கண்ணம்மாவால் தான் குழந்தை உயிர் பிழைத்தது என பெருமிதத்துடன் கூறிய பாரதி – ப்ரோமோ ரிலீஸ்!
கண்ணம்மா சரியான நேரத்தில் பிளான் செய்ததால் தான் குழந்தைக்கு சரியான நேரத்தில் இதயத்தை பொறுத்த முடிந்தது. கண்ணம்மாவால் மட்டுமே இந்த குழந்தை தற்போது உயிரோடு இருக்கிறது என கண்ணம்மாவை பாரதி புகழ்ந்து பேசும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. தற்போது பாரதியும், கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் தான் வேலை பார்த்து வருகின்றனர். சென்னையில் உள்ள ஒரு குழந்தைக்கு விழுப்புரத்தில் இருந்து இதயத்தை ஹெலிகாப்டரில் கொண்டு செல்ல பிளான் செய்திருந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக மழை பெய்ததால் ஹெலிகாப்டரின் உதவியோடு குழந்தைக்கு இதயத்தை கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது.
இயற்கையாகவே கருவுறும் முல்லை – மகிழ்ச்சியில் குடும்பத்தினர்! பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த ட்விஸ்ட்!
ஆனால், ஒன்றரை மணி நேரத்திற்குள் குழந்தைக்கு இதயத்தை அனுப்பி வைத்தால் மட்டுமே குழந்தையால் உயிர் பிழைக்க முடியும். சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு ஒன்றரை மணி நேரத்திற்குள் செல்ல வாய்ப்பே இல்லை என மருத்துவர்கள் கூறி விடுகிறார்கள். குழந்தையின் பெற்றோரும் இனி குழந்தையை காப்பாற்றவே முடியாது என்கிற மன நிலைமைக்கு வந்து விட்டனர். இந்த சமயத்தில் கண்ணம்மா ஏற்கனவே ஒரு பிளான் செய்தபடி அந்த பிளானை செயல்படுத்த ஆரம்பித்தார். அதாவது உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் இதயத்தை கொண்டு செல்ல ஏற்பாடு செய்கிறார்.
Exams Daily Mobile App Download
இதன் பின்பு, கண்ணம்மா கூறியபடி ஒன்றரை மணி நேரத்திற்குள் ஆம்புலன்ஸ் உதவியுடன் இதயத்தை கொண்டு செல்கின்றனர். அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது. அனைவரிடமும் குழந்தையின் உயிரை காப்பாற்றியது கண்ணம்மா தான், சரியான நேரத்தில் சற்றும் யோசிக்காமல் மற்றொரு பிளான் செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளார் என கூறி பாரதி பெருமிதம் கொள்கிறார். பாரதி கண்ணம்மாவை புகழ்ந்து பேசியதை பார்த்து குடும்பத்தினர்கள் அனைவரும் மகிழ்ச்சியடையும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.