கண்ணம்மாவிடம் நெருக்கமாகும் பாரதி, அறந்தாங்கி நிஷாவின் சூப்பர் பிளான் – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து வாழ்ந்து வர பாரதிக்கு கண்ணம்மா மீது அனுதாபம் வருகிறது இந்நிலையில் அடுத்த எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா ப்ரோமோ:
பாரதி கண்ணம்மா சீரியலில், நீதிமன்ற உத்தரவின் படி இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் சௌந்தர்யா வடிவுக்கரசி என்ற வக்கீலை அனுப்பி இருவரும் பிரிந்துவிடாமல் இருக்க பல திட்டங்களை செய்கிறார். இன்றைய எபிசோடில் கண்ணம்மா படும் கஷ்டங்களை பார்த்த பாரதி அவருக்கு உதவி செய்ய போகிறார். ஆனால் அவருடைய மனசாட்சி அவள் துரோகம் செய்தவள் என தடுக்கிறது. அதனால் அவர் திரும்பி வருகிறார்.
தமிழ் சின்னத்திரையில் “மக்கள் நாயகி” விஜே சித்ரா செய்த சாதனை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
மறுபக்கம் ஹேமா லக்ஷ்மியிடம் குடும்பம் பற்றி கேட்டு கஷ்டப்படுத்துகிறார். அதனால் அகில் லட்சுமியிடம் உண்மையை சொல்லிவிடுவோம் என சொல்கிறார். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் டாக்டர் பாரதி ஏரியாவில் இருக்கும் பாட்டிகளுக்கு வைத்தியம் பார்க்கிறார். அதில் பூ விற்கும் பாட்டி ஒருவர் நீ வைத்தியம் பார்த்து எனக்கு உடல்நிலை நன்றாக இருக்கிறது என்னிடம் உனக்கு கொடுக்க காசு இல்லை.
அதனால் இந்த பூவை வைத்துக் கொள் என சொல்கிறார். பாரதி வேண்டாம் என சொல்ல அவர் கட்டாயப்படுத்தி கொடுக்கிறார். பின் பாரதி கண்ணம்மாவிற்கு தெரியாமல் பூவை டேபிள் மீது வைத்துவிட்டு செல்கிறார். அதை பார்த்த வடிவுக்கரசி கண்ணம்மாவை உசுப்பேத்தி பூவை வைக்க சொல்கிறார். கண்ணம்மா சந்தோசத்தில் பூ வைத்துக் கொள்ள அதை பார்த்த பாரதி எப்படி சொல்வது என தெரியாமல் இருக்கிறார். மேலும் பாரதியை உசுப்பேத்த வடிவுக்கரசி முருங்கைக்காய் போட்ட சாப்பாடுகளை செய்து கொடுக்கிறார். கண்ணம்மா வேண்டாம் வேண்டாம் என சொல்ல பாரதி சாப்பிட்டு விடுகிறார்.
ஜீ தமிழ் ‘பூவே பூச்சூடவா’ ரேஷ்மா & மதன் திருமண டீசர் வீடியோ- குவியும் வாழ்த்துக்கள்!
இரவு இருவரும் தூங்க செல்ல பாரதிக்கு முருங்கைக்காய் சாப்பிட்டது வேலை செய்கிறது. மேலும் கண்ணம்மாவின் பூ வாசனை வேற அவர் அருகில் இழுக்க பாரதிக்கு பழைய நினைவுகள் வருகிறது. உடனே கண்ணம்மா அருகில் பாரதி செல்ல, அந்த பாழா போன மனசாட்சி மீண்டும் வருகிறது. அவள் உனக்கு துரோகம் செய்தவள் என சொல்ல, பாரதி மீண்டும் கோபப்படுகிறார்.