ஹேமா அம்மா யார் என கேட்ட லட்சுமி, வெண்பாவிற்கு திருமணம் நடக்க போவதாக சொன்ன ஜோசியர் – இன்றைய எபிசோட்!

0
ஹேமா அம்மா யார் என கேட்ட லட்சுமி, வெண்பாவிற்கு திருமணம் நடக்க போவதாக சொன்ன ஜோசியர் - இன்றைய எபிசோட்!
ஹேமா அம்மா யார் என கேட்ட லட்சுமி, வெண்பாவிற்கு திருமணம் நடக்க போவதாக சொன்ன ஜோசியர் - இன்றைய எபிசோட்!
ஹேமா அம்மா யார் என கேட்ட லட்சுமி, வெண்பாவிற்கு திருமணம் நடக்க போவதாக சொன்ன ஜோசியர் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமி வகுப்பு டீச்சர் கண்ணம்மாவிடம் டாக்டரை திருமணம் செய்ய நினைக்கிறீர்களா என கேட்கிறார். பின் லட்சுமி ஹேமா அம்மா யார் என்பது பற்றி கேட்கிறார். பின் அகில் அஞ்சலி சிறு விசயத்திற்கு சண்டை போட வேணு வந்து அவர்களுக்கு சமாதானம் செய்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா லட்சுமி ஹேமாவிற்கு சாப்பாடு கொண்டு வந்து காத்துக் கொண்டிருக்க , அப்போது லட்சுமி வகுப்பு டீச்சர் வருகிறார். அப்போது அவர் நீங்களும் ஹேமாவின் அப்பாவும் திருமணம் செய்ய போறீங்க அப்படி எதுவும் திட்டம் இருக்கிறதா என கேட்கிறார். பின் ஏன் அப்படி கேட்கிறீர்கள் என கேட்க ஹேமாவை டூர் பற்றி எழுத சொன்னேன் அப்போது அவள் நீங்க இருவரும் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என எழுதி இருப்பதாக சொல்கிறார். பின் அப்படி ஒரு நினைப்பு இருந்தால் அதை செய்வது சரி தான் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

நீங்க லக்ஷ்மியை வைத்துக் கொண்டு எப்படி கஷ்டப்படுகிறீர்கள், அது போல தான் டாக்டரும் இருக்கிறார் என சொல்ல, அப்படி எல்லாம் எதுவும் இல்லை என கண்ணம்மா சொல்கிறார். அப்போது லட்சுமி வர அவள் என்ன எழுதி இருக்கிறாள் என கேட்கிறார். அப்போது மிஸ் லட்சுமி எழுதியதை தேட லட்சுமி பதட்டம் அடைகிறார். அப்போது ஒருவர் வந்து கூப்பிட அந்த டீச்சர் சென்றுவிடுகிறார். பின் லட்சுமியிடம் கண்ணம்மா ஏன் வித்தியாசமாக நடந்து கொள்கிறாய் என கேட்க, அதெல்லாம் ஒன்றுமில்லை எனக்கு ஒரு சந்தேகம் என லட்சுமி கேட்கிறார்.

கண்ணம்மா என்னது என கேட்க ஹேமாவின் அம்மா யார் என கேட்கிறார். எனக்கு அப்பா அருகில் இல்லாமல் இருந்தாலும் இருக்கிறார் ஆனால் ஹேமாவிற்கு அம்மா யார் என்பதே தெரியாமல் இருக்கிறது என சொல்கிறார். அப்போது கண்ணம்மா எனக்கு தெரியாது என சொல்ல லட்சுமி அம்மா எதோ உண்மையை மறைகிறார் அதை கண்டுபிடிப்போன் என லட்சுமி நினைக்கிறார். பின் கண்ணம்மா ஹேமாவை தேடி செல்கிறார். மறுபக்கம் அகில் அஞ்சலி சிறு விசயத்திற்கு பயங்கரமாக சண்டை போடுகின்றனர். குழந்தை அழும் சத்தம் கூட கேட்காமல் இருவரும் சண்டை போடுகின்றனர்.

தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – சனிக்கிழமை விடுமுறை!

அப்போது வேணு வந்து ஏன் இப்படி சண்டை போடுறீங்க என கேட்க, எப்போ பார்த்தாலும் நானே எல்லா விஷயங்களிலும் விட்டு கொடுக்க வேண்டியதாக இருக்கிறது என அஞ்சலி சொல்ல வேணு அவர்களுக்கு அறிவுரை சொல்கிறார். அதை கேட்டு அகில் அஞ்சலி தவறு செய்ததை உணருகிறார்கள். பின் கண்ணம்மா பள்ளியில் ஹேமாவை தேட ஹேமா வருகிறாள். அவள் கண்ணம்மாவிடம் அப்பாவை திருமணம் செய்வது பற்றி பேசினேன் ஆனால் நீங்க ஒன்றும் சொல்லவில்லை என கேட்க, கண்ணம்மாவிற்கு என்ன சொல்வது என தெரியாமல் இருக்கிறார் அப்போது பெல் அடிக்க நான் சாயங்காலம் காத்திருப்பேன் நீங்க நல்ல பதில் சொல்ல வேண்டும் என ஹேமா சொல்கிறார்.

பின் வெண்பாவிற்கு ஜாதகம் பார்க்க ஒருவரை வர சொல்கிறார். அவரை பிடிக்காமல் வெண்பா இருக்க அவர் வெண்பா ஜாதகத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக சொல்கிறார். ஆனால் எல்லாம் அவளுடைய இஷ்டப்படி நடந்தது இனிமேல் அப்படி நடக்க வாய்ப்பில்லை என சொல்கிறார். அதை கேட்டு வெண்பா அதிர்ச்சி அடைய ஆனால் இத்தனை வருடமாக நீங்க காத்திருந்த கல்யாண யோகம் வர போகிறது என சொல்ல அதை கேட்டு வெண்பா சந்தோசப்படுகிறார். ஆனால் மாப்பிள்ளை நீங்க ஆசைப்பட்டவர் இல்லை உங்களை ஆசைப்பட்டவர் என சொல்ல, வெண்பா கோவப்பட்டு அவரை போக சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!