கண்ணம்மா மீது பாரதிக்கு வந்த புது அக்கறை – சீரியலில் இனி வரும் புது ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இருவரும் சேர்ந்து சக்தியின் உயிரை காப்பாற்றி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த முயற்சி வெற்றிகரமாக நடக்க பாரதி, கண்ணம்மாவையும் கண்ணம்மா, பாரதியையும் மாறி மாறி புகழ்ந்து இருக்கின்றனர். இந்நிலையில் கண்ணம்மா மீது தற்போது புதிதாக அக்கறை வந்துள்ளது.
பாரதி கண்ணம்மா:
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் சக்தி உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியை பாரதி தனது மருத்துவக் குழுவுடன் கையில் எடுக்க அதற்கு கண்ணம்மாவின் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் கண்ணம்மாவின் முன்னெச்சரிக்கை குணத்தாலும், அவருடைய புத்திசாலித்தனத்தாலும் சக்திக்கு சரியான நேரத்தில் இதயம் கொண்டு வர முடிகிறது. பாரதியும் விழுப்புரத்திற்கு சென்று இதயத்தை எடுத்துக் கொண்டு வந்து மீண்டும் சக்திக்கு ஆப்ரேசன் செய்திருக்கிறார்.
அதனால் இனி சக்திக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்ற நிலைமை வர பாரதியும், கண்ணம்மாவும் இது பற்றி மாறி மாறி புகழ்ந்து கொள்கின்றனர். பாரதி, கண்ணம்மாவை புகழ்ந்து பேசுவதை பார்த்து சௌந்தர்யா சந்தோசப்படுகிறார். அதன் பின் கண்ணம்மா 2 நாட்களாக இதற்காக அலைந்து சாப்பிடாமல் இருக்கிறார். அதனால் அவருக்கு மயக்கம் வருகிறது. அப்போது நர்ஸ் பாரதியை அழைக்க பாரதி வேகமாக ஓடி வந்து கண்ணம்மாவை பார்க்கிறார்.
Exams Daily Mobile App Download
கண்ணம்மாவிற்கு தண்ணீர் கொடுத்து எழுப்பிவிட அப்போது கண்ணம்மாவிடம் உன்னுடய உடம்பை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும். உனக்கு மகள் இருக்கிறாள், அவளுடைய எதிர்காலத்தை கவனிக்க நீ நன்றாக இருக்க வேண்டும் என கண்ணம்மா மீது புது அக்கறையுடன் பேசுகிறார். அதனால் பாரதிக்கு கண்ணம்மா மீது சிறிது பாசம் வந்துள்ளது தெரிய வருகிறது. மேலும் வெண்பாவின் அம்மா கூட பாரதி கண்ணம்மா உடன் சேர்ந்து விடுவார் என சொல்லி இருக்கிறார். அதனால் இனி சீரியலில் பல திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.