பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து என்ட்ரி கொடுக்கும் புது முகங்கள் – சீரியலில் புதிய திருப்பங்கள்!
பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து பல வருடங்கள் ஆகியும் சேராமல் இருந்த நிலையில் அதற்கு ஒரு புது வழி பிறக்க போவது போல் சீரியலில் புது புது முகங்கள் என்ட்ரி கொடுத்து வருகிறது. இவ்வாறு என்ட்ரி கொடுத்த பிக்பாஸ் பிரபல நடிகை வெண்பாவை குறித்து பாரதியிடம் சொன்ன விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் ஆனாலும் சரி, ரியாலிட்டி ஷோவானலும் சரி அதற்கெனவே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. அந்த வரிசையில் பாரதி கண்ணம்மா தொடரை ஆரம்பத்தில் ரசிகர்கள் அதிகம் விரும்பினர். ஆனால், தற்போது சீரியலின் கதை ஜவ்வாக இழுப்பதால் சீரியலுக்கு எண்டு கார்டு போட சொல்லி கலாய்த்து வருகின்றனர். இப்படி கமெண்ட் அடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், பார்வையாளர்களின் எண்ணிக்கை மட்டும் இன்று வரை குறைந்த பாடில்லை.
பாக்கியாவிடம் வசமாக சிக்கிய கோபி – அடுத்து நடக்கப்போகும் ட்விஸ்ட்!
இப்படி இருக்கையில் நேற்றைய எபிசோடில் வெண்பாவுக்கு அம்மா இருப்பது போல் சீரியல் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது.அதுமட்டுமில்லை அந்த ரோலில் நடிப்பவர் தான் பிக்பாஸ் பிரபலம், பிரபல நடிகை ரேகா. பாரதியை நேரில் காண்பது போன்று அவரது என்ட்ரி இருந்தது. இவ்வாறு ரேகா, பாரதியை காண ஹாஸ்பிட்டலுக்கு சென்று தனது மகள் வெண்பா, பாரதி திருமணம் குறித்து பேசுகிறார். இதனால் கோபமடைந்த பாரதி, வெண்பாவுக்கு போன் செய்து உடனே ஹாஸ்பிட்டலுக்கு வரச் சொல்கிறார்.
மேலும், முந்தய எபிசோடில் வெண்பா போனில் வந்த அழைப்பை கண்டு அஞ்சியதற்கு காரணமும் இவரே என்றும் தெளிவாகிறது. அந்த போனை வெண்பா எடுக்காத நிலையில் திடீரென்று அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு கிளம்பி வந்துள்ளார் வெண்பாவின் அம்மா ஷர்மிளா. இவ்வாறு ஷர்மிளா, பாரதியிடம் பேசி கொண்டிருக்கும் சமயத்தில் ஆஸ்பிட்டலுக்கு வரும் வெண்பா, தனது அம்மா பற்றிய உண்மையை பாரதியிடம் சொல்லி விட்டு, அவரை வீட்டுக்கு கூப்பிடுகிறார்.
ஆனால் வெண்பாவுடன் செல்ல மறுக்கும் ஷர்மிளா, சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதி வெண்பாவை காதலிப்பதாக சொன்ன பொய்யை பாரதியிடம் சொல்லி, அது உண்மையா? இல்லையா? என்ற கேள்வியை கேட்கிறார். அதை கேட்ட ஷாக்கில் பாரதி, வெண்பாவை பார்த்து முறைப்பது போன்ற புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இவ்வாறு என்ட்ரி கொடுக்கும் புது புது முகங்கள் சீரியலில் அடுத்தடுத்து என்ன திருப்பத்தை ஏற்படுத்த போகிறார்கள் ? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.