விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலுக்கு என்ன ஆச்சு? கடுப்பில் கொந்தளித்த ரசிகர்கள்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் முக்கிய பங்கு வகிக்கும் பாரதி மற்றும் கண்ணம்மாவின் குடும்ப வாழ்க்கையை பற்றியே 700 எபிசோடுகளாக காட்டப்பட்டது. ஆனால் தற்போது கதைக்களம் வேற மாதிரி கொண்டு செல்வதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். மேலும் கதையில் சில புதுமைகள் வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் தொடங்கப்பட்டது முதல் காதல், குடும்பம், அக்கா தங்கை பாசம், கணவன் மனைவி பாசம் என காட்டப்பட்டது. அதன் பின் குழந்தையை வைத்துக் கொண்டு தனி ஆளாக ஒரு பெண் படும் கஷ்டங்களை பற்றி கதை கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் அப்பா இல்லாமல் குழந்தை படும் கஷ்டத்தை பற்றி அடுத்தகட்ட கதையில் காட்டப்பட்டது. இறுதியாக ஏதாவது ஒரு உண்மையை வெளியே கொண்டு வந்தால் மட்டுமே கதையில்சுவாரஸ்யம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
சன் டிவி “சுந்தரி” சீரியலில் அரங்கேற இருக்கும் பெரிய திருப்பம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
அதன் பின் இரண்டு புது கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அதனால் எதாவது உண்மை வெளியாகி பாரதி கண்ணம்மா சேர்வார்களா என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அதனால் எதுவுமே நடக்கவில்லை. ஆனால் தற்போது கதையில் பெரிய மாற்றம் வந்துள்ளது. பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலை பார்க்க அங்கே ஒரு குழந்தைக்கு ஆபத்து வருவது போலவும், உடனே அறுவை சிகிச்சை செய்ய கண்ணம்மாவும் பாரதியும் போராடுவது போன்றும் காட்டப்பட்டிருந்தது.
Exams Daily Mobile App Download
அனைத்தையும் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அதற்கும் அடுத்தபடியாக சென்று சென்னையில் ஒரு நாள் படத்தின் கதையை மொத்தமாக காப்பி செய்து எபிசோடுகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏதாவது உண்மை வெளியே வந்து கதையில் மாற்றம் வருமா? என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த காப்பி கதை பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். இதனால் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் கடுப்பில் இருந்து, எப்போடா சீரியலுக்கு எண்டு கார்டு போடுவீங்க என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.