பாரதிக்கு இன்னொரு திருமணம் செய்ய நினைக்கும் ஹேமா, அப்பாவை கண்டுபிடிக்க போகும் லட்சுமி – இன்றைய எபிசோட்!

0
பாரதிக்கு இன்னொரு திருமணம் செய்ய நினைக்கும் ஹேமா, அப்பாவை கண்டுபிடிக்க போகும் லட்சுமி - இன்றைய எபிசோட்!
பாரதிக்கு இன்னொரு திருமணம் செய்ய நினைக்கும் ஹேமா, அப்பாவை கண்டுபிடிக்க போகும் லட்சுமி - இன்றைய எபிசோட்!
பாரதிக்கு இன்னொரு திருமணம் செய்ய நினைக்கும் ஹேமா, அப்பாவை கண்டுபிடிக்க போகும் லட்சுமி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி அவரசமாக கிளம்பிக் கொண்டிருக்க ஹேமா பாரதிக்கு யாரும் உதவி செய்யவில்லை என நினைத்து வருத்தப்படுகிறார். பின் பாரதிக்கு இன்னொரு திருமணம் செய்து வைப்பது பற்றி பேச அதை வெண்பா கேட்டுவிடுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி காலையில் நீண்ட நேரமாகி தூங்கிவிட்டதால் பாரதி அவசரமாக கிளம்புகிறார். அப்போது ஹேமா பாரதிக்கு யாரும் உதவி செய்யாததை நினைத்து வருத்தப்படுகிறார். பின் மல்லிகா சாப்பிட வர சொல்ல, பாரதி எனக்கு நேரமாகிவிட்டது என கிளம்புகிறார். அப்போது ஹேமா பாரதிக்கு இன்னொரு கல்யாணம் செய்து கொண்டால் அந்த அம்மா அவரை நன்றாக பார்த்துக் கொள்வார் என நினைக்கிறார். வேகமாக தனது தோழிக்கு போன் செய்ய உன்னுடைய அப்பா புது அம்மாவுடன் நன்றாக இருக்கிறாரா என கேட்கிறார்.

விவாகரத்திற்காக கோர்ட் படியேறும் பாக்கியா, கோபி – அதிர்ச்சியில் குடும்பத்தினர்! மகிழ்ச்சியில் ராதிகா!

என் அப்பா மிகவும் சந்தோஷமாக இருக்கிறார் என சொல்ல, அப்பாவிற்கும் இன்னொரு திருமணம் செய்யலாம் என ஹேமா நினைக்கிறார். பின் லட்சுமி ஸ்கூலிற்கு கிளம்பிக் கொண்டிருக்க, கண்ணம்மா சரியாக படிக்க வேண்டும் என சொல்கிறார். அப்போது குமார் காய் வாங்கி வர வேறு கடையில் வாங்கியதாக சொல்கிறார். அப்போது கண்ணம்மா ஏன் என கேட்க, அவன் லக்ஷ்மியின் அப்பா பற்றி பேசுகிறார். பிறந்தநாளுக்கு வரவில்லையா என்ன பிரச்சனை என கேட்கிறான்

அதான் நான் திட்டினேன் என குமார் சொல்கிறார். உடனே கோவப்பட்ட லட்சுமி அந்த ஆளை மரியாதை இல்லாமல் பேசுகிறார். உடனே கண்ணம்மா அப்படி எல்லாம் பேச கூடாது என சொல்ல, லட்சுமி நாம சும்மா இருந்தாலும் இந்த ஊர் சும்மா இருக்காது போல என நினைக்கிறார். இனிமேல் யாரையும் நம்ப கூடாது நாமளே அப்பாவை தேட வேண்டும் என லட்சுமி நினைக்கிறார். பின் ஹேமா ஸ்கூலிற்கு போகாமல் பாரதியை பார்க்க மருத்துவமனைக்கு செல்கிறார்.

அங்கே பாரதி என்ன விஷயம் என கேட்க, உனக்கு எதுவும் வேண்டுமா என கேட்கிறார். ஆமாம் புது அம்மா வேண்டும் என ஹேமா சொல்ல, பாரதி அதிர்ச்சி அடைகிறார். என்ன பேசுகிறாய் என கேட்க, ஆமாம் இந்த வீட்டில் எல்லாரும் சந்தோசமாக இருக்கார்கள். ஆனால் உங்களை கவனிக்கமட்டும் யாரும் இல்லை என சொல்கிறார். பின் வெண்பா அதை எல்லாம் வெளியே நின்று கேட்டுக் கொண்டிருக்கிறார். பின் பாரதி அப்படி எல்லாம் பேச கூடாது என சொல்ல, என் தோழி ஒருத்தியின் அப்பா இப்படி தான் இருந்தார் இப்போது இன்னொரு அம்மா வந்ததும் சந்தோசமாக இருக்கிறார் என சொல்கிறார்.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை – ஓரிரு நாட்களில் வெளியீடு!

பாரதி நம்ம வீட்டில் எல்லாரும் என் மீது பாசமாக தான் இருக்கிறார் என சொல்ல, வெண்பா இது தான் சரியான சமயம் பாரதியை என்னை விட யாரும் நன்றாக பார்த்துக் கொள்ள முடியாது என ஹேமாவிடம் காட்ட வேண்டும் என வெண்பா நினைக்கிறார். பின் பாரதிக்கு சாப்பாடு வாங்கி கொண்டு வந்து காலையில் இருந்து சாப்பிடாமல் இருக்கிறாய் என சொல்லி சாப்பிட சொல்கிறார். ஹேமா அதை பார்த்து வெண்பா ஆண்டிக்கு அப்பா மீது இவ்வளவு பாசமா என நினைக்கிறார். ஹேமாவை பாரதி கிளம்ப சொல்ல, வெண்பா ஹேமா எதற்காக வந்தாள் என கேட்கிறார். சும்மா தான் என பாரதி சொல்ல, எதோ மறந்துறாதீங்க என சொன்னால் என கேட்க, அது சும்மா எதோ சொன்னால் என சொல்கிறார். ஹேமா மனதில் இடம் பிடித்தால் பாரதியை திருமணம் செய்து கொள்ளலாம் என வெண்பா திட்டமிடுகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!