விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – உண்மையை கண்டறிந்த சௌந்தர்யா!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. அந்த வரிசையில் பாரதி கண்ணம்மா தொடரும் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பொறுமையை இழக்க செய்தது மட்டுமல்லாமல் பல விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகவும், பல புதிய திருப்பங்களுடனும் கூடிய கதைக்களத்தை கொண்டு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட காலம் வரை சில கதையை ஜவ்வாக இழுப்பர். ஆனாலும் அதில் ஒரு சுவாரசியமும், திடீர் திருப்பங்களும் இருக்கும். அந்த வகையில் கடந்த எபிசோடில் லட்சுமி அப்பாவை தேடும் முயற்சியில் இறங்கி தீவிரமாக தேடி வந்தார். அப்போது லட்சுமிக்கு உண்மை தெரிய வருமா? அப்பா பாரதி தான் என தெரிந்தவுடன் அடுத்து என்ன நடக்கும்? இவ்வாறு பல கேள்விகளுக்கு மத்தியில் தொடரும் நகர்ந்தது.
மாமாவிடம் மாட்டிக்கொண்ட கார்த்தி, சுந்தரி மீது வந்த கோவம் – “சுந்தரி” சீரியலில் அடுத்த திருப்பம் !
அதே போல் லட்சுமிக்கு தனது அப்பா பாரதி தான் என தெரிந்த பிறகு நமத்து போன பட்டாசு போல கதையும் புஸ்ஸுன்னு போச்சு. இதற்கிடையில் சென்னையில் ஒரு நாள் பட கதையை காப்பி அடிப்பது போல் ஒரு கதையை ஒளிபரப்பாகி பல விமர்சனங்களையும் பெற்று டி.ஆர்.பியில் இரண்டாவது இடத்தையும் பெற்றது. தற்போது மீண்டும் சீரியல் சூடு பிடிக்கும் வகையில் ப்ரோமோ ஒன்று வெளியாகி ஷாக் ஆக்கியுள்ளது. அதாவது லட்சுமியின் அப்பா யாரென தெரிந்து கொண்ட விஷயம் யாருக்கும் தெரியாது. தெளிவாக சொல்லனும்னா பாரதி தான் லட்சுமிக்கும்,ஹேமாவுக்கும் அப்பா என்ற உண்மை லட்சுமிக்கு தெரிய வந்தது குறித்து வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் வெளியாகியுள்ள ப்ரோமோவில் லட்சுமி வீட்டில் மறைத்து வைத்திருந்த பாரதி ஆஸ்பிட்டலில் இருந்த நேம் போர்டை கண்ணம்மா எதார்த்தமாக பார்த்து விடுகிறார். அதில் ’ஐ லவ் யூ அப்பா’ என எழுதி இருப்பதை பார்த்த கண்ணம்மா ஷாக் ஆகி சிறிது சிந்திப்பவராய், லட்சுமிக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டதா? என அதிர்ச்சியில் செய்வதறியாமல் நிற்கிறார். உடனே சவுந்தர்யாவுக்கு ஃபோன் செய்து நடந்ததை பற்றி கூறியதும் அவரும், வேணுவும் அதிர்ச்சியில் உறைகிறார்கள். இதனால் அடுத்து என்ன நடக்கும்? என்பது வரக்கூடிய எபிசோடுகளில் தான் தெரியும்.