கண் முழித்ததும் குழந்தை கூறியதை கேட்டு ஷாக்கான பாரதி – சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!
கண்ணம்மா சரியான நேரத்தில் பிளான் பண்ணி ஆம்புலன்ஸ் ரெடி செய்ததால் மட்டுமே குழந்தை உயிர் பிழைத்துள்ளது. தற்போது ஆபரேஷன் முடிந்து குழந்தை கண் முழித்ததுமே பாரதியையும், கண்ணம்மாவையும் திருமணம் செய்து கொள்ளும்படி கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியும், கண்ணம்மாவும் ஒன்று சேருவார்களா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் கண்ணம்மா தன்னுடன் சேர்ந்து வேலை செய்கிறார் என பாரதி கடுப்பாகி கொண்டிருந்தார். ஆனால், தற்போது கண்ணம்மாவால் மட்டுமே ஒரு குழந்தை உயிர் பிழைத்துள்ளது. அதாவது ஒன்றரை மணி நேரத்தில் இதயத்தை கொண்டு சென்றால் மட்டுமே குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கூறுகிறார்.
பார்வதியை கடத்தியவரை கண்டுபிடிக்கும் சந்தியா – ‘ராஜா ராணி 2’ சீரியல் அடுத்த டிவிஸ்ட்!
உடனடியாக சரியான நேரத்தில் இதயத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ரெடி செய்கிறார். கண்ணம்மா பிளான் செய்தபடியே சரியான நேரத்தில் இதயத்தை கொண்டு சென்று ஆபரேஷன் செய்து குழந்தையை காப்பற்றியுள்ளனர். கண்ணம்மாவால் மட்டுமே இந்த குழந்தை உயிர் பிழைத்திருக்கிறது என கண்ணம்மா மீது பாரதிக்கு நல்ல எண்ணம் தோன்றுகிறது. அனைத்து மருத்துவர்களின் முன்னிலையிலும் குழந்தை உயிர் பிழைத்ததிற்கு கண்ணம்மா தான் காரணம் என கூறி பாரதி பாராட்டுகிறார். குழந்தையின் பெற்றோர்களும் கண்ணம்மாவிற்கு நன்றி கூறினர்.
Exams Daily Mobile App Download
தற்போது தான் அந்த குழந்தை கண் முழித்துள்ளது. கண் முழித்ததும் பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் குழந்தை நன்றி கூறுகிறது. பின்பு பாரதியையும், கண்ணம்மாவையும் பார்த்து அந்த குழந்தை இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. கண்ணம்மாவின் நல்ல செயல்களை பார்த்த பிறகாவது பாரதிக்கு கண்ணம்மா மீதுள்ள சந்தேகம் குறையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.