“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து விலகிய பின் ரோஷினி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி தற்போது சீரியலில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பிடித்தமான இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் TRPயில் முன்னிலையில் இருக்கும் சீரியல் ஆகும். இந்த சீரியலில் நடிக்கும் பாரதி கண்ணம்மா ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். பாரதி கண்ணம்மா சேர்ந்து வாழ வில்லி வெண்பாவின் சதியால் இருவரும் பிரிந்து வாழுகின்றனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறி பல மணி நேரம் நடந்தது எல்லாம் சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் 600 எபிசோடுகளுக்கு மேல் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி நடித்து வந்தார்.
ப்ரஜின், சரண்யா நடிப்பில் விஜய் டிவி ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!
அவருடைய நிஜ பெயரை மறந்து கண்ணம்மாவாக அவர் தனது எதார்த்தமான நடிப்பு மூலம் பெரிதும் பேசப்பட்டார். நன்றாக போய் கொண்டிருந்த இந்த சீரியலில் இருந்து ரோஷினி ஹரிபிரியன் திடீரென விலகுவதாக அறிவித்தார். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் சீரியலில் இருந்து விலகிய நிலையில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்க வேண்டும் என தற்போது வரை ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா நடித்து வருகிறார்.
கைக்குழந்தையுடன் ‘பாரதி கண்ணம்மா’ சூட்டிங்கிற்கு வந்த வெண்பா – ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் சீரியலில் இருந்து விலகிய பின்னர் பல படங்களில் ரோஷினி நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பற்றி எந்தவித தகவலும் வெளியாகாமல் இருந்தது. மேலும் தனக்கு இதனை நாள் ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி என அவர் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதை தொடர்ந்து தற்போது தனக்கு பிடித்தமான இடமான ஊட்டிக்கு சென்று சென்று தனது மகிழ்ச்சியான தருணங்களை அவர் வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோ ரோஷினி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.