கண்ணம்மாவை விட்டு பிரிய 3 கோடி ரூபாய்க்கு பேரம் பேசும் பாரதி, கண்ணம்மாவின் பதிலடி – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது கண்ணம்மாவை விட்டு நிரந்தரமாக பிரிய நினைக்கும் பாரதி, அதற்காக கண்ணம்மாவுக்கு 3 கோடி தருவதாக கூறி பேரம் பேசுவது போல புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.
பாரதி கண்ணம்மா
ஒவ்வொரு நாளும் பல்வேறு புதிய திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஸ்வாரசியமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது, தவிர்க்க முடியாத சூழ்நிலையால் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக சேர்ந்து வாழ ஆரம்பிக்க, எப்படியாவது கண்ணம்மாவிடம் இருந்து பிரிந்து விட வேண்டும் என்பதில் பாரதி உறுதியாக இருந்து வருகிறார். அதனால் கண்ணம்மாவை வெறுப்பேற்றி வீட்டை விட்டு செல்ல நினைக்கும் பாரதிக்கு எப்படியோ கண்ணம்மா மீது பரிதாபம் வருகிறது.
படப்பிடிப்பு தளத்தில் ஜாலியாக விளையாடிய “செம்பருத்தி” சீரியல் நட்சத்திரங்கள் – வைரல் வீடியோ!
அதனால் கண்ணம்மாவின் மொத்த வாழ்க்கைக்கும் தேவையான பணத்தை தர முன் வரும் பாரதி அதற்காக கண்ணம்மாவிடம் ஒரு நிபந்தனை வைக்கிறார். அதாவது கண்ணம்மா மற்றும் லட்சுமியின் எதிர்காலத்திற்கு தேவையான 3 கோடி ரூபாய் பணத்தை கொடுப்பதாகவும், அந்த பணத்தை எடுத்துக்கொண்டு எங்கேயாவது கண் காணாத இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கண்ணம்மாவிட டீல் பேசுகிறார் பாரதி. பாரதியின் இந்த எண்ணத்தை புரிந்து கொண்ட கண்ணம்மா அவரது டீலுக்கு ஓகே சொல்கிறார்.
இப்போது கண்ணம்மாவின் பதிலால் சந்தோஷப்படும் பாரதிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, நீங்கள் கொடுக்கும் 3 கோடி ரூபாய் பணத்தை நான் வாங்கி கொள்கிறேன். ஆனால் அந்த பணத்தை என்னுடைய புருஷனாக தர வேண்டும் என கண்ணம்மா, பாரதிக்கு பதிலடி கொடுக்கிறார். கண்ணம்மாவின் இந்த பதிலை சற்றும் எதிர்பாராத பாரதி திகைத்து நிற்பதை போல வெளியான புதிய ப்ரோமோ ஒன்று தற்போது பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.