கண்ணம்மா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடக்கப் போவது இதுதான் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஒரு வாரமாக பெரிய சஸ்பென்ஸ் உடன் கதை சென்று கொண்டிருக்கிறது. கண்ணம்மாவின் பிறந்தநாளுக்கு பாரதி வருவாரா உண்மை வெளியே வருமா என ரசிகர்கள் மத்தியில் பெரிய கேள்வி ஒன்று இருக்கிறது. அது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா சேருவது போல காட்டப்பட்டது ஆனால் மீண்டும் பழையபடி பாரதி வெண்பாவுடன் சேர்ந்துவிடுகிறார். கண்ணம்மா புருஷன் இல்லாமல் இருக்க பல இடங்களில் அவமானப்படுத்தப்படுகிறார். அதனால் லட்சுமியிடம் என் பிறந்தநாளுக்கு உன் அப்பா யார் என உண்மையை சொல்வேன் என சபதம் எடுக்கிறார். இந்நிலையில் பிறந்தநாள் விழாவில் அப்பா வருவதால் அதை நினைத்து லட்சுமி மிகவும் சந்தோசமாக பல ஏற்பாடுகளை செய்கிறார்.
கோபியின் விவாகரத்து பாத்திரத்தில் கையெழுத்திட்ட பாக்கியா – சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட்!
அவர் அப்பாவை நினைத்து தினமும் பல கனவுகளை காண்கிறார். லக்ஷ்மியின் கனவை ஏமாற்றக் கூடாது என்பதற்காக பாரதிக்கு போன் செய்து பிறந்தநாள் விழாவிற்கு வர வேண்டும் என கண்ணம்மா சொல்கிறார். ஆனால் பாரதி உன்னுடைய திட்டம் எல்லாம் தெரியும் என சொல்லி வரமாட்டேன் என சொல்கிறார். பின் கண்ணம்மா நேரடியாக பாரதியை பார்த்து பேச அப்போதும் வரமாட்டேன் என சொல்கிறார். லக்ஷ்மிக்கு நான் வாக்கு கொடுத்து இருக்கிறேன் என கண்ணம்மா சொல்ல, அந்த குழந்தை மனதை கெடுக்காதே என பாரதி சொல்கிறார்.
“பாக்கியலட்சுமி” சீரியலில் நீதிமன்றம் வரை சென்ற கோபி, பாக்கியா விவாகரத்து வழக்கு – ப்ரோமோ ரிலீஸ்!
அதனால் பாரதி பிறந்தநாள் விழாவிற்கு வருவாரா? கண்ணம்மா லட்சுமியிடம் சொன்ன வாக்கை காப்பற்றுவாரா என பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முக்கியமான உண்மையை கண்ணம்மா சொல்ல போவதாக சொன்னது ஹேமா பற்றியதா என நினைக்க தோன்றுகிறது. இந்நிலையில் அடுத்து வரும் எபிசோட் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் கண்ணம்மாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பாரதி வருவதாகவும், அதில் உண்மையை வேறு விதத்தில் கண்ணம்மா போட்டு உடைப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது குறித்த ப்ரோமோ வெளியாகததால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.