பாரதி கண்ணம்மா’ துளசி ஷெரின் ஜானு யார் தெரியுமா? குடும்ப தடைகளை தகர்த்து சாதித்த கதை!
பாரதி கண்ணம்மா தொடரில் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷெரின் ஜானு அவரது வாழ்க்கையில் உண்மையில் கடந்து வந்த விதம் குறித்து இந்த பதிவில் காண்போம்.
ஷெரின் ஜானு:
தொடர்ந்து பல வருடங்களாக டிஆர்பி வரிசையில் முதல் இடத்தை பிடித்து உள்ள சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா தான். அந்த வகையில் பல கட்ட திருப்புமுனைகளுடன் மிகவும் விறுவிறுப்பாக கதை நகர்ந்து வருகிறது. பாரதியை விட்டு கண்ணம்மா தனியே பிரிந்து வந்த போது கண்ணம்மா நடந்த சென்றது அனைத்து தரப்புகளிலும் வேற லெவல் ட்ரோல் ஆன விஷயங்கள். அப்போது கண்ணம்மாவிற்கு உதவி செய்த துளசி கதாபாத்திரம் மிகவும் பிரபலமடைந்தது.
Vijay TV Bigg Boss 5 | எலிமினேஷனில் இருந்து தப்பித்த நிரூப், இசைவாணி! ரசிகர்களுக்கு ஷாக் அப்டேட்!
தனது குடும்பத்தின் எதிர்ப்பை மீறி சீரியலில் நடித்து வரும் நடிகை ஷெரின் ஜானு தற்போது தனக்கென தனி அடையாளத்தை பெற்றுள்ளார். பாரதி கண்ணம்மா வாய்ப்பு ஷெரீனுக்கு எளிதாக விடவில்லை. ஷெரின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை ஜெயின் பள்ளி மற்றும் ஜெயின் காலேஜில் முடித்தார். லயோலோ கல்லூரியில் மேற்படிப்பை முடித்தார். டிக் டாக் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி வந்த ஷெரின், ஆர்வத்தின் காரணமாக பல ஆல்பம் பாடல்களில் நடித்து வந்தார்.
‘உள்ளம் கொள்ளை போகுதடா’ சீசன் 2 – அடுத்த வாரம் முதல் ஒளிபரப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்!
இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த இவருக்கு குடும்பத்தினர் நடிப்பதற்கு மிகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இவரது மட்டும் இவருக்கு ஆதரவாக இருந்துள்ளார். முதலில் கலர்ஸ் தமழில் ஒளிப்பரப்பான திருமணம் சீரியல் அறிமுகமான ஷெரின் அந்த சீரியலில் சித்துவின் காதலியாக நடித்திருப்பார். சன் டிவியில் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் கமலா பாத்திரத்தில் நடிக்காய் குஷ்புடன் சேர்ந்து நடித்துள்ளார். துளசி தொடக்கத்தில் கடுமையான மன உளைச்சலை சந்தித்து தற்போது துணை நடிகையாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.