியம், கண்ணம்மாவிற்கு உன் மீது நம்பிக்கை இருக்கிறது ஆனால் உனக்கு தான் கண்ணம்மா மீது இல்லை, இதை நீ கேட்க வேண்டும் என சொல்லவில்லை ஆனால் இது தான் அந்த கேள்விக்கு பதில் என சொல்கிறார். பின் விக்ரம் மருத்துவமனைக்கு எல்லாரும் வர சௌந்தர்யா வேணு பாரதி வருகின்றனர். பின் வேணு சௌந்தர்யாவை மேடையில் அமர சொல்கிறார் விக்ரம் ஆனால் சௌந்தர்யா வேண்டாம் என சொல்ல வேணு சரி என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!