‘பாரதி கண்ணம்மா’ சீரியல் கதைக்களத்தில் ஏற்பட்ட மாற்றம் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியல் கதைக்களத்தில் ஏற்பட்ட மாற்றம் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
'பாரதி கண்ணம்மா' சீரியல் கதைக்களத்தில் ஏற்பட்ட மாற்றம் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் கதைக்களத்தில் ஏற்பட்ட மாற்றம் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தொடர்ந்து பல எபிசோடுகளாக பழிவாங்கும் படலமாக நகர்ந்து வந்த கதைக்களம் தற்போது ரொமான்ஸ் பக்கம் திரும்பி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான ‘பாரதி கண்ணம்மா’ தற்போது சில ஸ்வாரசியமான கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கிறது. அதாவது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பாவின் சூழ்ச்சியால் காதல் மனைவி கண்ணம்மா மீது சந்தேகப்படும் பாரதி அவரை விட்டு பிரிந்து விடுகிறார். ஆனால் 8 ஆண்டுகளுக்கு பிறகு, காலம் இவர்கள் இருவரையும் சந்திக்க வைக்கிறது. இந்த சந்திப்புகளின் போதும் முட்டி மோதிக்கொள்ளும் பாரதி, கண்ணம்மா இருவரையும் அடுத்த 6 மாத காலம் சேர்ந்து வாழவேண்டும் என கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

திருமணத்திற்கு பின் சீரியலில் நடிக்க வரும் ‘பிக் பாஸ்’ சுஜா வருணி – ரசிகர்கள் உற்சாகம்!

இதனால் கண்ணம்மா வீட்டில் வந்து தங்கி இருக்கும் பாரதிக்கு எப்படியாவது மனமாற்றம் உண்டாக வேண்டும் என்பது பாரதியின் குடும்பத்தாரின் வேண்டுதலாக இருந்து வருகிறது. ரசிகர்களும் இதனை தான் விரும்புகிறார்கள். இப்போது பாரதி, கண்ணம்மா இருவரும் வீட்டில் தனியாக இருக்க இவர்களுக்குள் மெல்ல மெல்ல காதல் அரும்புகிறது. இது தொடர்பான ப்ரோமோ ஒன்றும் தற்சமயம் வெளியாகி இருக்கும் நிலையில் இது நிஜமாகவே நடக்க வேண்டும் என பலரது எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

‘தல’ என்று அழைப்பதை நிறுத்துங்கள் – ரசிகர்களுக்கு நடிகர் அஜித் குமாரின் வேண்டுகோள்!

இந்த கதைக்களம் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களுக்கு சற்று உற்சாமக்களிக்க கூடியதாக இருந்தாலும் இந்த காட்சிகளில் கண்ணம்மாவாக ரோஷினி நடித்திருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருந்து வருகிறது. ஏற்கனவே நடிகை ரோஷினியின் விலகலுக்கு பிற்பாடு சற்று சரிவை கண்டு வந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை மீண்டும் கட்டியெழுப்பும் விதமாக தான், ரொமான்ஸ் காட்சிகளுடன் புதிய கதைக்களம் வெளியாகி வருவதாகவும், இதன் மூலம் சீரியல் குழுவினர் ஆடியன்ஸை திருப்திப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.

என்றாலும் தற்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய கண்ணம்மாவாக நடித்து வரும் வினுஷா, நடிகை ரோஷினியின் முக ஜாடையை பெற்றிருப்பதாலும், நடிகை ரோஷினிக்கு கொடுக்கப்பட்ட டப்பிங் வினுஷாவுக்கு கொடுக்கப்படுவதாலும் சீரியலை பார்ப்பதற்கு கொஞ்சம் ஸ்வாரசியமாக தான் இருக்கிறது. இதற்கிடையில் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசைக்கு ஏற்றபடி, பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் இடையே ஏற்படும் ரொமான்ஸ் காட்சிகள் மூலம் ஒரு புரிதல் உருவானால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!