பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகி விஜய் டிவியில் மீண்டும் என்ட்ரி கொடுத்த ரோஷினி – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மாவாக வாழ்ந்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ரோஷினி. அவர் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் களமிறங்கி இருப்பதால் அது குறித்து தனது மகிழ்ச்சியை இன்ஸ்டாவில் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்து இருக்கிறார்.
நடிகை ரோஷினி:
பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது டாப் சீரியல் வரிசையில் இருக்கிறது. இந்த சீரியலில் முன்னதாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் ரோஷினி. அவரை ரோஷினி என்று சொல்வதை விட, கண்ணம்மா என்று சொன்னால் தான் மக்களுக்கு தெரியும். அந்த அளவிற்கு அவர் கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார். ஆனால் அவர் தனிப்பட்ட காரணங்களால் சீரியலில் இருந்து விலகினார். இந்நிலையில் அவரின் இந்த முடிவால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.
பாக்கியாவை எதிர்த்து ராதிகாவை திருமணம் செய்து கொண்ட கோபி – அதிர்ச்சியில் குடும்பத்தினர்!
ரோஷினி தனது ரசிகர்களை மகிழ்விக்கும் விதத்தில் தற்போது விஜய் டிவியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3-ல் ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கிறார். இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியானது. அதில் உங்களுக்கு சமைக்க தெரியுமா என நடுவர்கள் கேள்வி கேட்டதற்கு எனக்கு பிடித்தவர்களுக்கு சமைக்க பிடிக்கும் என அவர் அழகாக பதில் அளித்து இருக்கிறார். மேலும் அவரை இதுவரை கண்ணம்மாவாக பார்த்த ரசிகர்கள் இனி ரோஷினியாக பார்த்து ரசிக்க இருக்கின்றனர்.
DNA டெஸ்ட் எடுத்து ஒன்று சேரும் ஜோடி, புற்றுநோயால் பாதிக்கப்படும் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
மக்களின் பேராதரவை பெற்ற இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் தனுஷ் நடித்து தேசிய விருது பெற்ற அசுரன் படத்திலும், ராட்சசன் படத்திலும் நடித்த நடிகை அம்மு அபிராமி மற்றும் வித்யூலேகா, மனோபாலா ஆகியோர் களமிறங்கி இருக்கின்றனர். ரோஷினி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் குக் வித் கோமாளி இரண்டு சீசன்களும் எனக்கு மிகவும் பிடித்தது. நான் நினைத்து கூட பார்க்கவில்லை, எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் சந்தோசம் மற்றும் நன்றி என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.