வெண்பா பேச்சை கேட்டு பாரதிக்கு விவாகரத்து கொடுக்கும் கண்ணம்மா – அதிரடி திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’!

0
வெண்பா பேச்சை கேட்டு பாரதிக்கு விவாகரத்து கொடுக்கும் கண்ணம்மா - அதிரடி திருப்பங்களுடன் 'பாரதி கண்ணம்மா'!
வெண்பா பேச்சை கேட்டு பாரதிக்கு விவாகரத்து கொடுக்கும் கண்ணம்மா - அதிரடி திருப்பங்களுடன் 'பாரதி கண்ணம்மா'!
வெண்பா பேச்சை கேட்டு பாரதிக்கு விவாகரத்து கொடுக்கும் கண்ணம்மா – அதிரடி திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’!

விஜய் தொலைக்காட்சியில் பல அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. தற்போது இந்த சீரியலின் லேட்டஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

பாரதி கண்ணம்மா சீரியல்:

விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும், எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தினை தக்க வைத்திருக்கும் சீரியல் என்றால் அது, பாரதி கண்ணம்மா சீரியல் தான். குடும்பத்தில் நடைபெறும் சண்டைகளை மையமாக வைத்து காட்சிகள் அமைக்கப்பட்டு வருகின்றது. தற்போது இந்த சீரியலில் அதிரடி திருப்பங்களுடன் காட்சிகள் அமைக்கப்பட்டு வருகின்றது. 8 வருடங்களாக பிரிந்து இருக்கும் கண்ணம்மா மற்றும் பாரதி இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் தங்கி இருந்தது, கண்ணம்மாவிற்கு தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என்று தெரிய வந்தது என்று பல உண்மைகள் வெளிவந்துள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ பரீனா மீது ரசிகரின் மோசமான விமர்சனம் – நெகட்டிவ் கமெண்ட்டிற்கு பதிலடி!

இது ஒரு புறம் இருக்க, அஞ்சலி தனது வளைகாப்பு விழாவில் வெண்பாவிற்கு திருமணம் நடைபெறவில்லை என்று மறைமுகமாக கூறி விடுகிறார். கண்ணம்மா தனது இரண்டாவது குழந்தை பற்றி சௌந்தர்யாவிடம் சராமரியாக கேள்விகளை கேட்கிறார். இதற்கு பின் அடுத்து எது போன்ற ட்விஸ்ட்டான காட்சிகள் அமைக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதனை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

சந்தியாவை வீட்டை விட்டு அனுப்ப திட்டமிடும் சரவணன், நிச்சயத்தை நிறுத்த திட்டமிடும் அர்ச்சனா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

அதில் வெண்பாவிற்கு பின் கண்ணம்மா கெஞ்சி கொண்டே செல்வது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கண்ணம்மாவின் குழந்தை பற்றி வெண்பா தனக்கு தெரியும் என்று கூறுவார். அதனால் அதனை தெரிந்து கொள்ள கண்ணம்மா அவரை கெஞ்சுவார் என்றும், இந்த சூழலை பயன்படுத்தி வெண்பா, கண்ணம்மாவை விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட சொல்வார். ஆனால், இதனை அறிந்து கொள்ளும் சௌந்தர்யா கடைசி நேரத்தில் வந்து கண்ணம்மாவிடம் உண்மையை கூறி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற அதிரடியான திருப்பங்களுடன் வரும் எபிசோட்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!