பாரதி, கண்ணம்மாவை சேர்த்து வைக்க களமிறங்கிய ஷர்மிளா – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
வெண்பாவின் அம்மாவான ஷர்மிளா அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறார். இவரும் வெண்பாவும் சேர்ந்து பாரதியையும் கண்ணம்மாவையும் பிரிக்க திட்டம் போடுவார்கள் என நினைத்தால் இருவரையும் சேர்த்து வைக்க வந்திருப்பதாக கண்ணம்மாவிடம் கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. கண்ணம்மா நமக்கு துரோகம் செய்யவில்லை, நாம் தான் கண்ணம்மாவின் நடத்தையை சந்தேகப்பட்டுவிட்டோம் என எப்போது பாரதி உணருவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். தற்போது பாரதி, கண்ணம்மாவை விட்டு எவ்வளவு தூரம் விலக நினைத்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டே தான் இருக்கின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியலில் கையும்,களவுமாக சிக்கிய கோபி – அடுத்து நடக்கும் திருப்பம்!
ஆனால், கண்ணம்மாவையும் பாரதியையும் பிரிக்க வெண்பா சதி திட்டம் தீட்டி கொண்டிருக்கிறார். தற்போது அமெரிக்காவில் இருந்து வெண்பாவின் அம்மா வந்திருக்கிறார். வெண்பாவின் அம்மா வெண்பாவை விட படு கேடியாக இருப்பார் என எதிர்பார்த்த நேரத்தில் வெண்பாவையே கதி கலங்க வைத்து கொண்டிருக்கிறார். பாரதி பேசுவதை பார்த்தால் அவர் உன்னை காதலிக்கவே இல்லை என்று தான் தோன்றுகிறது. பாரதியை திருமணம் செய்து கொள்ளவே ஒரு ஆண்டு டைம் கேட்டு இந்தியாவுக்கு வந்தாய். ஆனால், கிட்டதட்ட 9 ஆண்டுகள் ஆகியும் நீ அவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. அவரும் உன்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
நீ இப்போதே என்னுடன் கிளம்பி அமெரிக்காவிற்கு வா, நான் உனக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன் என கூறுகிறார். அம்மாவிற்கு முன்னால் வெண்பா வாயை திறக்கவே பயப்படுகிறார். இந்நிலையில், வெண்பாவின் அம்மா கண்ணம்மாவை சந்தித்து நான் உன்னையும் பாரதியையும் சேர்த்து வைக்கிறேன் என கூறுகிறார். பாரதியையும், கண்ணம்மாவையும் சேர்த்து வைக்கவே அமெரிக்காவில் இருந்து ஷர்மிளா வந்திருப்பார் போல. எப்படியோ பாரதிக்கு உண்மை தெரிந்து கண்ணம்மாவை ஏற்றுக்கொண்டால் போதும் என ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.