விறுவிறுப்பான காட்சிகளுடன் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் சீசன் 2 – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ”பாரதி கண்ணம்மா” சீரியல் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரிந்து வாழும் பாரதி மற்றும் கண்ணம்மா நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இணைந்து வாழ்ந்து வரும் நிலையில் சீசன் 2 தொடங்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் 600 எபிசோடுகளையும் கடந்து வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிறது. ஒரு படிக்காத அப்பாவி பெண்ணை காதலித்து திருமணம் செய்யும் பாரதி, கண்ணம்மா மீது சந்தேகம் கொண்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கண்ணம்மாவிற்கு பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு குழந்தையை கண்ணம்மாவிற்கு தெரியாமல் சௌந்தர்ய லட்சுமி எடுத்து வளர்த்து வந்தார். அந்த குழந்தையை ஆசிரமத்தில் இருந்து எடுத்து வந்தாக பாரதியிடம் கூறி அவரது வீட்டில் தனது குழந்தையாகவே வளர்த்து வருகின்றனர்.
புது கண்ணம்மாவை மிரட்டுவதற்கு தயாரான வெண்பா – ஃபரீனாவின் ரீஎன்ட்ரி! ரசிகர்கள் உற்சாகம்!
கண்ணம்மாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் உனக்கு பிறந்தது இரண்டு குழந்தை என கூற அந்த குழந்தை ஹேமா தான் என பின்பு அறிந்தார். கண்ணம்மா தனது குழந்தை ஹேமாவை தன்னிடம் இருந்து பிரித்து விடுவாள் என்ற பயத்தில் விவாகரத்து செய்ய பாரதி முடிவு செய்தார். நீதிமன்றத்தில் இருவரும் 6 மாத காலம் இணைந்து வாழ வேண்டும் என கூறிய நிலையில் கண்ணம்மா மற்றும் பாரதி இருவரும் ஒரே வீட்டில் தற்போது வசித்து வருகின்றனர். வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரினா தனது பிரசவம் முடிந்து தற்போது மீண்டும் சீரியலில் இணைய உள்ளார்.
Vijay TV Bigg Boss 5 Promo | பஸ் டாஸ்கில் வாந்தி எடுக்கும் போட்டியாளர்கள் – ரசிகர்கள் அதிர்ச்சி!
வெண்பா தற்போது சிறையில் இருப்பதால், மாயாண்டி குடும்பத்தை கெடுக்கும் பணியில் இறங்கியுள்ளார். ஒன்றாக ஒரே வீட்டில் இருந்து இருவரும் அடிக்கும் லூட்டிகள் ரசிகர்களால் அதிகம் ரசிக்கதக்கதாக உள்ளது. பாரதி கண்ணம்மா சீரியலிற்கு பெரிய அளவில் ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடங்கபடுமா என ரசிகர்களிடையே பெரும் அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.